Tamilnadu

News August 19, 2025

ஈரோட்டில் 1600 விநாயகர் சிலை வைக்கப்படும்

image

ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி வரும் 27ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதனையொட்டி ஆண்டுதோறும் இந்து அமைப்புகள் மட்டுமின்றி தனியார் சார்பிலும், சில அமைப்புகள் சார்பிலும், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை
வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம், கடந்தாண்டை போலவே இந்தாண்டும்
1,600 விநாயகர் சிலைகள் வைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

News August 19, 2025

தரிசு நிலங்களை விளைநிலமாக மாற்ற ரூ.9,600 மானியம்

image

கலைஞரின் அனைத்து கிராம் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் (KAVIADP) திட்டத்தில் தரிசு நிலங்களை விளை நிலமாக மாற்றும் விவசாயிக்கு எக்டருக்கு ரூ.9,600 மானியம் வழங்கப்படுவதாக விராலிமலை வட்டார உதவி வேளாண் இயக்குநர் ப.மணிகண்டன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும், விவரங்களுக்கு விரிவாக்க மையம் (அ) உதவி வேளாண் அலுவலர்களை விவசாயிகள் தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளார்.

News August 19, 2025

திருப்பத்தூர்: மோட்டார் சைக்கிள் விபத்தில் கால் முறிவு

image

ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் இவர் நேற்று தனது ஸ்கூட்டரில் பொன்னேரி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மண்டலவாடி கூட்டு ரோட்டில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டர் மீது மோதியதில் ஐயப்பன் கால் முறிவு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீஸ் விசாரித்து வருகின்றது.

News August 19, 2025

நாகையில் இரண்டாம் கட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

image

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று(ஆக.19) நடைபெற உள்ளது. இம்முகமானது அகரகடம்பனூர், எரவாஞ்சேரி மற்றும் திருக்கண்ணங்குடி ஆகிய ஊராட்சிப் பகுதிகளுக்கு இரண்டாவது கட்டமாக அகரகடம்பனூர் கிறிஸ்துராஜா தொடக்கப் பள்ளியில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News August 19, 2025

காஞ்சி: கணவனை கொல்ல கூலிப்படை ஏவிய மனைவி

image

மேவலூர்குப்பத்தை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரின் மனைவி பவானிக்கு கடையில் வேலை செய்யும் மதன் என்பவரோடு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த ஹரி இருவரையும் பிரித்துள்ளார். பிரிவை தாங்க முடியாத இருவரும் கூலிப்படைக்கு பணம் தந்து ஹரியை கொலை செய்ய முயற்சித்துள்ளனர். இதை அறிந்த ஹரி காவல்துறையில் புகார் அளித்த பெயரில் பவானி மற்றும் மதன் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

News August 19, 2025

நாளை தருமபுரியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

image

தருமபுரி மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நாளை நடைபெற உள்ளது. இந்த முகாம் தருமபுரி செங்குந்தர் திருமண மண்டபம், அரூர் பொன் கற்பகம் திருமண மண்டபம், இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பென்னாகரம் கூத்தப்பாடி பெரியார் திருமண மண்டபம், ஏரியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஜக்கம்பட்டி மற்றும் பாலக்கோடு சமுதாய கூடம் பாடி ஆகிய இடங்களில் நடைபெறும்.

News August 19, 2025

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

image

வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (ஆகஸ்ட்-18) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், 80 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் எச்சரித்துள்ளார்.

News August 19, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் தேதிகள் அறிவிப்பு

image

மயிலாடுதுறையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் கடந்த ஜூலை முதல் கட்டமாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் தற்போது மயிலாடுதுறையில் இரண்டாம் கட்ட முகாம் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், ஆகஸ்டு 21, 22 மற்றும் செப்டம்பர் 6, 10, 11 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறையில் முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News August 19, 2025

சேலம் மாவட்ட தேர்தல் தேதி அறிவிப்பு

image

சேலம் மாவட்ட செஞ்சிலுவை சங்கத் கிளையின் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகின்ற செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற உள்ளது இதற்கான வேட்பு மனு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் வருகின்ற 21,22 ஆகிய இரு நாட்கள் சமர்ப்பிக்க வேண்டும். 23ஆம் தேதி வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் என்றும் 25ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.

News August 19, 2025

சேலம்: ரூ.21 கோடி கல்விக்கடன் ஆட்சியர் தகவல்!

image

சேலத்தில் 153 அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அதேபோன்று மாவட்டத்தில் 47 வங்கிகள் மற்றும் இதன் 550 வங்கி கிளைகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் நடப்பு 2025-26ம் ஆண்டில் 6,600 நபர்களுக்கு ரூ.128 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலாம் காலாண்டு ஜூன் 30 முடிய 1,378 மாணவர்களுக்கு ரூ.21 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தகவல்!

error: Content is protected !!