Tamilnadu

News April 18, 2025

பெண்களுக்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

image

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வரும் ஏப்ரல் 25  அன்று காலை 09:00 மணிக்கு தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் பெண்களுக்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்ட பெண்கள் 2023, 2024, 2025 ஆண்டுகளில் 12ஆம் வகுப்பு டிப்ளமோ,பட்டப்படிப்பு படிப்பை முடித்த மாணவிகளுக்கு மட்டும்  பங்கேற்கலாம் என கூறப்பட்டுள்ளது.

News April 18, 2025

புதுக்கோட்டையில் உள்ளூர் விடுமுறை: தேதி மாற்றம்

image

புதுக்கோட்டை, நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழா முன்னிட்டு,  கடந்த 7ஆம் தேதி புதுகை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. அதனை ஈடுசெய்யும் விதமாக நாளை (ஏப்.19) பணி நாளாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தொடர் விடுமுறை காரணமாக, ஏப்.26ஆம் தேதி பணி நாளாக ஆக மாற்றி மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார். இதனை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க..

News April 18, 2025

மதுரை மாவட்ட உதவி எண்கள் அறிவிப்பு

image

மதுரை மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் உதவிக்காக தொலைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை -1077
▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 0452 –2546100
▶️காவல் -100
▶️விபத்து -108
▶️தீ தடுப்பு – 101
▶️குழந்தைகள் பாதுகாப்பு -1098
▶️மின்தடை உதவி எண் – 1912
▶️பேரிடர் கால உதவிக்கு – 1077
உங்க நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்தவும். அபத்தில் உள்ளவர்களுக்கு இது பெரிய உதவியாக இருக்கும்

News April 18, 2025

நலத்திட்ட உதவி வழங்குகிறார் முதல்வர்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 18) நடைபெறும் அரசு விழாவில், 2 லட்சம் பேருக்கு ரூ.357 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பத்தில் நடக்கும் இந்த விழாவில், முதல்வர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர், ரூ.418 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட பணிகளை திறந்து வைக்க உள்ளார். ரூ.390 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளை திறந்து வைக்கிறார்.

News April 18, 2025

மாமல்லபுரத்தில் ஒருநாள் இலவச அனுமதி

image

உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னங்களை சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்க்க இன்று (18.04.2025) ஒருநாள் மட்டும் இலவச அனுமதி என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு இன்று பொதுமக்கள் அனைவரும் இந்த இலவச அனுமதியை பயன்படுத்தி மாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னங்களை பார்வையிடலாம். நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

News April 18, 2025

சேலத்தில் ரூ.35,000 சம்பளத்தில் வேலை !

image

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் நேற்று(ஏப்.17) வெளியிட்டுள்ள அறிக்கையில், திட்ட மேலாண்மை அலகில் பணிபுரிய அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Tech, M.B.A., M.Sc., படித்து முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தற்காலிக பணிக்காக மாதம் ரூ.35,000 மதிப்பூதியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு 25ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News April 18, 2025

நாகையில் கோடை விடுமுறைக்கு ஏற்ற இடங்கள்

image

கோடை விடுமுறை நெருங்கும் நிலையில் நாகையில் நீங்கள் செல்ல வேண்டிய இடங்கள்: 1. வேளாங்கண்ணி மாதா கோவில், 2. வேளாங்கண்ணி கடற்கரை, 3. காயாரோகணசுவாமி கோவில், 4.கோடியக்கரை கடற்கரை , 5.கோடியக்கரை சரணாலயம், 6.வேதாரண்யம் கடற்கரை, 7. சிக்கல், 8.காயாரோகணசுவாமி கோவில் ஆகியவை கோடைகாலத்திற்கு ஏற்ற இடங்கள் ஆகும். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.. உங்களுக்கு தெரிஞ்ச இடத்தை கமெண்ட் பண்ணுங்க

News April 18, 2025

தூத்துக்குடி காவல்துறை எச்சரிக்கை விழிப்புணர்வு

image

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று எச்சரிக்கை விழிப்புணர்வு ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் பொதுமக்கள் இணையங்களில் வரும் பரிசு கூப்பன் லக்கி வின்னர் பண வெகுமதி போன்ற போலியான விளம்பரங்களை பார்த்து அதன் லிங்குகளை கிளிக் செய்து ஏமாற வேண்டாம். இது போன்ற சைபர் கிரைம் தொடர்பாக 1930 க்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

News April 18, 2025

பொதுமக்கள் தர்ம அடி வடமாநில வாலிபர் இறப்பு

image

ஈரோடு கொல்லம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியம்- ஜெயலட்சுமி தம்பதியினர் தனியாக வசித்து வருகின்றனர். சுப்பிரமணியன் வீட்டிற்கு இன்று பிற்பகலில், வந்த வட மாநில இளைஞர் ஒருவர் கதவை தட்டி உள்ளார்.சுப்பிரமணியை கொலை செய்ய முயற்சி செய்தபோது ஜெயலட்சுமி கூச்சலிட அக்கம் பக்கத்தினர் வந்து வாலிபரை பிடித்து அடிக்க மயக்கமடைத்தார்.பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். போலீஸ்சார் விசாரணை மேற்கொண்டனர்.

News April 18, 2025

சென்னையில் மழைக்கு வாய்ப்பு

image

சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புனித வெள்ளியான இன்று (ஏப்ரல் 18) பெருநகர் மற்றும் புறநகரில் ஒருசில பகுதிகளில் சாரல் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விடுமுறையை முன்னிட்டு வெளியே செல்லும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போது வெயில் அடித்தாலும், இன்றைக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!