India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. அதன் விவரம் வருமாறு, அரியலூர் 2.மி.மீ, திருமானூர் 4.2 மி.மீ, ஆண்டிமடம் 2 மி.மீ என மாவட்டத்தில் மொத்தம் 8.2 மில்லி மீட்டர் என்ற அளவில் மழை பதிவாகியுள்ளது மற்ற இடங்களான தா.பழூர், செந்துறை, ஜெயங்கொண்டம் ஆகிய ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்துள்ளது.
திருப்பத்தூர் குண்டு ரெட்டியூரை சேர்ந்த காளிதாஸ். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சரவணனும் இணை பிரியா நண்பர்கள் ஆவர். இந்நிலையில் காளிதாஸின் மனைவிக்கும் சரவணனுக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதனை காளிதாஸ் கண்டித்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு சரவணனும், அவரது மனைவியும் தனிமையில் இருப்பதை கண்ட காளிதாஸ் ஆத்திரத்தில் சரவணனை கொலை செய்துள்ளார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் திருக்கோயில் சிரசு ஊர்வல திருவிழா இன்று (மே 14) செவ்வாய் கிழமை நடைபெற உள்ளதால் இதை முன்னிட்டு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவதையொட்டி வேலூர் மாவட்டம் முழுவதும் ஒரு நாள் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட மாநில கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கு இணையதளம் www.skilltraining.tn.gov.in வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட சர்வதேச பயணிகளின் எண்ணிக்கையில் 23-24-ம் நிதியாண்டில் 13.05 லட்சமாக இருந்தது.இதுதற்போது 15.1 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுவே 22-23-ம் ஆண்டு காலகட்டத்தில் 3.80 லட்சமாக இருந்தது.23-24 நிதியாண்டில் திருச்சி விமான நிலையத்தில் பயணிகளின் ஒட்டுமொத்த அதிகரிப்பு 16.5% ஆக சாதனை படைத்து இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
சித்தாமூர் அருகே அகத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தனகோடி. நேற்று, வீட்டின் வெளியே அமர்ந்திருந்த போது, எதிர்பாராத விதமாக விஷப்பாம்பு தனகோடியின் வலது கையில் கடித்தது. உறவினர்கள் தனகோடியை மீட்டு, மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, தனகோடியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, சித்தாமூர் போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 1,07,435 ஹெக்டேரில் நெல் சாகுபடி நடைபெறும் நிலையில் 38,441 ஹெக்டேரில் குறுவை சாகுபடி இந்த ஆண்டு நடைபெறவுள்ளது.தற்போது முற்பட்ட குறுவை நெற்பயிர்கள் சுமார் 30 முதல் 40 நாள் பருவத்தில் விளைந்துள்ள நிலையில் விவசாயிகள் களைக்கொல்லி தெளிக்கும் பணியில் மும்முரமாக விவசாயிகள் இன்று ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் பாலியல் தொந்தரவு செய்த நிலையில், மகளிர் காவல் துறையினர் மே 12ம் தேதி இரவு போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் மேலும் ஒரு 13 வயது சிறுமி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. சம்பவத்தில் வேறு யாருக்கு தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி நேற்று(மே 13) வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மாதாந்திர பராமரிப்பு தொகை, வங்கி கடன் திருமண உதவித்தொகை போன்றவைகள் பெறுவதற்கு இணையதளம் மூலமே விண்ணப்பிக்கலாம். இதற்காக தாலுகா அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தியுள்ளார்.
பெரம்பலூர் ஆயுதப்படை மைதானத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் இன்று காலை 10- மணியளவில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார். இதுகுறித்து பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.