Tamilnadu

News May 15, 2024

கோவை மாவட்ட ஆட்சியருக்கு கடிதம்

image

கோவை மாவட்ட ஆட்சியருக்கு, இன்று பேரிடர் மேலாண்மை துறை கடிதம் அனுப்பி உள்ளது. அதில் கனமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து துறைகளும் தயாராக இருக்க வேண்டும் எனவும் கோவை மட்டுமன்றி, நீலகிரி விருதுநகர் உள்ளிட்ட 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு, மாநில பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் அவசர கடிதம் கனமழையின்போது ஏதாவது எதிர்பாராத நிகழ்வுகள் பேரிடர் மேலாண்மை துறைக்கு தகவல் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

News May 15, 2024

சென்னை ரயிலில் புதிய வசதி அறிமுகம்

image

சென்னைக்கும் திருவண்ணாமலைக்கும் இடையில் ரூ.50 டிக்கெட் கட்டணத்தில் தற்போது கழிவறை அற்ற ரயில் சேவை இயக்கப்படுகிறது. காலை 4 மணிக்கு திருவண்ணாமலையில் புறப்படும் ரயில், 9.50 மணிக்கு சென்னை வந்தடையும்.
மறுமார்க்கமாக மாலை 6 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 12 மணிக்கு சென்றடையும். 6 மணி நேரம் பயண தூரம் கொண்ட வழித்தடத்தில் இயக்கப்படும் இந்த ரயிலில் தற்போது கழிவறை வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

News May 15, 2024

செய்தியாளர்களை தள்ளி விட்ட தோனியின் பாதுகாவலர்

image

மே 18 – ம் தேதி பெங்களூர் சின்ன சாமி மைதானத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இங்கு செல்வதற்காக சென்னை சுப்பர் கிங்ஸ் வீரர்கள் சென்னை விமான நிலையம் வந்தனர். அப்போது அவர்களை வீடியோ எடுக்க முயன்ற செய்தியாளர்களை தோனியின் பாதுகாவலர் தள்ளி விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News May 15, 2024

திண்டுக்கல் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பதாக வரும் தகவலின் கீழ் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் குறித்து வரும் நோயாளிகளின் விவரங்களை தினசரி சமர்ப்பிக்க வேண்டும் எனவும், டெங்கு போன்ற காய்ச்சல் பாதிப்பு இருந்தால் இருந்தால் அது குறித்த தகவல்களை உடனடியாக திண்டுக்கல் மாவட்ட இணை இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க இன்று அறிவித்துள்ளார்.

News May 15, 2024

குழந்தை தத்து அளிக்க ஒப்படைக்கப்பட்டுள்ளது

image

ஆரணி பேருந்து நிலையத்தில் 29.5.2023 அன்று தனியாக அழுது கொண்டிருந்த யாழினி என்ற 2 வயது பெண் குழந்தை மீட்கப்பட்டு குழந்தைகள் நல குழுவில் தத்து வழங்க ஒப்படைக்கப்பட்டுள்ளது. இக்குழந்தையை உரிமம் கோருவார் எவரேனும் இருப்பின் உரிய ஆதாரங்களுடன் ஏழு நாளுக்குள் திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை அணுகுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News May 15, 2024

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் மாநில நிர்வாகிகள் கூட்டம்

image

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாநில மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் மன்னார்குடி சோழா மஹாலில் வரும் 17.05.24 (வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணிக்கு நடைபெறும் என்றும், இக்கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என தமிழ்நாடு காவிரி விவசாயிகளின் ஒருங்கிணைப்பு தலைவரும், தமிழ்நாடு காவிரி விவசாய சங்க பொதுச்செயலாளர் பி.ஆர் பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார்.

News May 15, 2024

வாசிங் மெஷினை கடை முன்பு எரிக்க முயற்சி

image

திருவல்லிக்கேணி சத்தியவாணி முத்து நகர் பகுதியை சேர்ந்த இளம்பெண் அண்ணா சாலையில் உள்ள பிரபல ஷோரூமில் வாசிங் மெஷினை 7 மாதத்திற்கு முன்பு வாங்கியுள்ளார். அது அடிக்கடி பழுதான நிலையில் வேறு வாசிங் மெஷினை கேட்டுள்ளார். சர்வீஸ் செய்து தருவதாக கூறிய நிலையில், ஆத்திரமடைந்த இளம்பெண் அந்த கடை முன்பு வாசிங் மெஷினை மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயன்றார். இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரிக்கின்றனர்.

News May 15, 2024

திருப்பத்தூரில் 3 நாட்களுக்கு கன மழை

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் 100 பாரன்ஹீட் டிகிரி பதிவாகியுள்ளது. மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் வரும் 17 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை தொடர்ந்து கனமழைக்கு சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளதாக இன்று திருப்பத்தூர் தாசில்தார் தெரிவித்துள்ளார்.

News May 15, 2024

ஆவடியில் கொள்ளை போன நகைகள் ஒப்படைப்பு

image

ஆவடி காவல் ஆணையரகப் பகுதிகளில் கடந்த சில மாதங்களில் நடைபெற்ற 28 குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட தங்க நகைகள் உள்ளிட்டவைகளை பொதுமக்களிடையே ஒப்படைக்கும் நிகழ்வு இன்று ஆவடியில் நடைபெற்றது. இதில் காவல் ஆணையர் கி.சங்கர் கலந்து கொண்டு 185 பவுன் தங்க நகைகள், 5 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 398 கைப்பேசிகளை உரியவரிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் காவல் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News May 15, 2024

வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

image

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவுக்கு உட்பட்ட கீழமுடிமன்னார்கோட்டை பகுதியில் அரசு நலத்திட்டம் சார்பில் பல்வேறு வளர்ச்சி பணிக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனை அடுத்து இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அவர்கள் கீழமுடிமன்னார்கோட்டை பகுதிக்கு சென்று வளர்ச்சி பணிகளை குறித்து ஆய்வு செய்து கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் தரத்தையும் ஆய்வு செய்தார்.

error: Content is protected !!