India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்டத்தில் இன்று (மே.15) கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வரை) கனமழை முதல் மிக கனமழை பதிவாகக்கூடும். சமீபமாகவே தமிழகத்தில் ஆங்காங்கு மழைப் பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஊட்டியில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி மற்றும் சுன்னத் ஜமாத் பெடரேஷன் மதினா பள்ளி வாசல் நிர்வாகம் இணைந்து ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்காக தடுப்பூசி முகாமை நடத்தின. சுகாதார பணிகள் துணை இயக்குநர் பாலுசாமி துவக்கி வைத்தார். அதில் ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, மஞ்சூர், கூடலுார், பந்தலுார் ஆகிய தாலுகாவுக்குட்பட்ட பகுதிகளில் 35 பெண்கள், 29 ஆண்கள் என 64 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
நாட்றம்பள்ளி அருகே சடலை குட்டை அண்ணா நகரை சேர்ந்தவர் விக்னேஷ்(27). இவர் கால்கள் அடிபட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் முழுவதும் குணமாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த விக்னேஷ் நேற்று(மே 14) எலி பேஸ்ட் சாப்பிட்டு மயங்கி நிலையில் கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இன்று உயிரிழந்தார். நாட்டறம்பள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையத்தில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள்(ஐ.டி.ஐ) உள்ளது. இந்த பயிற்சி நிலையங்களில் 2024 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக ஜூன் 7ம் வரை விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஈரோடு 0424-2275244, 9499055703 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் சின்ன கோயம்புத்தூர் அருகே உடுமலை தேசிய நெடுஞ்சாலையில், இன்று(மே 15) வாழைக்காய் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கேரளத்தில் இருந்து வாழைக்காய் ஏற்றிவந்த நிலையில், சண்முக நதி பாலத்திற்கு அருகில் வேகமாக வந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. லாரி ஓட்டுநர் காயத்துடன் உயிர் தப்பினார். தகவல் அறிந்து வந்த போலீசார் லாரியை அப்புறப்படுத்தினர்.
திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ் குமார். இவர் நேற்று இரவு பணி முடிந்து தங்கும் விடுதிக்கு சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரின் செல்போனை கேட்டு மிரட்டப்பட்டுள்ளார். செல்போனை தர மறுத்ததால் ஆகாஷ் குமாரை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் சிகிச்சை பெற்று வந்தவர் இன்று காலை உயிரிழந்தார்.
தமிழகத்தில் இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டம் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிர் இழப்புகளை குறைப்பதோடு குடும்பங்களுக்கு ஏற்படும் மருத்துவ செலவினங்கள் குறைக்கிறது. கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் வாயிலாக 5,090 பேருக்கு ரூ.3 கோடியே 55 லட்சம் செலவில் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் கஞ்சனூர் ஊராட்சிக்குட்பட்ட கே.ஆர்.பாளையத்தில் உள்ள குடிநீர் திறந்தவெளி கிணற்றில் மலம் கிடப்பதாக இன்று காலை சுமார் 9 மணி அளவில் வதந்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட துறையினர் நேரடி ஆய்வு செய்ததில் அது மலம் அல்ல; தேனடை என கண்டறியப்பட்டது. அதனை கிராம மக்கள் அனைவருக்கும் காண்பித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
கடலூர் அருகே பண்ருட்டி எம்.புதுப்பாளையம் பகுதியில் இன்று காலை ஒருவரை நான்கு பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கியுள்ளார். இருப்பினும் அவர் உயிர் தப்பித்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தகவலின் பேரில் புதுநகர் காவல் நிலைய அதிகாரிகள் அவரிடம் விசாரணை செய்ததில் அவர் பெயர் ஜெயபிரகாஷ் (28). சொந்த ஊர் ஆரோவில் இவர் தனது மாமியார் வீடு பண்ருட்டியில் தங்கியுள்ளதாக கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவெற்றியூர் அருகே உள்ள யேலூர் கிராமத்தை சேர்ந்த ராசு என்பவரது மகன் ரமேஷ் (43). இவர் நேற்று பண்ணைவயல் அத்தானி கண்மாய் எதிரே உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு குடிபோதையில் கண்மாயில் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி பலியானார். இவரது மனைவி பரிமளா (33) கொடுத்த புகாரில் திருவாடானை போலீசார் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.