Tamilnadu

News May 13, 2024

கரூர் மாவட்டத்தில் மழை

image

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு 7 மணி வரை கரூர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 13, 2024

அணைக்கட்டு அருகே அபூர்வ நிகழ்வு

image

அணைக்கட்டு வட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த பாக்கம் கிராமத்தில் உத்திர காவிரி ஆற்றங்கரையில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த உமா மகேஸ்வரி கைலாய நாதர் திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் இன்று (மே 13) சூரிய ஒளி நேரடியாக சிவபெருமான் மீது விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதையடுத்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

News May 13, 2024

கடன் தொல்லை: மகளை கொன்று தம்பதி தற்கொலை

image

மாதவரம் பால் பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (40). இவர் காதி கிராப்ட் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி லோகேஸ்வரி (35). இவர்களது மகள் காவியா (13). இதற்கிடையில் ஜெகநாதன் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை ஜெகநாதன் தனது மகன் காவியாவை கொலை செய்து விட்டு, மனைவி லோகேஸ்ரியுடன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News May 13, 2024

ராமேஸ்வரத்தில் நாளை மின்தடை அறிவிப்பு

image

ராமேஸ்வரம் துணை மின் நிலையம் ராமநாதசுவாமி கோயில் மின் பாதையில் நாளை வேலை நடைபெற உள்ளது. இதனால் காட்டு பிள்ளையார் கோவில் தெரு, தீட்சிதர் கொல்லை, பெரியார், சிவகாமி நகர், சல்லிமலை, லட்சுமண தீர்த்தம், சீதா தீர்த்தம், ராமர் தீர்த்தம், முருங்கை வாடி, தம்பியான் கொல்லை, வெண்மணி நகர், போஸ்ட் ஆபிஸ் லைன், பணிமனை
பகுதிகளில் மே 14 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 13, 2024

நீலகிரி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் ( இன்று இரவு 7 மணி வரை ) நீலகிரி மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 13, 2024

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு 

image

ஆண்டிமடத்தில் அரசு பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்க்க வலியுறுத்தல் ஆண்டிமடம், சிலுவைச்சேரி குடியிருப்பு பகுதிகளில் அரசின் நல திட்டங்களை பற்றி பெற்றோர்களிடம் எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் அருமைராஜ், தலைமையாசிரியை சசிகலா, ஆசிரியர் பயிற்றுனர் ரமேஷ், அந்தோணியம்மாள் உ. ஆ, அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டு  விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

News May 13, 2024

காஞ்சிபுரம் கலெக்டர் அட்வைஸ்

image

காஞ்சிபுரத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாக செல்லும் இளைஞர்கள், ஒன்றிய அரசில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம், வேலைக்கான விசா, முறையான பணி, ஒப்பந்தம், என்ன பணி? என்ற விவரங்களைச் சரியாகவும், முழுமையாகவும், தெரிந்து கொண்டும், அவ்வாறான பணிகள் குறித்து உரிய விவரங்கள் தெரியாவிட்டால், தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சிய அறிவுரை வழங்கியுள்ளார். 

News May 13, 2024

ஈரோடு அருகே விபத்து: ஒருவர் பலி 

image

கோபி ல.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மனைவி பானுப்பிரியா. இவர் தனது மகனுடன் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் கோபி ஜீவா செட் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் மோதியதில் பானுப்பிரியாவும், ஜெஸ்வினும் படுகாயமடைந்தனர். கோபி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் பானுப்பிரியா உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 13, 2024

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழை

image

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் ( இரவு 7 மணி வரை ) ராணிப்பேட்டை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 13, 2024

திண்டுக்கல் அருகே விபத்து: ஒருவர் பலி

image

திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா புதுக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட காட்டம்பட்டியை சேர்ந்த வீரப்பன் மகன் அர்ஜுன் (20 ) என்பவர் இன்று கல்பட்டி பெட்ரோல் பங்க் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது திண்டுக்கல் நோக்கி வந்த கனரக வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

error: Content is protected !!