India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டு தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டம், தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயக்கம் திட்டம், பனை மேம்பாட்டு இயக்கம் ஆகிய திட்டங்களில் விவசாயிகள் பயன் பெற tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் மொபைல் சர்வீஸ் கடையில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் நேற்று (ஏப்.28) கைது செய்யப்பட்டார். விழுப்புரத்தை சேர்ந்த அருண்குமார், கடந்த மார்ச் 28ம் தேதி விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் உள்ள மொபைல் சர்வீஸ் கடையில் தகராறு செய்து பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்தார். டவுன் போலீசார் அவரை தேடி வந்த நிலையில், நேற்று அவரை குண்டாஸில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நெல்லை மாவட்டத்தில் நீதித்துறை பயிற்சி முடித்த துணை தாசில்தார் சந்திரசேகர் நெல்லை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக தலைமை உதவியாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை துணை தாசில்தார் முத்துலட்சுமி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலக தலைமை உதவியாளராக மாற்றப்பட்டுள்ளார். இதுபோல் மாவட்ட முழுவதும் மொத்தம் 18 பேர் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சுகுமார் உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு பயனுள்ள வகையில், கோடை கொண்டாட்டம் நிகழ்ச்சிகள் வரும் மே 2ஆம் தேதி முதல் தொடங்கி மே.17ஆம் தேதி வரை சிவகங்கையில் உள்ள மருது பாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், காரைக்குடியில் உள்ள அழகப்பா மாதிரி பள்ளியிலும் சிறப்பு பயிற்சிகள் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க
காலை 10 மணிக்கு நலவாரிய புதிய விண்ணப்பங்கள் மற்றும் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் உரிய காலத்தில் ஏற்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோணம் தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகம் முன்பு INTUCஉண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளது.மாலை 4.30 மணி – CPI(M) சார்பில் களியல் சந்திப்பில் மே தின பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
பாப்பாரப்பட்டி அருகே உள்ள மலையூரை சேர்ந்தவர் சஞ்சீவமூர்த்தி, 35. நேற்று முன்தினம் கோடுப்பட்டி சின்னாறு வனப்பகுதியில் தன் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மலைத்தேனீக்கள் சஞ்சீவமூர்த்தியை கொட்டின. இதனால், மயக்க நிலைக்கு சென்றுள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள எம்.புதுப்பட்டி ஸ்டான்டர்டு பட்டாசு ஆலையில் கடந்த 26-ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் ஏற்கனவே 3 பெண் தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். இந்நிலையில் 100% தீக்காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எம்.புதுப்பட்டியை சேர்ந்த பாக்கியலட்சுமி 58, என்ற பெண் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம்
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 01.05.2025 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் முற்பகல் 11.00 மணி அளவில் நடைபெற உள்ளது. எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிப் பகுதியில் உள்ள மக்கள் கிராமசபைக் கூட்டங்களில் தவறாது கலந்து கொண்டு விவாதத்தில் தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன், தெரிவித்துள்ளார்.
மே தினத்தன்று (மே.01) தேதி தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் எப்.எல்.1 மற்றும் பார்கள், எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏஏ மற்றும் எப்.எல்.4ஏ உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியன கட்டாயம் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சி தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்து உள்ளார்.
திண்டுக்கல் கலெக்டர் சரவணன் நேற்று செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், திண்டுக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் கட்டுப்பாட்டில் உள்ள மதுபான கடைகள், அதையொட்டி பார்கள் (ம) நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள பார்கள் அனைத்தும் உழைப்பாளர் தினமான மே.1ஆம் தேதி மூடி வைக்க வேண்டும். மேலும், மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.