India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதனையடுத்து காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கம்பிக்குடி ஊராட்சி கோபாலகிருஷ்ணபுரம் பள்ளி வளாகத்தில் ஆகஸ்ட்-15ஐ குடியரசு தினம் எனக் குறிப்பிட்டு கிராம சபைக் கூட்டத்திற்கான துண்டு பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்ட நிகழ்வு பொது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 41 உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc,BCA, MCA, M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் வைவா நடத்தப்படும். விருப்பமுள்ளவர் <
கோவையிலிருந்து அந்தமானுக்கு, சிறப்பு விமான சுற்றுலாவை இந்திய ரயில்வே, உணவு, சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி) அறிவித்துள்ளது. இது (செப்.23)ம் தேதி துவங்குகிறது. 6 இரவு, 7 பகல் அடங்கியது. விமான கட்டணம், தங்கும் வசதி, போக்குவரத்து, கப்பல் பயணச்சீட்டுகள், உணவு ஆகியவை அடங்கும். சுற்றுலா கட்டணம், 54,500 ரூபாய். மேலும் விபரங்களுக்கு, 90031-40655, www.irctctourism.com ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பத்தாவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செப்டம்பர் 3-ம் தேதி திருவாரூர் வருகிறார். தொடர்ந்து மத்தியப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்குகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
புதுவை குயவர்பாளையம் லெனின் வீதியில் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு, புதுவையை சேர்ந்த 18 முதல் 45 வயதுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஊறுகாய் வகை, வத்தல் வகை, அப்பளம் வகை, மாசாலா பொடிகள் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 88704 97520, 0413-2246500 எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்வினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் நேற்று (ஆக.12) துவக்கி வைத்தார். கடந்த இரண்டு நாட்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருச்சி எம்எல்ஏ இனிகோ, தமிழக முதலமைச்சருக்கு இன்று கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “நாடு முழுவதும் கல்லறை திருநாள் வரும் நவ-2ம் தேதி கடைபிடிக்கப்பட உள்ளது. இந்நிலையில் நவ.1, 2 ஆகிய தேதிகளில் ஆசிரியர்கள் தகுதி தேர்வான TNTED தேர்வு நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆகவே கல்லறை திருநாளை முன்னிட்டு இந்த தேர்வு தேதியை மாற்றி அமைத்து தர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவுமண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி பாலம் ஆகியவற்றை காண தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று பார்வையிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு (இன்று ஆக.13) துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணிகள் காரணமாக பிற்பகல் 1 மணிக்கு காரைக்காலில் இருந்து புறப்பட்டு நாகப்பட்டினம், கீழ்வேளுர் வழியாக தஞ்சாவூர் வரை செல்லும் பயணிகள் ரயிலானது ஆகஸ்ட் 13-ம் தேதி (இன்று) முதல் வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி வரை, ஒரு மணி நேரம் தாமதமாக பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் என தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் வினோத் தெரிவித்துள்ளார்.
சேலம் ஆகஸ்ட் 14 உங்களுடன் ஸ்டாலின் நடைபெறும் முகாம்கள்:
▶️ அம்மாபேட்டை சமுதாயக்கூடம் புத்துமாரியம்மன் கோவில். ▶️மாசிநாயக்கன்பட்டி கஸ்தூரிபா திருமண மண்டபம் அயோத்தியாபட்டினம்.
▶️ தலைவாசல் விளையாட்டு மைதானம் காமகபாளையம்.
▶️மேச்சேரி சுய உதவி குழு கட்டிடம் ஓலப்பட்டி.
▶️காடையாம்பட்டி எஸ் எஸ் வி ஜமீன் மஹால் நடுப்பட்டி.
▶️சங்ககிரி நாடார் சமுதாயக்கூடம் வட்டமலை. ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது.
Sorry, no posts matched your criteria.