India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல்: குமாரமங்கலம் அருகே, இராசிபுரம் மற்றும் நாமக்கல் பிரிவு ரோடு, இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகில் இன்று மாலை 4 மணியளவில், 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவருக்கு தலை மற்றும் கை, கால்களில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த கரட்டுப்பாளையம் போலீசார், அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு முகாம் ஜுலை 2025 மாதம், இரண்டாவது செவ்வாய்கிழமை நாளை (08.07.2025) தென்காசி, மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குநர் முன்னிலையில் நடைபெற உள்ளது. குறைகேட்பு முகாமிலும் ஊரக பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல்.
சென்னை மாநகராட்சியில் ஜூலை 15 முதல் ஆறு வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் தொடங்குகின்றன. தன்னார்வலர்கள் திங்கள்கிழமை முதல் வீடு வீடாக விண்ணப்பப் படிவங்களை வழங்குவார்கள். இம்முகாம்களில் மருத்துவ சேவைகளும் வழங்கப்படும். விண்ணப்பங்கள் 45 நாட்களுக்குள் பரிசீலிக்கப்பட்டு, தேவையான சேவைகள் மற்றும் ஆவண விவரங்கள் பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், பயனாளிகளுக்கு ஆட்சியர் இலவச தையல் இயந்திரங்களை வழங்கினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் கீதா ஆகியோர் உடன் பங்கேற்றனர்.
நாகை மாவட்டம் நாகூரில் நாகநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலின் 29ம் ஆண்டு ஆனி பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகிற ஜூலை 9ம் தேதி நடைபெற உள்ளது. இதில், திரளான பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள கோவில் நிர்வாகத்தினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவிலில் இபிஎஸ் இன்று சாமி தரிசனத்திற்கு பின்னர், விவசாயிகள், நெசவாளர்கள் இடையே கலந்துரையாடினார். அப்போது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி அதிமுக காரமடை ஒன்றிய பொருளாளர் தங்கராஜ் என்பவரிடம் ரூ.1 லட்சம், நெல்லித்துறை ஆனந்த் என்பவரிடம் ரூ.1 லட்சம் என ரூ.2 லட்சத்தை மர்ம நபர், பிக் பாக்கெட் அடித்து சென்றுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் தஞ்சை, திருச்சி உட்பட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். இதற்கு இங்கே <
பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000-ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் திருச்சி உட்பட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். இதற்கு<
பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் திருச்சி உட்பட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். இதற்கு <
பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் புதுவை உட்டபட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். இதற்கு <
Sorry, no posts matched your criteria.