India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கலவை, இருங்கூர் கிராமம் ரோடு தெருவை சேர்ந்தவர் சந்திரன், சுசிலா தம்பதியர். இவர்களது வீட்டின் பின்பக்க கதவை நேற்று இரவு மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த நகை பணத்தை திருடி சென்றனர். இதுகுறித்து சுசிலா வாழைப்பந்தல் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை நகரின் பிரதான சாலையில் பாதாள சாக்கடை கழிவுநீர் வழிந்து ஓடுவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். தொடர்ந்து நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை கலெக்டர் உத்தரவுப்படி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.சித்ரா அறிவுறுத்தலின் பேரில், பட்டுக்கோட்டை நகர, வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் தலைமையில் நேற்று (மே.14) பட்டுக்கோட்டையில் நடமாடும் உணவு பகுப்பாய்வு கூடம் மூலம் ஹோட்டல் குளிர்பான கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது தரம் குறைவான பொருட்களை விற்ற கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தேனி மாவட்டத்தில் இன்று (மே.15) கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வரை) கனமழை முதல் மிக கனமழை பதிவாகக்கூடும். சமீபமாகவே தமிழகத்தில் ஆங்காங்கு மழைப் பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஊட்டியில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி மற்றும் சுன்னத் ஜமாத் பெடரேஷன் மதினா பள்ளி வாசல் நிர்வாகம் இணைந்து ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்காக தடுப்பூசி முகாமை நடத்தின. சுகாதார பணிகள் துணை இயக்குநர் பாலுசாமி துவக்கி வைத்தார். அதில் ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, மஞ்சூர், கூடலுார், பந்தலுார் ஆகிய தாலுகாவுக்குட்பட்ட பகுதிகளில் 35 பெண்கள், 29 ஆண்கள் என 64 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
நாட்றம்பள்ளி அருகே சடலை குட்டை அண்ணா நகரை சேர்ந்தவர் விக்னேஷ்(27). இவர் கால்கள் அடிபட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் முழுவதும் குணமாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த விக்னேஷ் நேற்று(மே 14) எலி பேஸ்ட் சாப்பிட்டு மயங்கி நிலையில் கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இன்று உயிரிழந்தார். நாட்டறம்பள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையத்தில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள்(ஐ.டி.ஐ) உள்ளது. இந்த பயிற்சி நிலையங்களில் 2024 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக ஜூன் 7ம் வரை விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஈரோடு 0424-2275244, 9499055703 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் சின்ன கோயம்புத்தூர் அருகே உடுமலை தேசிய நெடுஞ்சாலையில், இன்று(மே 15) வாழைக்காய் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கேரளத்தில் இருந்து வாழைக்காய் ஏற்றிவந்த நிலையில், சண்முக நதி பாலத்திற்கு அருகில் வேகமாக வந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. லாரி ஓட்டுநர் காயத்துடன் உயிர் தப்பினார். தகவல் அறிந்து வந்த போலீசார் லாரியை அப்புறப்படுத்தினர்.
திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ் குமார். இவர் நேற்று இரவு பணி முடிந்து தங்கும் விடுதிக்கு சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரின் செல்போனை கேட்டு மிரட்டப்பட்டுள்ளார். செல்போனை தர மறுத்ததால் ஆகாஷ் குமாரை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் சிகிச்சை பெற்று வந்தவர் இன்று காலை உயிரிழந்தார்.
தமிழகத்தில் இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டம் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிர் இழப்புகளை குறைப்பதோடு குடும்பங்களுக்கு ஏற்படும் மருத்துவ செலவினங்கள் குறைக்கிறது. கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் வாயிலாக 5,090 பேருக்கு ரூ.3 கோடியே 55 லட்சம் செலவில் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.