India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள 70 சப்-இன்ஸ்பெக்டர்கள், 148 கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதியும், விருப்பம் உள்ள புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இன்று (ஆக.13) காலை 10 மணி முதல் வரும் செப்டம்பர் 12-ம் தேதி மாலை மாலை 3 மணிக்குள் https://recruitment.py.gov.in/ என்ற இனையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை அனைவருக்கும் SHARE செய்ங்க..
சேலத்தில் (ஆக.13) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்;
♦️ அஸ்தம்பட்டி மண்டலம் அண்ணாமலை திருமண மண்டபம் கன்னங்குறிச்சி.
♦️ துலுக்கனூர் செங்குந்தர் திருமண மண்டபம் துலுக்கனூர்.
♦️ ஆத்தூர் எல்.ஆர்.சி திருமண மண்டபம் கோட்டை.
♦️ ஓமலூர் பத்மவாணி மகளிர் கல்லூரி கோட்டகவுண்டம்பட்டி.
♦️ கொங்கணாபுரம் சுய உதவி குழு கட்டிடம் கச்சுப்பள்ளி.
♦️ மகுடஞ்சாவடி ஆர் கே திருமண மண்டபம் காக்காபாளையம்.
திருப்பத்தூர் மக்களே, இந்த மழைக்காலத்தில் வீட்டில் கரண்ட் இல்லையா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி வரி முறைகேடு நடந்த விவகாரத்தில் மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று சென்னையில் வைத்து கைது செய்தனர். இந்நிலையில், தற்போது பொன்வசந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூடுதல் விசாரணைக்காக அவர் மதுரை அழைத்து வரப்பட்ட நிலையில் அவர் தற்போது இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
சேலம் ஆகஸ்ட் 14 உங்களுடன் ஸ்டாலின் நடைபெறும் முகாம்கள்:
▶️ அம்மாபேட்டை சமுதாயக்கூடம் புத்துமாரியம்மன் கோவில். ▶️மாசிநாயக்கன்பட்டி கஸ்தூரிபா திருமண மண்டபம் அயோத்தியாபட்டினம்.
▶️ தலைவாசல் விளையாட்டு மைதானம் காமகபாளையம்.
▶️மேச்சேரி சுய உதவி குழு கட்டிடம் ஓலப்பட்டி.
▶️காடையாம்பட்டி எஸ் எஸ் வி ஜமீன் மஹால் நடுப்பட்டி.
▶️சங்ககிரி நாடார் சமுதாயக்கூடம் வட்டமலை. ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது.
மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நேற்று (ஆக.12) வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஆக.15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வாணிபக் கழகம் மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதனுடன் இணைந்து இயக்கும் மதுக்கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், தங்கும் விடுதியுடன் கூடிய மது அருந்தகங்கள், அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை நிலையம் என அனைத்தும் மூடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2025 – 2026 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில், சேலம் மாவட்டத்தில் 1895 பள்ளிகளில் கலைதிருவிழா போட்டி தொடங்கியது. இதுவரை 1 லட்சத்து 75 ஆயிரம் மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெறும் மாணவர்கள், மாநில அளவில் நவம்பர் மாதம் நடைபெறும் போட்டியில் பங்கேற்பார்கள்.
சென்னையை ஒட்டியுள்ள மாநகராட்சிகளை தவிர, மற்ற நகர்ப்புற & ஊரக பகுதிகளில் தெரு நாய்கள் கணக்கெடுப்பு தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழ்நாட்டில் 25 லட்சம் தெருநாய்கள் இருக்கலாம் என கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஜனவரி மாதம் முதல் ஜூன் வரை செங்கல்பட்டில் 13,064 பேர் நாய்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். நல்வாய்ப்பாக உயிரிழப்பு எதுவும் இல்லை. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்!
தேனியில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகளின் தொடர்பு எண்களை 2025 UPDATE செய்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. SAVE பண்ணுங்க தேனி மக்களே!
⏩ தேனி மாவட்ட ஆட்சியர் – ரஞ்சித் சிங் – 4546-253676
⏩ தேனி காவல்துறைக் கண்காணிப்பாளர் – சினேஹா ப்ரியா – 4546 254100
⏩ மாவட்ட வருவாய் அலுவலர் – மகாலெட்சுமி – 4546-254946
⏩ மாவட்ட திட்ட அலுவலர் – அபிதா ஹனிப் – 4546-254517
SHARE பண்ணுங்க!
விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் FL2/FL3/FL3A/FL3AA, FL11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை சுதந்திர தினமான ஆக.15 தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியாரால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி, உத்தரவினை மீறி செயல்படும் கடைகள், மதுபான உரிம ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் சுகபுத்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.