India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருக்கனுார் கூனிச்சம்பட்டு பகுதியை சேர்ந்தவர் முருகேசன். கூலி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் இரவு அய்யனாரப்பன் கோவில் அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், முருகேசன் மீது மோதி, நிற்காமல் சென்றுள்ளது. இதில், படுகாயமடைந்த முருகேசனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது வழியிலே அவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களை கண்டறிந்து தமிழ் தொண்டினை பெருமைப்படுத்தி ஊக்கப்படுத்தும் வகையில் 2025-ஆம் ஆண்டிற்கான தமிழ் செம்மல் விருதுக்கு தமிழ் ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார்
ராணிப்பேட்டை காவல்துறை இன்று (ஆகஸ்ட் 5) சமூக வலைத்தளத்தின் விழிப்புணர்வு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் பேருந்தில் படியில் நின்று பயணம் செய்வது ஆபத்தானது எனவும், “பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தால் அடுத்த பேருந்திற்காக காத்திருங்கள்” என்ற வாசகத்துடன் செய்தி இடம்பெற்று இருந்தது. மக்களே யாரும் பேருந்து படியில் நின்று பயணம் செய்யாதீர்கள்! விழிப்போடு இருங்க!
நாகை செல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (ஆக.6) காலை10 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் நாகை, வெளிப்பாளையம், திருமருகல், கங்களாஞ்சேரி, நாகூர், சிக்கல், வேளாங்கண்ணி, கீழ்வேளூர், திருப்பூண்டி, திருக்குவளை, விழுந்தமாவடி, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று குறைகளை தெரிவிக்கலாம் என மேற்பார்வை பொறியாளர் ரோனிக் ராஜ் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ‘தேசிய ஜனநாயக கூட்டணி இன்னும் கூட்டணியாகவே உருவாகவில்லை. அதில் பாஜக-அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே உள்ளன. அந்த கூட்டணியிலே தொடர்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட கட்சிகள் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி வருவது அவர்களின் உறுதிபாடு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை காட்டுகிறது’ என்றார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர்கள் சேர்க்கைக்கான தேதி இந்த மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு பயிற்சி கட்டணம் இல்லை. மாதம் 750 ரூபாய் கல்வி உதவித்தொகை , இலவச மிதிவண்டி ,சீருடை, பயிற்சி கட்டணம் இல்லை, இலவச பேருந்து பயணம் என பல சலுகைகள் உள்ளது.
கடலூரை சேர்ந்த 12 வயது சிறுமி, கடலூரில் உள்ள ஒரு பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். அம்மாணவியை கிள்ளை எம்.ஜி.ஆர். திட்டு பகுதியை சேர்ந்த இமயவரம்பன்(25), என்பவர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரிந்தது. இந்நிலையில், மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பரிந்துரைபடி, மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவின்பேரில் இமயவரம்பன் நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் முருங்கை சாகுபடி செய்யும் விவசாயிகள் காய்கறி மற்றும் பழங்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் வேடசந்தூர் அருகே சேனன்கோட்டையில் அமைந்துள்ள முருங்கை முதன்மை பதப்படுத்தும் நிலையத்தை அணுகி பயன்பெறலாம். மேலும், விபரங்களுக்கு 9442060637, 9443592508 , 9894060869 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். ஷேர் பண்ணுங்க.
சிவகாசி பேருந்து நிலைய பகுதியில் உள்ள ஸ்ரீ துர்க்கை பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்று ஆடிமாதம் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ வேப்பிலைக்காரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வேப்பிலையால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றதை தொடர்ந்து கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.