Tamilnadu

News July 7, 2025

நாகையில் ஊராட்சிக்கு ரூ.1 கோடி பெற அழைப்பு!

image

நாகை மாவட்டத்தில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் கடைபிடிக்கும் ஊராட்சிக்கு விருது மற்றும் ரூ.1 கோடி தமிழக அரசால் அளிக்கப்பட உள்ளது. தகுதியான ஊராட்சிகள் உரிய ஆவணங்களுடன் நாகை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன அலுவலகத்தில் வருகின்ற ஜூலை 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்க ஆட்சியர் பா. ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.

News July 7, 2025

நாகையில் 227 மனுக்கள் பெற்ற ஆட்சியர்

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர் கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து 227 மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் படி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

News July 7, 2025

நாகை ஆட்சியர் கடும் எச்சரிக்கை!

image

நாகை மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் குழந்தைகளை தத்து எடுப்பதோ வாங்குவதோ அல்லது விற்பதோ சட்டப்படி குற்றம் ஆகும். எனவே இந்த குற்றத்தில் ஈடுபடுவோர் மீது இளம் சிறார் நீதி (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் படி 5 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் எனவும் குற்றத்திற்கு உடந்தையாக இருப்போருக்கும் இதே தண்டனை விதிக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 7, 2025

கரூர்: அரசு கல்லுாரியில் இளநிலை பாடங்களுக்கு நேரடி சேர்க்கை

image

கரூர் மாவட்டம், குளித்தலை அரசு கலைக் கல்லூரியில் 2025–26 கல்வியாண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. பிளஸ் 2 முடித்தவர்கள், இதுவரை கல்லூரியில் சேராத மாணவர்களுக்கு விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் சுஜாதா தெரிவித்துள்ளார். விண்ணப்பிக்காதவர்கள் மாணவர் சேவை மையத்தில் நேரில் வந்து சேர்க்கை பெறலாம். மேலும் வெளியூர் மாணவர்களுக்கு இலவச விடுதி வசதியும் வழங்கப்படுகிறது.

News July 7, 2025

தகவல் கையேடு வழங்கும் பணிகளை பார்வையிட்ட ஆட்சியர்

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின்கீழ் கள்ளக்குறிச்சி நகராட்சி, 20வது வார்டு ஏமப்பேர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், இன்று (07.07.2025) தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணிகளைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.

News July 7, 2025

திருப்பூரில் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் ஏரியா வாரியாக மாவட்டம் முழுவதும், இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டு உள்ளது. அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்.

News July 7, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விபரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று (ஜூலை 7) நாமக்கல் – வெங்கடாச்சலம் ( 9445492164), ராசிபுரம் – கோமளவல்லி ( 8610270472), திருச்செங்கோடு – தீபா ( 9443656999), வேலூர் – கெங்காதரன் ( 6380673283) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர் .

News July 7, 2025

408 மனுக்கள் பெற்ற அரியலூர் ஆட்சியர்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது இக்கூட்டத்தில் உதவித்தொகை இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை அடங்கிய 408 மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News July 7, 2025

திருவாரூரில் ட்ரோன்கள் பறப்பதற்கு தடை

image

தமிழ்நாடு முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு.க.ஸ்டாலின் வரும் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் திருவாரூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதால் திருவாரூர் மாவட்டம் முழுவதும் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் ட்ரோன் கேமராக்கள் பறப்பதற்கு தடை விதித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

News July 7, 2025

சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

சேலம் மாநகரில் இன்று (ஜூலை 07) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.

error: Content is protected !!