Tamilnadu

News July 8, 2025

நாமக்கல் பகுதியில் மின் தடை ரத்து

image

நாமக்கல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர அத்தியாவசிய மின் பராமரிப்பு பணிகளில் நடைபெற உள்ளதால் நாளை (ஜூலை 9) மின் தடை அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், நிர்வாக காரணங்களாக தற்போது மின்தடை அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது. எனவே, நாளை நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் வழக்கம்போல் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 8, 2025

உங்களுடன் முதல்வர் முகாம் விண்ணப்பம் வழங்கல்

image

திருவாரூர் நகர்ப் பகுதிக்கு உட்பட்ட மேலவடபோக்கித் தெருவில் உங்களுடன் முதல்வர் திட்ட முகாமின் விண்ணப்பத்தினை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், இன்று (ஜூலை 8) மேலவடபோக்கி தெரு பகுதி மக்களின் வீடுகளுக்கு சென்று வழங்கினார். இதில் நகர்மன்ற தலைவர் புவனபிரியா செந்தில், திமுக நகரச் செயலாளர் வாரை பிரகாஷ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

News July 8, 2025

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

image

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வழிகாட்டுதலின்படி, ACTU & IUCAW போலீசார், நேற்று (ஜூலை 07) தேதி வேலூர் விருபாட்சிபுரம் தேசியா மேல் நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகள் மற்றும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, பெண்கள் தொடர்பான உதவி எண் 181, குழந்தைகள் உதவி எண் 1098, குழந்தை திருமணம் மற்றும் போக்சோ குறித்து விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

News July 8, 2025

கரூருக்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சி நிரல்

image

ஜூலை 9ஆம் கரூருக்கு வருகை தரும் துணை முதல்வர் உதயநிதி கலந்து கொள்ளும் நிகழ்ழ்சி நிரல் ▶️காலை 10 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம், ▶️11:30 மகளிர் சுய உதவி குழுவினருடன் கலந்துரையாடல்▶️12:30 கரூர் பிரேம் மஹாலில் இளைஞர் அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை ▶️மாலை 5 மணி திருமாநிலையூர் பேருந்து திறப்பு மற்றும் நலத்திட்டம் ▶️மாலை 6 மணிக்கு ராயனூர் தளபதி திடலில் திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்

News July 8, 2025

செங்கல்பட்டு காவல்துறை எச்சரிக்கை

image

செங்கல்பட்டு காவல்துறை அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.
வாடகை வீடு மோசடிகளில் சிக்காமல் இருக்க செங்கல்பட்டு காவல்துறை சில வழிகளை கூறியுள்ளது. வாடகை ஒப்பந்தத்தை கவனமாக மதிப்பாய்வு செய்யவும். போலியான முகவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி அவசரப்பட்டு ஒப்பந்தம் செய்யவோ, பணம் கொடுத்து ஏமாறவோ வேண்டாம். இதுகுறித்து புகார்கள் தெரிவிக்க அழைக்கவும் மாவட்ட காவல் அலுவலக உதவி எண் ☎️ 7200102014.

News July 8, 2025

மனைவியை நிர்வாணமாக படம் பிடித்த கணவன்

image

மனைவியின் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட போவதாக மிரட்டிய கணவனை மதுரவாயல் போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் 28 வயது இளம்பெண், 26 வயதுடைய கொரியர் நிறுவன சூப்பர்வைசரை கடந்த ஆண்டு திருமணம் செய்து மதுரவாயலில் வசித்து வந்தார். சுற்றுலா செல்லும்போது நிர்வாணமாக புகைப்படம் எடுத்து மிரட்டிய கணவர் மீது மனைவி போலீசில் புகார் அளித்தார்.

News July 8, 2025

திண்டுக்கல்: விளையாட்டு வீரர்களுக்கு முக்கியமான எண்

image

திண்டுக்கல்: விளையாட்டுதுறையில் சர்வதேச தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளை பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் விளையாட்டு வீரர்கள் மாத ஓய்வூதியம் பெற விபரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல் – 624004 என்ற முகவரியிலும், 7401703504 என்ற கைபேசி எண்ணையும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

News July 8, 2025

மின்சார ரயில்கள் ரத்து!

image

கும்மிடிப்பூண்டி – பொன்னேரி இடையே உள்ள ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதனால், சென்னை மூர் மார்க்கெட் – சூலூர்பேட்டை ரயில் மார்க்கத்தில் செல்லும் ஒருசில மின்சார ரயில்கள் இன்று (ஜூலை 8) மற்றும் வரும் 10ஆம் தேதி அன்று ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பயணிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பயணிக்கவும் ரயில்வே துறை கேட்டுக் கொண்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News July 8, 2025

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பணிகள் குறித்து கூட்டம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் வரும் 15.07.2025 முதல் நடைபெறவுள்ளதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் தலைமையில் இன்று (08.07.2025) நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ. சாதனைக்குறள், தனித்துறை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தனஞ்செயன், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான் உள்ளனர்.

News July 8, 2025

கரூரில் மூன்று வயது சிறுமி உயிரிழப்பு

image

கடவூர்: சிந்தாமணிப்பட்டி கீழப்பகுதியை சேர்ந்தவர் அப்துல்ரகுமான் மகள் அல்மாஸ்பானு (03). இவர் நேற்று சிந்தாமணிப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே நின்று கொண்டிருந்தபோது அவ்வழியே முத்துராஜா என்பவர் ஒட்டி வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி சிறுமி உயிரிழந்தார். கரூர் அரசு மருத்துவமனையில் அவரின் உடல் வைக்கப்பட்டது. இது குறித்து சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை!

error: Content is protected !!