Tamilnadu

News July 8, 2025

JUST NOW: அரக்கோணத்தில் ரயில் சேவை பாதிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் – சென்னை ரயில் தடத்தில் உயர் மின்னழுத்த கம்பிகள் அறுந்து விழுந்ததில், 90 நிமிடங்களுக்கு மேலாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மின்கம்பிகளை சரி செய்யும் முயற்சியில், ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அரக்கோணம் ரயில் நிலையத்தில் சதாப்தி , இண்டர்சிட்டி ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

News July 8, 2025

கரூா்: 18 ஆயிரம் பேருக்கு அனுமதி சீட்டு

image

கரூர், ஜூலை 12ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை 65 மையங்களில், 18 ஆயிரத்து 30 போ் தேர்வு எழுத உள்ளனா். இந்த தேர்வர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளுக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வுக்கூடத்தில் அனுமதி சீட்டு உள்ளவர்கள் மட்டுமே மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவா். காலை 9 மணிக்கு மேல் மையங்களுக்குள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News July 8, 2025

ஆளுநரை வரவேற்ற ஆட்சியர்

image

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று (08.07.2025) விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் மையத்திற்கு வருகைபுரிந்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், ஆளுநரை மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார். அவருடன் உதவி ஆட்சியர் (பயிற்சி) ரா. வெங்கடேஷ்வரன், உடனிருந்தார்.

News July 8, 2025

சென்னை தான் முதலிடம்

image

படிப்பை முடித்து விட்டு புதிதாக வேலையில் சேருவோருக்கு அதிக சம்பளத்தை அள்ளித்தரும் பெருநகரங்களில் சென்னை முதலிடத்தை பிடித்துள்ளது. சர்வதேச அளவிலான வேலைவாய்ப்பு சமூக ஊடகமான இன்டீட், தற்போதைய சம்பள போக்கு, ஊழியர்களின் மனநிலை குறித்து ஆய்வு நடத்தியது. இதில், 1,311 நிறுவன உரிமையாளர்கள் உட்பட 3,842 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில், சம்பள கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருப்பது தெரியவந்தது.

News July 8, 2025

கடலூர் ரயில் விபத்து: ரயில்வே சார்பில் நிவாரணம்

image

கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் ரயில் விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படுகாயம் அடைந்த குழந்தைகளுக்கு நிவாரணமாக தலா ரூ.2.5 லட்சமும், லேசான காயம் அடைந்த மாணவருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News July 8, 2025

நாமக்கல் பகுதியில் மின் தடை ரத்து

image

நாமக்கல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர அத்தியாவசிய மின் பராமரிப்பு பணிகளில் நடைபெற உள்ளதால் நாளை (ஜூலை 9) மின் தடை அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், நிர்வாக காரணங்களாக தற்போது மின்தடை அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது. எனவே, நாளை நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் வழக்கம்போல் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 8, 2025

உங்களுடன் முதல்வர் முகாம் விண்ணப்பம் வழங்கல்

image

திருவாரூர் நகர்ப் பகுதிக்கு உட்பட்ட மேலவடபோக்கித் தெருவில் உங்களுடன் முதல்வர் திட்ட முகாமின் விண்ணப்பத்தினை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், இன்று (ஜூலை 8) மேலவடபோக்கி தெரு பகுதி மக்களின் வீடுகளுக்கு சென்று வழங்கினார். இதில் நகர்மன்ற தலைவர் புவனபிரியா செந்தில், திமுக நகரச் செயலாளர் வாரை பிரகாஷ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

News July 8, 2025

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

image

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வழிகாட்டுதலின்படி, ACTU & IUCAW போலீசார், நேற்று (ஜூலை 07) தேதி வேலூர் விருபாட்சிபுரம் தேசியா மேல் நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகள் மற்றும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, பெண்கள் தொடர்பான உதவி எண் 181, குழந்தைகள் உதவி எண் 1098, குழந்தை திருமணம் மற்றும் போக்சோ குறித்து விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

News July 8, 2025

கரூருக்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சி நிரல்

image

ஜூலை 9ஆம் கரூருக்கு வருகை தரும் துணை முதல்வர் உதயநிதி கலந்து கொள்ளும் நிகழ்ழ்சி நிரல் ▶️காலை 10 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம், ▶️11:30 மகளிர் சுய உதவி குழுவினருடன் கலந்துரையாடல்▶️12:30 கரூர் பிரேம் மஹாலில் இளைஞர் அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை ▶️மாலை 5 மணி திருமாநிலையூர் பேருந்து திறப்பு மற்றும் நலத்திட்டம் ▶️மாலை 6 மணிக்கு ராயனூர் தளபதி திடலில் திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்

News July 8, 2025

செங்கல்பட்டு காவல்துறை எச்சரிக்கை

image

செங்கல்பட்டு காவல்துறை அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.
வாடகை வீடு மோசடிகளில் சிக்காமல் இருக்க செங்கல்பட்டு காவல்துறை சில வழிகளை கூறியுள்ளது. வாடகை ஒப்பந்தத்தை கவனமாக மதிப்பாய்வு செய்யவும். போலியான முகவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி அவசரப்பட்டு ஒப்பந்தம் செய்யவோ, பணம் கொடுத்து ஏமாறவோ வேண்டாம். இதுகுறித்து புகார்கள் தெரிவிக்க அழைக்கவும் மாவட்ட காவல் அலுவலக உதவி எண் ☎️ 7200102014.

error: Content is protected !!