India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி புரட்சித்தமிழரின் எழுச்சி பயணம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் திருச்சியில் வரும் 23 முதல் 25 மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். , 23ஆம் தேதி திருச்சி கிழக்கு திருவெறும்பூர், லால்குடி, 24 ஆம் தேதி முசிறி, மணச்சநல்லூர், துறையூர், 25ஆம் தேதி மணப்பாறை, ஸ்ரீரங்கம் மேற்கு தொகுதிக்கு வருகை புரிகிறார்.
மதுரை மாநகராட்சியில் நடந்த ரூ.150 கோடி சொத்துவரி முறைகேடு வழக்கு தொடர்பாக மதுரை மேயரின் கணவர் பொன்வசந்த் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது சென்னையில் வைத்து மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்தை கைது செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டு, 19 ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று(ஆக.10) இரவு ரோந்து பணியில் ஈடுபடவுள்ள காவலர்களின் பட்டியலை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் அவசர தேவைக்கு அவர்களை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவில் காவல்துறை உதவி தேவைப்படும் நபர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கோ, அல்லது 100-க்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(ஆக.12) இரவு ரோந்து பணியில் ஈடுபடவுள்ள காவலர்களின் பட்டியலை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் அவசர தேவைக்கு அவர்களை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவில் காவல்துறை உதவி தேவைப்படும் நபர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கோ, அல்லது 100-க்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.
தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆகஸ்ட் 12) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம் வெளியிட்டுள்ளது. தலைமை அதிகாரியாக R. குணவர்மன்
நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி புஷ்பராணி, அரூர் ஆதமலி, பென்னாகரம் முரளி , மற்றும் பாலக்கோடு பார்த்திபன் ஆகியோர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பொதுமக்கள் அவசர தேவை எனில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் இன்று (ஆகஸ்ட் 12) செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.
பூந்தமல்லி, நசரத்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தியால் மிரட்டி நிர்வாணமாக வீடியோ எடுத்தும், நகைகளைப் பறித்தும் சென்ற வழக்கில், தண்டையார்பேட்டையைச் சேர்ந்த அஜய்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். கோயம்புத்தூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட அஜய்குமார், கொள்ளையடித்த நகைகளை விற்று ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தருமபுரி, காரிமங்கலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறுகிறது. மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகை, புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 இலவச பேருந்து பாஸ், புத்தகங்கள், பாடக் கருவிகள், சீருடைகள், ஷூ,மிதிவண்டி ஆகியவை வழங்கப்படும். குறைந்த இடங்களே உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க இம்மாதம் 30ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை கோட்டப்பாளையத்தில் வாதப் பிள்ளையார் கோயில் உள்ளது. சுயம்பு மூர்த்தியாக உள்ள பிள்ளையாரை வணங்கி, அவரின் மீது படிந்திருக்கும் நல்லெண்ணெயை எடுத்து தடவி வந்தால், வாதம், நரம்பு, மூட்டுநோய்கள் குணமாகுமாம். ஒரு நூல் கண்டு வாங்கி, நூலின் ஒரு முனையை ஒரு சூலத்தில் கட்டிவிட்டு, பிள்ளையாரை பிரார்த்தனை செய்து, நூல் கண்டு தீரும் வரை பிள்ளையாரை சுற்றிவந்தால் உடலில் உள்ள பிணிகள் நீங்குமாம். SHARE பண்ணுங்க!
திருப்பூரில் கடந்த சில மாதங்களில் வரதட்சணை கொடுமையில் ரிதன்யா தற்கொலை மற்றும் அதன் தாக்கம் குறையும் முன் ப்ரீத்தி என்ற மற்றுமொரு பெண்ணும் தற்கொலை செய்து கொண்டார். மேலும் மக்களை காக்கும் காவலர் சண்முகவேல் கொலை , வழக்கறிஞர் முருகானந்தம் கொலை, தனிமையில் இருக்கும் முதியவர்களை தாக்குதல் என தொடர்ந்து நடைபெறும் சம்பவங்கள் திருப்பூர் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
Sorry, no posts matched your criteria.