India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்டத்தில் (12.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்களை அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
ஈரோடு, சம்பத் நகரில் உள்ள நவீன நூலகத்தில் நூலகர் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி பங்கேற்றார். தொடர்ந்து, அங்கு உள்ள நூலக தந்தை டாக்டர்.எஸ்.ஆர்.அரங்கநாதன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்த வாசகர்களுடன் ஆட்சியர் கலந்துறையாடினார்.
திண்டுக்கல் மாவட்டம் சுதந்திர தினத்தை முன்னிட்டு, 15.08.2024 அன்று அனைத்து விதமான மதுபானக் கடைகள் மூடப்படும். அன்றைய நாளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது. மேலும், அன்றைய தினத்தில் விதிகளுக்கு மாறாக மது விற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன்தெரிவித்துள்ளார்.
கொங்கராயபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சங்கமித்திரை தனது விவசாய நிலத்தில் மாட்டு சாணம் அள்ளிக்கொண்டிருந்தார். அப்போது, விலாசம் கேட்பது போல் நடித்து அவரிடம் இருந்து 7 சவரன் தாலிச் சங்கிலியை 17 வயது மதிக்கத்தக்க இளைஞர் பறித்துக்கொண்டு ஓடிவிட்டார். இச்சம்பவம் குறித்து வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியைத் தேடி வருகின்றனர்.
பாடாலூர் சந்தைப்பேட்டை அருகே கடந்த மாதம் 31ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த நம்பு குறிச்சி கிராமத்தை சேர்ந்த ரங்கராஜ் (63) மீது கனரக வாகனம் மோதி விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்று விட்டனர். பின் சிசிடிவி கேமிரா மூலம் போலீசார் தீவிர தேடுதல் பணி நடைபெற்றது. இதையடுத்து கள்ளக்குறிச்சி மொகலா கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் அய்யனாரை (23) என்பவரை (ஆகஸ்ட் 11) கைது செய்தனர்.
சேலம் மாநகரத்தில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சாவை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சேலம் மாநகர காவல்துறை ஆணையாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, எடப்பாடி அரசு கலைக் கல்லூரி அருகே காவல்துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில் நேற்று (ஆக.12) சுமார் 879.698 கிலோ கஞ்சாவை எரித்து அழித்தனர்.
கீழ்வேளுர் – திருவாரூர் இடையே ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது. இதனால் காரைக்காலில் பிற்பகல் 2.55 மணிக்கு புறப்பட்டு நாகை, கீழ்வேளுர் வழியாக திருச்சி செல்லும் பயணிகள் ரயில் வருகின்ற ஆக.13ம் தேதி முதல் 23ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது என தென்னக ரயில்வே பி .ஆர்.ஓ.வினோத் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி – மாநில அளவிலான நிகழ்ச்சி கடற்கரை சாலையில் நேற்று நடைபெற்றது. இதில், ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியின் போது அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் வரும் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம், ஜல் ஜீவன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. எனவே கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள், சுயஉதவி குழு பெண்கள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நான்கு சக்கர வாகனத்தில் இன்று (ஆக. 12) இரவு நேரங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகளின் விபரங்களை மதுரை மாநகர் காவல் துறை அதிகாரப்பூர்வமான சமூகங்களை பக்கத்தில் விவரங்களை வெளியிட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடக்கும் குற்றங்களை காவல் கட்டுப்பாட்டு அறை எங்களுக்கும் அதிகாரியின் எங்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்க கேட்டுக் கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.