India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தண்டவாள புதுப்பித்தல் பணிகள் காரணமாக, ஆக.22, 26-ல் கண்ணூர்-கோவை எக்ஸ்பிரஸ் ரயில் பாலக்காடு வரை மட்டுமே இயக்கப்படும். பாலக்காடு முதல் கோவை வரை இயக்கப்படாது. கோவை- மதுரை எக்ஸ்பிரஸ் ரயில், பொள்ளாச்சியில் இருந்து புறப்படும். போத்தனூர்- மேட்டுப்பாளையம் ரயில் கோவையில் இருந்து புறப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.
விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலம் நடத்துவது தொடர்பாக டிஎஸ்பி தலைமையில் ஆலோசனை இன்று (ஆக, 20) கூட்டம் நடைபெற்றது. இதில் வானூர் பகுதி அரசியல் பிரமுகர்கள் மற்றும் விழா குழுவினர் பங்கேற்றனர். அரசின் நெறிமுறைகளை பின்பற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது. சண்டைகள் மற்றும் பாதிப்புகள் வராமல் தடுக்க ஆலோசனை நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு கூட்டுறவு துறையால் அறிவிக்கப்பட்டுள்ள உதவியாளர் இளநிலை உதவியாளர் 2513 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் பயன்பெறும் வகையில் திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் குடும்ப அட்டை, ஆதார் நகல் கொண்டு நேரில் அணுகி பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 30 சதவீதம் மானியத்தில் கடன் உதவி வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட நாச்சியார் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. வங்கியை ஊழியர்கள் முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர். ரூ.54,80,700, காசோலையை மாவட்ட ஆட்சியர் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வழங்கினார்.
திருக்குறள் பயிற்சி வகுப்புகளில் பொதுமக்கள், இளைஞர்கள், பள்ளி-கல்லூரி மாணாக்கர்கள் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி பெற்று பயன்பெறலாம். மேலும், பயிற்சி நடைபெறுமிடம், நாள், நேரம் குறித்த முழு விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயற்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது 04575-241487 என்ற எண்ணிலோ விபரங்கள் பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (ஆக.21) ஸ்ரீரங்கம் ஆண்டவன் கல்லூரி, பாலக்கரை மரக்கடை வாட்டர் டேங்க், துறையூர் செங்குந்தர் ஆரம்ப பள்ளி, கண்ணுடையான்பட்டி சமுதாய கூடம், லால்குடி அய்யனார் கோவில், வையம்வட்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு மனு வழங்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் எஸ்.சி, எஸ்.டி, எம்.பி.சி, டி.என்.சி, பி.சி, பி.சி.எம் ஆகிய வகுப்புகளை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து www.drbtry.in என்ற தளத்தில் வரும் 29-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், 2021ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 5,901 நோயாளிகளுக்கு சுமார் ரூ.6.27 கோடி மதிப்பிலான, மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது என பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அருண்ராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (20/08/2025) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.