India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே கைனூரில் உள்ள காட்டுப்பிள்ளையார் கோயிலில் வெண்கல மாணிக்கவாசகர் சிலை மற்றும் பூஜைப் பொருட்கள் திருடப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஜனனி (30) என்பவர் நேற்று (ஏப்ரல்.17) கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் போலீஸாரிடமிருந்து தப்பியோடினார். சுமார் 3 மணி நேர தேடலுக்குப் பின் பொய்ப்பாக்கம் பகுதியில் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை, கூத்தாண்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (45). இவரது பெரியப்பா மகள் கடந்த வாரம் உயிரிழந்த நிலையில் காரியம் முடிந்து கோவிலில் வழிபாடு செய்ய குடும்பத்துடன் வந்துள்ளார். கனகநாச்சியம்மன் கோவிலில் சடங்குகளை முடித்துவிட்டு தடுப்பணையில் குளிக்க சென்ற போது சண்முகம் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.தகவலறிந்த தீயணைப்பு துறையினர் 5 மணி நேரத்திற்கு மேல் போராடி உடலை மீட்டனர்.
நெல்லையிலிருந்து நேற்று இரவு நாகர்கோவில் வரசேரிக்கு வந்த அரசு பேருந்தில் அனைத்து பயணிகளும் இறங்கிய பின்னர் 50 வயதான ஆண் மட்டும் இருக்கையில் சாய்ந்தபடி இருந்துள்ளார். தூக்கிய நிலையில் இருப்பதாக நினைத்து அவரை நடத்துனர் எழுப்பிய போது அவர் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த வடசேரி போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்தணி – சித்தூர் சாலையில் உள்ள கமலா தியேட்டர் அருகே பாரத ஸ்டேட் வங்கி ATM மையத்தில், நேற்று (ஏப்ரல் 17) ஒருவர் தில்லு முல்லு செய்து பணம் திருட முயற்சித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருத்தணி போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் ஆந்திராவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பதும், பணம் எடுக்க வருவோரிடம் ATM கார்டை மாற்றி கொடுத்து கொள்ளையடித்து வந்தது தெரியவந்துள்ளது.
நெல்லை, டவுன் தொட்டி பாலத்தெருவைச் சேர்ந்த முன்னாள் காவல் உதவி அதிகாரி ஜாகிர் உசேன் பிஜிலி கடந்த மாதம் 18-ம் தேதி இடப்பிரச்சனை காரணமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியான நூர்நிஷா என்பவர் தலைமறைவாக இருந்தார். நேற்று (ஏப்.17) மேலப்பாளையத்தில் நெல்லை தனிப்படையினர் நூர்நிஷாவை கைது செய்தனர். அவர் நெல்லைக்கு அழைத்து வரப்படுகிறார்.
விருதாச்சலம் அடுத்த கவணை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் அப்பு சட்டப்படிப்பு முடித்துள்ளார். இவர் விஜயசாந்தி என்பவரை 4 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்த நிலையில், நேற்று தந்தை செல்வராஜ் உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கில் தந்தையின் கைகளால் தாலியை எடுத்து கொடுக்க வைத்து, அப்பு காதலியை திருமணம் செய்து கொண்டார். இச்சம்பவம் உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அண்ணா சதுக்கத்திலிருந்து பூந்தமல்லி நோக்கி சென்ற 25G அரசுப் பேருந்து, குமணன்சாவடி அருகே உள்ள மெட்ரோ ரயில் தூணில் மோதி விபத்துகுள்ளானது. இந்த விபத்தில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி நொறுங்கிய நிலையில், டிரைவர் உட்பட 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். டிரைவர் தூக்க கலக்கத்தில் தடுப்பு சுவற்றில் மோதினாரா? அல்லது பேருந்து பழுது ஏற்பட்டு மோதியதா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை வீரகேரளத்தை சேர்ந்த 34 வயதான இளைஞர், சீரநாயக்கன்பாளையத்தில் நின்றிருந்தார். அப்போது, அங்கு வந்த பெண் ஒருவர் தன்னிடம் அழகான பெண்கள் உள்ளதாகவும், பணம் கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த அவர், பணம் எடுப்பதாக கூறி விட்டு, ஆர்.எஸ்.புரம் போலீசில் புகாரளித்தார். அங்கு சென்ற போலீசார் கரூரை சேர்ந்த லட்சுமி என்ற பெண் புரோக்கரை கைது செய்தனர்.
சிங்கம்புணரி அருகே உள்ள நடு அம்மாச்சிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் குமார் கொத்தனார் (45) . திருப்பத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வேலை செய்யும் போது, அப்பகுதியில் உள்ள வசித்து வரும் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாயார் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திண்டுக்கல் நகர் மற்றும் வேடசந்தூர் வட்டங்களில் 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் பலத்த வெடிச்சத்தம் போன்ற ஒலி கேட்கப்பட்டது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து புவியியல் மற்றும் நிலநடுக்கவியல் துறையின் நிபுணர்கள் குழு ஆய்வுகள் மேற்கொண்டதில், நிலநடுக்கத்துக்கு தொடர்புடையதல்ல என அறிக்கை சமர்ப்பித்தனர். பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என ஆட்சியார் சரவணன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.