Tamilnadu

News May 14, 2024

ஜூன் 12-ல் மேட்டூர் அணையை திறக்கக் கூடாது

image

வரும் ஜூன் 12- ல் மேட்டூர் அணையை திறக்கக் கூடாது என தமிழக அரசுக்கு மூத்த வேளாண் வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது. “ஒருபோக சாகுபடிக்காக வரும் ஆக.15 – ல் மேட்டூர் அணையைத் திறக்க வேண்டும்; தற்போது ஆழ்துளை கிணறு மூலம் 75,000 ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி செய்யலாம்; குறுவை சாகுபடிக்கு மாற்றாக எள், உளுந்து ஆகிய பயிர்களை விவசாயிகள் பயிரிடலாம்” என பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 14, 2024

இறைச்சி கடைகளுக்கு கட்டுப்பாடு

image

ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கும் இறைச்சி கடைகளில் உள்புற சுவற்றில் கட்டாயம் டைல்ஸ் போட்டு இருக்க வேண்டும். இறைச்சி கடைகளில் தூசி படியாமல் சூரிய ஒளி படாமல் இறைச்சிகள் விற்கப்படவேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை நகராட்சி ஆணையாளர் சந்தானம் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தியுள்ளார். சுற்றறிக்கை கிடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவித்துள்ளார். 

News May 14, 2024

பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 30 ஆண்டுகள் சிறை

image

சுண்டக்குடியை சேர்ந்த விக்னேஷ்குமார் கடந்த 2021 இல் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் பெற்றோர் கீழப்பழுவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விக்னேஷ் குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் அவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.30000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

News May 14, 2024

பெண்களுக்கு இலவச ஆரி எம்பிராய்டரி பயிற்சி

image

ஈரோடு கொல்லம்பாளையம் கரூர் சாலையில் உள்ள ஆஸ்ரம் பள்ளி வளாகத்தில் கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பெண்களுக்கான இலவச ஆரி எம்பிராய்டரி பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியானது வருகின்ற 20 ஆம் தேதி முதல் துவங்கி ஜூன் மாதம் 24ஆம் தேதி வரை 30 நாட்களுக்கு நடைபெற உள்ளது. பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 14, 2024

நெல்லை: நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை (மே.15) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபமாக தமிழகத்தில் ஆங்காங்கு மழைப் பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 14, 2024

தேனி: நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 22 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.தேனி மாவட்டத்தில் நாளை (மே.15) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழைப் பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 14, 2024

புதுச்சேரி: விரட்டி விரட்டி கடித்த நாய்கள்

image

நெல்லிதோப்பு தொகுதிக்குட்பட்ட சுப்ரமணி கோயில் வீதியில் இன்று அதே பகுதியை சேர்ந்த கர்த்திகேயன், வேல்முருகன் நகரை சேர்ந்த சிவா, டான் பஹதூர், கண்ணன், உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்டவர்களை தெருநாய் கடித்துள்ளது. காயமடைந்தவர்கள் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பொது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். தெருநாய்களை பிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

News May 14, 2024

திண்டுக்கல்: நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 22 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (மே.15) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழைப் பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 14, 2024

தூத்துக்குடி : நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 22 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (மே.15) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழைப் பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 14, 2024

விருதுநகர்: நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் நாளை (மே.15) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபமாக தமிழகத்தில் ஆங்காங்கு மழைப் பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!