India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த இம்ரான்(38), லாலி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்றபோது, அங்கு வந்த ராஜனுடன் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜன், இம்ரானின் கன்னத்தை கடித்து துப்பினார். காயமடைந்த இம்ரான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அட்சய திருதியையான இன்று (ஏப்ரல் 30) செய்யப்படும் எந்தவொரு முதலீடும் உங்களுக்கு செழிப்பை தரும். அதுவும் மங்களகரமான பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டம். உங்கள் வீட்டின் அருகில் உள்ள லட்சுமி, பெருமாள் கோயிலுக்கு சென்றுவிட்டு வாங்குவது நல்லது. காலை 9:30 – 10:30 மற்றும் மாலை 4:30 – 5:30 மணி வரை நல்ல நேரம் என்பதால் அந்த நேரத்தில் தங்கம் வாங்கலாம். இல்லாவிட்டாலும் கல் உப்பாவது வாங்கிவிடுங்கள். ஷேர் பண்ணுங்க.
ராமகவுண்டம்பட்டி வடக்கிபட்டியைச் சேர்ந்தவர் அழகன், தொழிலாளியான இவர், மதுரை-திருச்சி நெடுஞ்சாலையில் ராமகவுண்டம்பட்டி அருகே திங்கள்கிழமை சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கார் மோதியதில் அழகன் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் அழகன் உயிரிழந்தார். இதையடுத்து அங்கு வந்த போலீஸார் சடலத்தை கைப்பற்றி இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
அட்சய திருதியையான இன்று (ஏப்ரல் 30) செய்யப்படும் எந்தவொரு முதலீடும் உங்களுக்கு செழிப்பை தரும். அதுவும் மங்களகரமான பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டம். உங்கள் வீட்டின் அருகில் உள்ள லட்சுமி, பெருமாள் கோயிலுக்கு சென்றுவிட்டு வாங்குவது நல்லது. காலை 9:30 – 10:30 மற்றும் மாலை 4:30 – 5:30 மணி வரை நல்ல நேரம் என்பதால் அந்த நேரத்தில் தங்கம் வாங்கலாம். இல்லாவிட்டாலும் கல் உப்பாவது வாங்கிவிடுங்கள். ஷேர் பண்ணுங்க.
அன்னை மகாலட்சுமி செல்வம், வளங்கள் மற்றும் மகிழ்ச்சியின் அடையாளம் ஆவார். அந்தவகையில் அக்ஷய திருதியான இன்று(ஏப்.30) வேலூரில் உள்ள மகாலட்சுமி (அ) பெருமாள் கோயிலுக்கு சென்று விட்டு தங்கம் வாங்க செல்லுங்கள். காலை 9:30 – 10:30 மற்றும் மாலை 4:30 – 5:30 மணி வரை நல்ல நேரம் என்பதால் அந்த நேரத்தில் தங்கம் வாங்கலாம். முடியாதவர்கள் கல் உப்பு வாங்கலாம். ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினால் சிறப்பு. ஷேர் பண்ணுங்க
அட்சய திருதியையான இன்று (ஏப்ரல் 30) செய்யப்படும் எந்தவொரு முதலீடும் உங்களுக்கு செழிப்பை தரும். அதுவும் மங்களகரமான பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டம். உங்கள் வீட்டின் அருகில் உள்ள லட்சுமி, பெருமாள் கோயிலுக்கு சென்றுவிட்டு வாங்குவது நல்லது. காலை 9:30 – 10:30 மற்றும் மாலை 4:30 – 5:30 மணி வரை நல்ல நேரம் என்பதால் அந்த நேரத்தில் தங்கம் வாங்கலாம். இல்லாவிட்டாலும் கல் உப்பாவது வாங்கிவிடுங்கள். ஷேர் பண்ணுங்க
நாகை மாவட்டத்தில் கிறித்துவ மகளிர் நலனுக்காக, ஆட்சியர் தலைமையில் கிறித்துவ மகளிர் உதவும் சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சங்கம் திரட்டும் நன்கொடை நிதி ஆதாரத்திற்கு ஏற்ப ஒவ்வொரு சங்கத்திற்கும் அதிகபட்சம் ரூ.20.00 லட்சம் வரை அரசால் இணை மானியம் 1:2 என்ற விகிதாச்சாரத்தில் வழங்கப்படுகிறது. இந்நிதியிலிருந்து ஏழ்மையில் உள்ள மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை fl1/fl2/fl3/fl3A/fl3AA மற்றும் fl11 உரிமம் பெற்ற கடைகள் மற்றும் மது கூடங்கள் வியாழக்கிழமை மே தினத்தை முன்னிட்டு விற்பனை இல்லாத நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே, திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் மதுக்கடைகள் மற்றும் மது கூடங்கள் 01.05.2025 அன்று தற்காலிகமாக மூடுவதற்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் பென்மெட்சா வெங்கட் அகில் வர்மா (26). இவர் பயிற்சிக்காக ஊட்டி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவரது உறவினர்கள் ஊட்டிக்கு சுற்றுலா வந்துள்ளனர். காந்தல் முக்கோணம் பகுதியில் காரை நிறுத்திச் சென்று, மீண்டும் வந்து பார்த்தபோது காரின் பின்புற கண்ணாடி உடைக்கப்பட்டு 20 பவுன் நகை, ரூ.7 லட்சம் ரொக்கம் திருடு போயுள்ளது. இதுகுறித்த ஊட்டி மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
சிவகங்கை மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட மற்றும் திருட்டு வழக்குகளில் ஈடுபட்டதாக ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நான்கு மாதங்களில் சுமார் 57 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.