Tamilnadu

News April 29, 2025

BREAKING: குடிநீர் தொட்டியில் மனித மலம்!

image

தி.மலை மாவட்டம் பாணம்பட்டு கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மலத்தை பூசிய நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை தண்ணீர் பிடிக்க வந்த கிராம மக்கள் குடிநீர் தொட்டியில் மலம் பூசப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்த போலீசார் மலத்தை பூசியது யார் என தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மீண்டும் ஒரு வேங்கைவயல் சம்பவம் அரங்கேறியுள்ளது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

News April 29, 2025

வேலூர்: பேட்மிண்டன் விளையாட்டு இலவச பயிற்சி

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வேலூர் பிரிவு சார்பில் காட்பாடியில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் ஸ்டார் அகாடமி பேட்மிண்டன் பயிற்சி மையம் வரும் மே 1-ந் தேதி தொடங்கப்படுகிறது. இதில் 20 ஆண்கள், 20 பெண்கள் என மொத்தம் 40 பேருக்கு பேட்மிண்டன் விளையாட்டு பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது. இதற்கான மாணவர்கள் தேர்வு நேற்று மாவட்ட விளையாட்டு மையத்தில் நடந்தது. ஷேர் பண்ணுங்க

News April 29, 2025

சிறுவர் கொலை வழக்கு: தாய் பரபரப்பு வாக்குமூலம்!

image

வாழப்பாடியை,துக்கியாம்பாளையத்தை சேர்ந்த விஜயகுமாரின் மனைவி இளவரசி. இவர்களது மகன்களான விக்னேஷ்(6), சதீஷ்குமார்(3) ஆகிய இருவரும் நேற்று தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டனர். இது குறித்து வாழப்பாடி போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் கணவர் கண்டித்ததால் குழந்தைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றதாக இளவரசி வாக்குமூலம் அளித்துள்ளார். இளவரசியை போலீசார் கைது செய்தனர்.

News April 29, 2025

வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையின் எச்சரிக்கை

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு தொடர்ச்சியாக எச்சரிக்கை செய்தி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறினால் காவல்துறை கட்டாயம் நடவடிக்கை எடுக்கும் என திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை எடுத்துள்ளது. 

News April 29, 2025

கோவை-தன்பாத் ரெயில் இன்று தாமதமாக புறப்படுமென அறிவிப்பு

image

வாராந்திர கோவை-தன்பாத் சிறப்பு ரயில் (03680) இன்று (செவ்வாய்க்கிழமை) 8 மணி நேரம் 25 நிமிடம் தாமதமாக, கோவையில் இருந்து காலை 7.50 மணிக்கு பதிலாக மாலை 4.15 மணிக்கு புறப்படும் என்று சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது. இணைப்பு ரயில் தாமதம் காரணமாக இந்த நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக தன்பாத் செல்கிறது.

News April 29, 2025

மதுரையில் 4 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

image

மதுரை மாநகரில் பணியாற்றி வரும் 4 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்து கமிஷனர் லோகநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார் அதன்படி மதிச்சியம் இன்ஸ்பெக்டர் வேதவள்ளி மதுரை டவுன் மகளிர் காவல் நிலையத்திற்கும் மதுரை டவுன் மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய விமலா அரசு ஆஸ்பத்திரிக்கும் இதுபோல் விருதுநகர் மாவட்ட இன்ஸ்பெக்டர் செல்வி கூடல் புதூருக்கும் இங்கு பணியாற்றிய பாலமுருகன் மதிச்சியத்திற்கும் மாற்றப்பட்டனர்.

News April 29, 2025

பரமக்குடிக்கு உள்ளூர் விடுமுறை : கலெக்டர் அறிவிப்பு

image

பரமக்குடி ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் சித்திரை திருவிழா கள்ளழகர் குதிரை வாகனத்தில் பரமக்குடி வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு மே.11 இரவு துவங்கி மறுநாள் (மே.12) அதிகாலை வரை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு மே.12 பரமக்குடி வட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இதனை ஈடு செய்யும் பொருட்டு 24.5.2025 வேலைநாளாக அறிவித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

News April 29, 2025

தூத்துக்குடி நீதிபதிகள் பணியிட மாற்றம்

image

தூத்துக்குடி உட்பட தமிழ்நாடு முழுவதும் 27 மாவட்ட நீதிபதிகள் பல்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மகளிர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த மாதவ ராமானுஜம் மதுரை மாவட்டம் மூன்றாவது கூடுதல் நீதிபதியாகவும், தூத்துக்குடி குடும்ப நல நீதிமன்ற நீதிபதி வி சுரேஷ் ஈரோடு மாவட்ட இரண்டாவது கூடுதல் நீதிபதியாக பணியிடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

News April 29, 2025

விழுப்புரத்தில் பார்க்க வேண்டிய அம்மன் கோயில்

image

▶️ அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், மேல்மலையனூர்

▶️ அவலூர்பேட்டை சாமுண்டீஸ்வரியம்மன் கோயில்

▶️ வீரவாழியம்மன் திருக்கோயில், விழுப்புரம்

▶️ மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில்

▶️ குமாரகுப்பம் ஜலத்துவாழியம்மன் கோயில்

▶️ திண்டிவனம் அஞ்சாத்தம்மன் கோயில்

▶️ ஓங்கூர் திரௌபதியம்மன் கோயில்

▶️ வளவனூர் கோணம்மன் கோயில்

நீங்கள் செல்ல விரும்பும் நபர்களுடன் ஷேர் பண்ணுங்க

News April 29, 2025

310 ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் 

image

நாமக்கல் மாவட்டத்திலுள்ள 310 கிராம ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினத்தன்று (மே.1) காலை 11.00 மணி அளவில் கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது.இதில் கிராம நிர்வாகம் மற்றும் பொதுசெலவினம் குறித்து விவாதிக்கப்படும். இணையவழி மனைப்பிரிவு பட்டா மற்றும் கட்டட அனுமதி வழக்குதல்,வரி மற்றும் வரியில்லா வரியினங்களை இணையவழி செலுத்துதல் குறித்து விவாதிக்கப்படும் என ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!