India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை, ஆழ்வார் புரத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் முகமது அலி ஜின்னா(31). இவர் தனியார் நிதி நிறுவனத்தில், லோன் பெற்று ஆட்டோ வாங்கி ஓட்டி வந்துள்ளார்.
நேற்று இவர் தனது வீட்டு முன் ஆட்டோவை நிறுத்தி இருந்தார். அப்போது, அவரது ஆட்டோவில் இருந்த பேட்டரியை மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்த இப்ராஹிம் (42) என்பவர் திருடிச் சென்றார். மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இப்ராஹிமை கைது செய்தனர்.
திண்டுக்கல்: விளையாட்டு விடுதிகளில் சோ்வதற்கான திண்டுக்கல் மாவட்ட அளவிலான தோ்வு முகாமில் 136 மாணவர்கள் கலந்து கொண்டனா். மாணவா்களின் தகுதி திறன் குறித்த விவரங்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு இணைய வழியில் அனுப்பப்பட்டுள்ளது. தோ்வு செய்யப்படும் மாணவா்களுக்கு, இதுகுறித்த தகவல் நேரடியாக கைப்பேசி மூலம் தெரிவிக்கப்படும் என விளையாட்டுத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் வளர்க்கும் நாய்களை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாய்களை வளர்ப்பவர்கள் உரிய உரிமம் பெற வேண்டும். நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட உள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இதற்கான பணிகள் ஜூன் மாதத்தில் தொடங்கப்படும் என மாநகராட்சி நல அலுவலர் மருத்துவர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
செக்கானூரணி அரசினர் தொழிற்பயற்சி நிலையத்தில் பிட்டர், டர்னர், எலக்ட்ரிசியன், குளிர்பதனம், தட்பவெப்பநிலை கட்டுபடுத்துதல், வெல்டர் உள்ளிட்ட தொழிற்பிரிவுகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பயிற்சியில் சேர விருப்பமுள்ள 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நாளை முதல் வரும் 07.06.2024 வரை நேரடியாக வந்து விண்ணப்பிக்க மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் 10 நாள் வைகாசி விசாகப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முதல் நாளான செவ்வாய்க்கிழமை (மே.14) அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 5.30 மணிக்கு கணபதி ஹோமம், காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் திருக்கொடியேற்றம் நடைபெறுகிறது.
நெல்லை மாவட்டத்தில் கோடை மழை பெய்வதால் மின்வாரியம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கோடை மழை இடி மின்னலுடன் பெய்யும் போது வீட்டில் மிக்ஸி, கிரைண்டர்,கணினி, செல்போன் போன்ற மின் சாதனங்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் மின் கம்பங்கள், மின் பெட்டிகள், மின் மாற்றிகள் ஆகியவற்றை தொட வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு இன்று பாளை மண்டல மேற்பார்வை மின் பொறியாளர் செல்வராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
திருச்சியில் கடந்த 2.5.2024ம் தேதி ஒரு பெண்ணின் வீட்டிற்கு சென்று ஆபாசமாக திட்டி அவரின் வீடு மற்றும் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்திய வழக்கில் ரவுடி வெங்கடேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.மேலும் விசாரணையில்,
குற்றவாளி மீது 5 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்ததால் அவரை இன்று குன்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவிட்டார்.
வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் மக்களவை தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலெட்சுமி இன்று (மே.13) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் இரவு வந்து மேற்கொள்ளும் காவல் அதிகாரிகளின் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. விபத்து அவசர காலங்களில் பொதுமக்கள் இந்த எண்களில் போலீஸ் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை திருவள்ளூர் மாவட்ட காவல் தலைமை அதிகாரி வெளியிட்டுள்ளார்.
வாய்ப்புகள் நிறைந்த இந்த உலகத்தில் தங்களுக்கான துறையை சரியான முறையில் தேர்வு செய்து அதில் முழு கவனம் செலுத்தி தங்களது எதிர் கால பாதையினை நல்ல முறையில் அமைத்துக் கொள்ள வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா இன்று நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் பாய்ச்சலில் நடைபெற்ற நான் முதல்வன் நிகழ்ச்சியின் போது மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார். நாமக்கல் எஸ்பி ராஜேஷ்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.