India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வெளிப்பாளையம் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் அங்கு விரைந்த போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டில் ரூ.6 லட்சம் மதிப்பிலான 12 கிலோ கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார் இதில் ஈடுபட்ட ரேவதி, பிரகாஷ் மற்றும் இவரது மனைவி ரேணுகா ஆகியோரை கைது செய்தனர்.
விளம்பரம் பார்த்தால் பணத்தை அள்ளலாம் என கூறி Myv3 ads நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் திரும்பக் கிடைக்காமல் ஏமாந்தவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பொருளாதர குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். பணம் முதலீடு செய்ததற்கான அசல்ஆவணங்களுடன் நேரில் வந்துபுகார் அளிக்க வேண்டும். ஈரோட்டில் யாராவது ஏமாந்திருந்தால் SHARE பண்ணுங்க.
சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவில் சித்திரை திருவிழா மே 1-இல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நாளை ஏப். 30 யானை பிடி மண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது .பெருங்கோட்டூர் கிராமத்திற்கு கோவில் யானை கோமதியுடன் சென்று பிடி மண் எடுத்து விட்டு கோவிலுக்கு திரும்புவர். 9ம் திருநாளான மே 9 இல் தேரோட்டம் நடைபெற உள்ளது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டக படித்தார்கள் செய்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை இந்திரபிரஸ்தம் தெருவைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி வெற்றிவேல்முருகன்(45). இவர் கழுகுமலை பகுதியில் குளங்களில் மீன் பிடித்து விற்பனை செய்து வருகிறார்.கடந்த 27-ம் தேதி மாலை குறவன்குளத்தில் மீன் பிடிக்கச் சென்றார். மதுபோதையில் குளத்தில் இறங்கிய அவர், மீனுக்கு விரிக்கப்பட்ட வலைக்குள் சிக்கி மூழ்கி உயிரிழந்தார். கழுகுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.
திசையன்விளையை சேர்ந்த செந்தில் முருகனின் மகன் சந்தோஷ்(14). பரப்பாடியில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார். நேற்றிரவு சந்தோஷ் பைக்கில் பரப்பாடியில் இருந்து நாங்குநேரி சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த பைக்கில் மோதி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த பேருந்தின் சக்கரமானது சந்தோஷ் தலை மீது ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். விஜயநாராயணம் போலீசார் விசாரணை.
கரடியாரை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு கடந்த 2024ஆம் ஆண்டு குழந்தை திருமணம் நடைபெற்றது. தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு வந்த போது அவர் 18 வயது பூர்த்தி அடையவில்லை என மருத்துவர்கள் கண்டறிந்தனர். தகவலின் அடிப்படையில் குழந்தை திருமணம் செய்த கலர்புரத்தை சேர்ந்த மணிகண்டன் அவரது சகோதரர் முருகேசன், அவரது மனைவி அலமேலு ஆகியோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை ஹார்விபட்டி சிவசுப்ரமணியன் மனைவி முத்துஅருளி. பிறவியிலேயே இடுப்புக்குக் கீழ் கால்கள் செயல்படாத மாற்றுத்திறனாளி. நேற்று மக்கள் குறைதீர் கூட்டத்தில் முத்து அருளி கூறியதாவது: கணவர் குடும்பத்தினரால் ஆணவக் கொலை ஆபத்து உள்ளது என முதல்வரின் தனிப்பிரிவில் மனு கொடுத்தேன். இதுபற்றி திருநகர் போலீசார் முறையாக விசாரிக்காமல் விசாரணையை முடிக்கும் வகையில் கையெழுத்திடும்படி கட்டாயப்படுத்துகின்றனர் என்றார்.
நீலகிரி மக்களே உஷார்! மோசடி கும்பல் உங்கள் வாட்ஸ்அப் OTP-ஐ கேட்டு, கணக்கை ஹேக் செய்ய முயற்சி செய்கிறார்கள். OTP-ஐ யாருடனும் பகிராதீர்கள். அவர்கள் OTP-ஐ பெற்றால், உங்கள் தனிப்பட்ட மற்றும் வங்கி சார்ந்த தகவல்களை வைத்து உங்களை மிரட்டவோ அல்லது பணத்தை திருடவோ வாய்ப்புள்ளது. உங்கள் வாட்ஸ்அப்பில் Two Step Verification-ஐ Enable செய்து பாதுகாப்பாக இருங்கள் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், உரிமம் பெற்ற கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் அனைத்தும் வருகிற மே 1ஆம் தேதி அன்று முழுவதுமாக மூட வேண்டும், மதுபானங்கள் விற்பனை செய்ய கூடாது. தவறும் பட்சத்தில் தொடர்புடைய மதுபான கடைகளின் மேற்பார்வையாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2 மாத மீன் பிடி தடைக்காலத்தின் போது மீனவர்கள் மீன்பிடி தொழில் இல்லாமல் பாதிக்கப்படுவதால் குடும்பத்தில் ஒரு மீனவருக்கு ரூ.8000 வரையிலான நிவாரணத்தொகை வழங்கப்படும். இதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் 39 ஆயிரத்து 787 பேருக்கு நிவாரணத்தொகை வழங்க மீன் வளத்துறையினர் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். நிவாரணத் தொகையை அரசு விரைவில் மீனவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்த உள்ளது. *ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.