India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள வெத்தியார்வெட்டு கிராமத்தைச் சேர்ந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் காசாளராக பணியாற்றி வருபவர் கண்ணன்(54). இவர் நேற்று காலை 10 மணியளவில் அலுவலகத்திற்கு தனது பைக்கில் சத்திரம் கிராமம் அருகே சென்றபோது சாலையின் குறுக்கே திடீரென 4 காட்டுப்பன்றிகள் ஓடி வந்து பைக் மீது மோதியது. இந்த விபத்தில் நிலைத்தடுமாறிய கண்ணன் கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் சீயப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் அருணா தம்பதியரின் மூத்த மகள் திலகவதி திருவண்ணாமலை கம்பன் கல்லூரியில் பி காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து, தகவல் கிடைத்த மேல்மலையனூர் போலீசார் சடலத்தைப் பெற்று செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்னவாசல் அருகே உள்ள கீழசித்தகுடிபட்டியைச் சேர்ந்த பிரேம்குமார் (30) என்பவருக்கு சொந்தமான 4 சக்கர வாகனத்தை நேற்று இரவு வீட்டின் அருகில் இருக்கும் செட்டில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நள்ளிரவில் 4 சக்கர வாகனம் திடீரென தீ பிடித்து எரிந்து நாசமானது. இதுகுறித்த புகாரின் பேரில் அன்னவாசல் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர், தாராபுரத்தை அடுத்த அலங்கியம் அந்தோணியார் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர் (25). இவர் தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு, அலங்கியம் அருகே உள்ள தேங்காய் நார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார். இவர் ஆன்லைனில் வாங்கிய கடனை செலுத்த முடியாததால் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த ஸ்ரீதர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நீலகிரி, நிலக்கோட்டை, சுல்தாம்பத்தேரி தேசிய நெடுஞ்சாலையில், நேற்று மாலை கேரள மாநிலம் தலச்சேரியை சேர்ந்த 2 இளைஞர்கள் பைக்கில் சென்றுள்ளனர். அப்போது எதிரே வந்த அரசு பேருந்தில், பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும், மற்றவர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து, நிலக்கோட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் விரிஞ்சிபுரத்தில், 1,000 ஆண்டுகள் பழைமையான மரகதாம்பிகை உடனுறை மார்க்கபந்தீஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது. கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று, பெண்கள் கோயில் குளத்தில் நீராடி, ஈரச் சேலையுடன் கோயிலில் தங்கி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பேய், பிசாசு, பில்லி, சூனியம், வலிப்பு, தீவினைகள் நீங்குவதோடு திருமண வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கடம்பன் குளம் அருகே நான்கு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்ததோடு கணவன் மனைவி தற்கொலைக்கு முயற்சி; கணவன் கவலைக்கிடம், மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுக்கு ஆறு மருத்துவர்கள் கொண்ட குழு ஆசாரி பள்ளம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு எலவமலையை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி பிரசவத்திற்காக, ஜெயம்கொண்டத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதற்கிடையே சேகருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு, அவருடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண் சேகரை பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சேகர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்து அழககவுண்டம்பட்டியைச் சேர்ந்த நந்தகுமார் டூவீலர் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை பணி முடிந்து வீட்டிற்கு சென்றபோது வடக்கு இடையபட்டி என்ற இடத்தில் தண்ணீர் பிடித்து சென்ற தள்ளு வண்டி மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்து ஏற்பட்டதில் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து புத்தாநத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நாங்குநேரியில் ஜாதி வன்மத்தால் தாக்கப்பட்ட மாணவர் சின்னத்துரை மீது சமீபத்தில் மீண்டும் தாக்குதல் நடைபெற்றது. மர்ம நபர்கள் இன்ஸ்டாகிராமில் பழகி அவரை கொக்கிரகுளம் வசந்தம் நகர் பகுதிக்கு வரவழைத்து தாக்கியது தெரியவந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் பாளையங்கோட்டை போலீசார் இன்று சங்கரநாராயணன் சக்திவேல் ஆகிய இருவரை கைது செய்துள்ளதாகவும் மேலும் இருவரை தேடி வருவதாகவும் மாநகர காவல் துறை இன்று தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.