Tamilnadu

News April 29, 2025

திருவாரூர்: அறிந்துகொள்ள வேண்டிய காவல்துறை எண்கள்

image

திருவாரூர் மாவட்ட மக்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் எண்கள்: மாவட்ட கண்காணிப்பாளர்-9498110066, திருவாரூர் துணை கண்காணிப்பாளர்-9498100866, நன்னிலம் துணை கண்காணிப்பாளர்-9498100874, மன்னார்குடி துணை கண்காணிப்பாளர்-9498100881, திருத்துறைபூண்டி துணை கண்காணிப்பாளர்-9498100891, முத்துபேட்டை துணை கண்காணிப்பாளர்-9498100897. இதை மறக்காமல் SHARE செய்யவும்!

News April 29, 2025

Myv3இல் பணத்தை முதலீடு செய்து ஏமாந்தவரா நீங்கள்?

image

விளம்பரம் பார்த்தால் பணத்தை அள்ளலாம் என கூறி Myv3 ads நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் திரும்பக் கிடைக்காமல் ஏமாந்தவர்கள், அந்தந்த மாவட்டத்தில் உள்ள பொருளாதர குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். பணம் முதலீடு செய்ததற்கான அசல் ஆவணங்களுடன் நேரில் வந்து புகார் அளிக்க வேண்டும். சேலத்தில் யாராவது ஏமாந்திருந்தால் SHARE பண்ணுங்க.

News April 29, 2025

தஞ்சை அஞ்சலகங்களில் ஆதார் சிறப்பு முகாம்

image

தஞ்சை தலைமை அஞ்சல் அலுவலகங்களில் ஆதார் மற்றும் சர்வதேச தபால் சேவை சிறப்பு முகாம் நாளையுடன் (ஏப்.30) முடிவடைகிறது. இதில் பெயர், முகவரி, செல்போன் எண் திருத்தம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை அந்தந்த கோட்டத்தில் உள்ள தபால் நிலையங்கள் மூலம் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதனை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.

News April 29, 2025

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிராம சபைக் கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் மே 1 அன்று கிராம சபைக் கூட்டம் முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் என்று ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா அறிவித்துள்ளார். கூட்டங்களில் பொதுநிதி செலவுகள், கட்டட அனுமதி, வரி வசூல் உள்ளிட்ட பிரச்சினைகள் விவாதிக்கப்படும். வட்டாட்சியர்கள் பார்வையாளர்களாக கலந்து கொண்டு கூட்டங்களை கண்காணிப்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மறக்காம கலந்துக்கோங்க. ஷேர் பண்ணுங்க.

News April 29, 2025

கடலூர் மாவட்ட மின்சார அலுவலக புகார் எண்கள்

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மின் தொடர்பான புகார்களை இந்த எண்களில் அளிக்கலாம். அவை: கடலூர்:04142 223793, சிதம்பரம்:04144 222020, விருத்தாச்சலம் 04562-240009, புவனகிரி:04328 224055, குள்ளஞ்சாவடி:04142 279231, பண்ருட்டி:04142-246428, குறிஞ்சிப்பாடி:04142-258243, சேத்தியாத்தோப்பு:04144-244223, ஸ்ரீ முஷ்ணம்:04144-245239, பெண்ணாடம்:04143-222222. தெரியாதவர்களுக்கு SHAREசெய்து உதவுங்க..

News April 29, 2025

புதுகை அஞ்சலகங்களில் ஆதார் சிறப்பு முகாம்

image

புதுகை தலைமை அஞ்சல் அலுவலகங்களில் சித்திரை திருவிழா மெகா ஆதார் சிறப்பு முகாம் நாளையுடன் (ஏப்.30) முடிவடைகிறது. இதில் பெயர், முகவரி, செல்போன் எண் திருத்தம் செய்து கொள்ளலாம். இதற்கு பயோமெட்ரிக் திருத்தம் செய்ய ரூ.100 மட்டுமே கட்டணம் ஆகும். இந்த வாய்ப்பினை மாவட்டத்திலுள்ள 31 துணை அஞ்சலகங்களில் மூலம் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்கள்.

News April 29, 2025

அரியலூர்: சத்துணவு மையங்களில் வேலை வாய்ப்பு

image

அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பள்ளி சத்துணவு மையங்களில் அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் என காலியாக உள்ள 490 பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்பிட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அறிந்து கொள்ள <>இங்கே கிளிக்<<>> செய்யவும். இதற்கு வரும் 30ஆம் தேதியே கடைசி நாள். ஆகையால், உடனே APPLY பன்னுங்க மற்றும் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் SHARE செய்ங்க.

News April 29, 2025

கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து 

image

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள ஓலப்பாளையத்தில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இங்கு வட மாநில வாலிபர் ஒருவர் பானி பூரி கடை வைத்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு கடையை அடைத்து விட்டு சென்ற பிறகு நள்ளிரவில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடையில் இருந்த பொருட்கள் தீயில் கருகி சேதம் அடைந்தது. இத்தீவிபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News April 29, 2025

சத்துணவு மையங்களில் வேலை: கடைசி வாய்ப்பு

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 231 சமையல் உதவியாளர் பணிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. இப்பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>இங்கே க்ளிக் செய்து <<>>தெரிந்துகொள்ளுங்கள். விண்ணப்பிக்க நாளை (ஏப்.30) கடைசி தேதியாகும். மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க..

News April 29, 2025

கள்ளக்காதல் ஜோடி சடலமாக மீட்பு

image

கலசப்பாக்கத்தை சேர்ந்த முருகனுக்கு(43) மனைவி, 3 மகள்கள் உள்ளனர். அதே கிராமத்தை சேர்ந்த கீதாவுக்கு(38) கணவர், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், முருகனுக்கும், கீதாவுக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இருவரும் திடீரென கடந்த பிப்.08ஆம் தேதி மாயமான நிலையில், நார்த்தாம்பூண்டி பழங்கோயில் ஏரியில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!