India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் ஈரோட்டில் இலவச ‘Tally’ பயிற்சி வழங்கப்படுகிறது. மொத்தம் 20 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சிக்கு 6669 காலியிடங்கள் உள்ளன. இதற்கு டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. அரசின் பல்வேறு திட்டத்தில் பயனடைவோர் இதில் பயனடையலாம். இந்தப் பயிற்சியுடன் வேலையும் வழங்கப்படலாம். இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள, விண்ணப்பிக்க <
தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் கோவையில் இலவச ‘Tally’ பயிற்சி வழங்கப்படுகிறது. மொத்தம் 20 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சிக்கு 6669 காலியிடங்கள் உள்ளன. இதற்கு டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. அரசின் பல்வேறு திட்டத்தில் பயனடைவோர் இதில் பயனடையலாம். இந்தப் பயிற்சியுடன் வேலையும் வழங்கப்படலாம். இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள, விண்ணப்பிக்க<
திருவாரூர் மாவட்டத்தில் படித்து வேலை தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு திருவாரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் இன்று (ஆகஸ்ட் 9) தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. இம்முகாமானது மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை நடைபெறவுள்ளது. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
நெல்லை மாவட்ட பெண்களே! உங்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய தமிழக அரசு உதவி எண்களை வெளியிட்டுள்ளது. இந்த உதவி எண்களை உங்க மொபைலில் SAVE பண்ணிக்கோங்க. உங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய பெரிதும் உதவும்…
➟குழந்தைகள் பாதுகாப்பு: 1098
➟பெண்கள் பாதுகாப்பு: 1091/181
➟காவல் ஆம்புலன்ஸ்: 112
➟மூத்த குடிமக்கள் உதவி – 14567
நம்ம நெல்லை மாவட்ட பெண்கள் எல்லாரும் இந்த எண்ணை SAVE பண்ண SHARE பண்ணுங்க!
வேலூரில் பெய்து வரும் தொடர் மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து தொடங்கியுள்ளது. அதிகபட்சமாக அம்முண்டியில் 80.20 மி.மீ மழை பதிவாகி உள்ளது. ஒடுகத்தூர் 11, குடியாத்தம் 38, மேல்ஆலத்தூர் 27.40, மோர்தானா அணை 25, ராஜாதோப்பு அணை 25, வட விரிஞ்சிபுரம் 47, காட்பாடி 61, பொன்னை 122, பேரணாம்பட்டு 4.40, கலெக்டர் அலுவலகம் 41.70, வேலூர் தாலுகா 36.30 பதிவாகியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஆக.09) கனமழை காரணமாக பள்ளி, கல்லுரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து விடுமுறை என்பதை தெரியப்படுத்துங்கள்.
புதுச்சேரியில் ஆழ்துளை கிணறு அமைக்கவும், நீர்மூழ்கி மோட்டார் பொருத்தவும் வழங்கப்படும் மானியம் பெறுவதற்கு தற்போதுள்ள நில உச்சவரம்பு பொது விவசாயிகளுக்கு 1% ஏக்கரில் இருந்து 1 ஏக்கராகவும். அட்டவணை இன விவசாயிகளுக்கு 1 ஏக்கரில் இருந்து ½ஏக்கராகவும் குறைக்கப்படுகிறது. எனவே இத்திட்டத்தில் உழவர் உதவியகங்கள் அல்லது https://agri.py.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் இதனை ஷேர் பண்ணுங்க
மயிலாடுதுறை கடைவீதியில் அமைந்துள்ள மணிக்கூண்டு 1943 இல் கட்டப்பட்ட ஒரு வரலாற்றுச் சின்னமாகும். இந்த மணிக்கூண்டு இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் ராணுவம் ஜெர்மனியை எதிர்த்துப் பெற்ற வெற்றியை நினைவுகூருவதற்காக கட்டப்பட்டது. இதனை அப்துல் காதர் என்பவர் தனது சொந்தச் செலவில் கட்டி அப்போதைய சென்னை மாநில ஆளுநர் ஆர்தர் ஹோப் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடதக்கது. அனைவருக்கும் இதனை ஷேர் பண்ணுங்க
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது. இன்று (ஆக.09) திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே!. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து மழை நிலவரம் பற்றி தெரியப்படுத்துங்கள்.
கிண்டியைச் சேர்ந்த ஸ்ரீராம், TVK கட்சியின் 168ஆவது வார்டு பொருளாளர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நாகிரெட்டி தோட்டம் பிள்ளையார் கோயில் அருகே வைக்கப்பட்ட TVK பேனரை மர்ம நபர்கள் கிழித்தனர். இதுகுறித்து சந்தோஷ் என்பவரிடம் ஸ்ரீராம் விசாரித்ததால், நேற்று (ஆகஸ்ட் 9) சந்தோஷ் நண்பர்களுடன் ஸ்ரீராமை பிளேடால் முகத்தில் கிழித்துள்ளார். திமுகவில் இருந்து TVK-விற்கு மாறியதால் வெட்டியதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.