India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டத்தில் 08.07.2025 இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
பவானிசாகர் அருகே பெரிய கள்ளிப்பட்டி முருகன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது வீட்டின் அருகே வசிக்கும் வெள்ளிங்கிரி என்பவருக்கும் முருகேசனுகும் பிரச்சனை இருந்து வந்துள்ளதாக கூறப்படும் நிலையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இன்று மாலை முருகேசன் வீட்டிலிருந்த போது அறிவாளை எடுத்து வந்து வெள்ளிங்கிரி முருகேசன் விரட்டி வெட்டி படுகொலை செய்தார். பவானிசாகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு இன்று (08/07/25) இரவு ரோந்து பணி பார்க்கும் அதிகாரிகளின் விவரம் காவல் நிலையம் வாரியாக மக்களின் தொடர்புக்கு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசரம் என்றால் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள காவல் துறையினரின் நேரடி மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம். குறிப்பாக இரவு நேரம் வேலைக்கு செல்லும் பெண்கள் இத்தகைய மொபைல் எண்களை கண்டிப்பாக வைத்திருங்கள் மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் செய்யுங்கள.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மூஞ்சிக்கல்லில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (கலையரங்க கூடத்தில்) ஜூலை.10 மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கான சிறப்பு முகாம் அன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணிவரை நடைபெற உள்ளது. இதில் 14 வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.
இதில் அதார் நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படங்கள் 4 உடன் கலந்து கொள்ளலாம்.
தருமபுரி மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர்,முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளுக்கான பேச்சுப் போட்டிகள் முறையே 16,17 தேதி ஆகிய நாள்களில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் அனைத்துப் பள்ளிகளிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 வரை மட்டும் கலந்து கொள்ளலாம்.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 18ம் தேதி காலை 10.30 மணிக்கு, அறை எண் 240 ல் நடைபெறுகிறது. இதில் அனைத்துதுறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகளும் கலந்துகொள்ளலாம்.
விவசாயிகளின் கோரிக்கைக்கான மனுக்களை வழங்கிடவும், பின்னர் பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்களில் ஒரு சங்கத்திற்கு ஒருவர் வீதம் பேசலாம் என மாவட்ட கலெக்டர் மனிஷ் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முந்தினம் தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவிலில் சாமி தரிசனத்திற்கு பின், பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது, அவரை வரவேற்க காத்திருந்த 4 பேரிடம் ரூ.2.07 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் பிக் பாக்கெட் அடித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் நேற்று ராஜி, ராஜா@குண்டு ராஜன், சுரேஷ், ரமேஷ், கோபால், அருள்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கீழ சிந்தலவாடியைச் சேர்ந்தவர் மணிகண்டன் 23. இவர் குளித்தலை கோர்ட் எதிரே உள்ள மெயின் ரோட்டில் பொது இடத்தில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தகாத வார்த்தையால் பேசிக் கொண்டிருந்தார். போலீசார் எச்சரித்தும் கேட்காததால் மணிகண்டன் மீது குளித்தலை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மணலி புதுநகரில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற முரளி என்பவர் கைது செய்யப்பட்டார். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை சாக்லேட், பொம்மை தருவதாகக் கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்று அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் முரளி கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை போலீசார் நாயக்கனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிய மோகன் (28), பசுபதி (31), ஜெயக்குமார் (30), தனிஷ் (22), கார்த்திகை (27), சக்திவேல் (29), திருப்பதி (27) ஆகிய 7 பேரை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Sorry, no posts matched your criteria.