India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூர் மாவட்டத்தில் புதுப்பட்டினம் கிராமம் உள்ளது. இங்குள்ள கடற்கரை பகுதி கடந்த சில மாதங்களாக பிரபலமடைந்து வருகிறது. அமைதியான சூழலில் தென்னந்தோப்புகள். மனம் வருடும் தென்றல், 2 கிமீ தொலைவிற்கு வெண்ணிற மலர் பரப்பு, ஆர்ப்பாட்டம் இல்லாத அலைகளென அனைவரையும் இந்த கடற்கரை தொடர்ந்து வசீகரித்து வருகிறது. இந்த கோடையில் குடும்பம் நற்றும் நண்பர்களுடன் நேரத்தைச் செலவிட இதை விட நல்ல இடம் கிடைக்குமா? SHARE IT.
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு துறை அலுவலர்களின் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் 04343239400, மாவட்ட வருவாய் அலுவலர் 04343231300, திட்ட அலுவலர் 04343239364, மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் 04343239030, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் 04343235655, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் 04343235591, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் 04343238777. ஷேர் பண்ணுங்க
முக்கனியில் ஒன்றான மாம்பழத்தை பழுக்க வைக்க கார்பைடு கல்லை பயன்படுத்துகிறார்கள். இப்படி பழுக்க வைத்த பழத்தை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும். கல்லில் பழுக்க வைத்த மாம்பழத்தை கண்டுபிடிப்பது மிகவும் எளிது. மாம்பழத்தை தண்ணீரில் போட்டுப் பார்த்தால், இயற்கையாக பழுத்த மாம்பழம் தண்ணீரில் மூழ்கும். ஆனால் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் மிதக்கும். *SHARE IT*
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் உள்ள மூலவர் சுமார் 6 அடி உயரமுள்ள உளி படாத சுயம்புத் திருமேனியாக பாதி ஆணாகவும், பாதி பெண்ணாகவும் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். சிவன், சக்தி சேர்ந்த வடிவம் என்பதால் வலதுபுறம் வேட்டியும், இடதுபுறம் சேலையும் அணிவிக்கப்படுகிறது. இக்கோவில் உள்ள திருச்செங்கோடு மலை ஒருபுறம் பார்க்கும் போது ஆண் போலவும், மறுபுறம் பெண் போலவும் தோற்றம் அளிக்கிறது. SHARE பண்ணுங்க!
திருச்சியில் அடிக்கிற வெயிலுக்கு இதமா எங்கயாச்சும் போய்ட்டு வந்தா நல்லா இருக்கும் என்று தோன்றுகிறதா? கவலையை விடுங்க. திருச்சிக்கு வடக்கே 80 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பச்சமலை, ஒரு பசுமையான மலைத்தொடராகும். நீர்வீழ்ச்சிகள், பசுமையான தோட்டங்கள் என பச்சை மலைக்கு ஏராளமான சிறப்பம்சங்கள் உள்ளன. திருச்சியில் இருந்து ஒரே நாளில் கிளம்பி சுற்றிப்பார்த்துவிட்டு வீடு திரும்ப இது சூப்பர் இடமாகும். SHARE!
கொங்கு மண்டலத்துக்கே காவல் தெய்வமாகத் திகழ்பவள் கொங்கலம்மன். ஈரோடு, மணிக்கூண்டு பகுதிக்கு அருகில் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் மிகவும் பழைமை வாய்ந்தது என்பதற்கு ஆதாரமாக பல கல்வெட்டுகளும் உள்ளன. இங்கு சீட்டு எழுதியும், பூ போட்டும் அருள்வாக்கு கேட்கும் வழக்கம் நிலவி வருகிறது. இங்கு கொங்கலம்மனை வழிபட்டால், எந்த ஒரு பிரச்னைக்கும் சரியான நீதி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. SHARE IT!
பெரம்பலூர், லாடபுரம் கிராமத்திற்கு அருகே உள்ள பச்சை மலையில் எழில் மிகு மயிலூற்று அருவி உள்ளது. கோடையில் நண்பர்களுடனும் குடும்பத்துடனும் அசதி இல்லாத ஒரு நாள் சுற்றுலாவிற்கு இந்த அருவிதான் சொர்க்கம். பருவமழையில் செழித்து கோடையில் நமக்கு அமுதாக மாறும் இந்த அருவிவை தேடி மக்கள் படையெடுத்து வருகின்றனர். பெரம்பலூர் மட்டுமின்றி திருச்சி கரூர் போன்ற அண்டை மாவட்டங்களிலிருந்தும் மக்கள் வருகின்றனர். SHARE IT.
தமிழ்நாடு சட்டசபையில் நேற்று முன்தினம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் சுற்றுலாத்துறை சார்பில் புதிய அறிவிப்புகளை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் வெளியிட்டார். அதில் நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகில் உள்ள பைக்காரா உள்கட்டமைப்பு வசதி ரூ.20 கோடியில் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கனியில் ஒன்றான மாம்பழத்தை பழுக்க வைக்க கார்பைடு கல்லை பயன்படுத்துகிறார்கள். இப்படி பழுக்க வைத்த பழத்தை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும். கல்லில் பழுக்க வைத்த மாம்பழத்தை கண்டுபிடிப்பது மிகவும் எளிது. மாம்பழத்தை தண்ணீரில் போட்டுப் பார்த்தால், இயற்கையாக பழுத்த மாம்பழம் தண்ணீரில் மூழ்கும். ஆனால் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் மிதக்கும். *SHARE IT*
முக்கனியில் ஒன்றான மாம்பழத்தை பழுக்க வைக்க கார்பைடு கல்லை பயன்படுத்துகிறார்கள். இப்படி பழுக்க வைத்த பழத்தை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும். கல்லில் பழுக்க வைத்த மாம்பழத்தை கண்டுபிடிப்பது மிகவும் எளிது. மாம்பழத்தை தண்ணீரில் போட்டுப் பார்த்தால், இயற்கையாக பழுத்த மாம்பழம் தண்ணீரில் மூழ்கும். ஆனால் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் மிதக்கும். *SHARE IT*
Sorry, no posts matched your criteria.