Tamilnadu

News April 30, 2025

செல்வத்தை அள்ளித் தரும் அட்சயபுரீஸ்வரர் கோவில்

image

தஞ்சை, விளங்குளத்தில் அட்சயபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது . இக்கோயிலில் சாமிக்கு விளக்கு ஏற்றி, சிறப்பு அபிஷேகம் செய்தால் நினைத்தது நிச்சயம் நடக்கும் என்பது ஐதீகம். மேலும் இங்கு அட்சய திரிதியை நாளில் வேண்டினால் செல்வம் செழிக்கும், நீண்ட ஆயுள் பெருகும், கல்வி போன்றவற்றில் சிறக்கலாம் என்பது நம்பிக்கையாகும். அட்சய திரிதியை நாளில் உங்கள் நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் SHARE பண்ணுங்க

News April 30, 2025

800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

image

பரமக்குடி அருகே எமனேஸ்வரம் சிவன் கோயிலில் பாண்டியர் காலத்து 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு தலைவர் எமனேஸ்வரம் சிவன் கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர். அம்மன் சன்னதியில் உள்ள முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் கல்வெட்டு தான் இக்கோயிலில் பழமையானது. எனவே இங்குள்ள கல்வெட்டு கி.பி13 ஆம் நுாற்றாண்டு சுந்தரபாண்டியன் காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம்.*ஷேர் பண்ணுங்க

News April 30, 2025

வேலூரில் விசிக பிரமுகர் வெட்டி படுகொலை

image

வேலூர் அடுத்த ஆவாரம்பாளையம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சரத்குமார் (32). இவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர். இது குறித்து தகவலறிந்த அரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின், தொழிலாளர் விடுதலை முன்னணி அமைப்பாளராக உள்ளார்.

News April 30, 2025

71ஆவது இளைய பீடாதிபதி பொறுப்பேற்பு

image

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71ஆவது இளைய பீடாதிபதியாக ஆந்திராவைச் சேர்ந்த கணேச சர்மா டிராவிட் அட்சய திருதியை நாளான இன்று (ஏப்ரல் 30) பொறுப்பேற்று கொண்டார். மடத்தின் தற்போதைய (70ஆவது) பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், காமாட்சி அம்மன் கோயில் குளத்தில் சன்யாச ஆசிரம தீட்சை வழங்கினார். பின்னர் இளையமடாதிபதிக்கு உபதேசம் செய்யப்பட்டு 71ஆவது பிடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

News April 30, 2025

சாலையை கடக்க முயன்ற பாட்டி, பேரன் கார் மோதி பலி 

image

செங்கத்தை அடுத்த தானகவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்த சித்ரா (60). இவர், அம்மாபாளையம் கிராமத்தில் நேற்று ஊரக திட்ட வேலைக்காக சென்றார். அப்போது, அவரது பேரன் யஷ்வந்தையும்(2) உடன் அழைத்துச் சென்றார். தானகவுண்டன் புதூர் பேருந்து நிறுத்தம் அருகே யஷ்வந்துடன் சித்ரா சாலையைக் கடக்க முயன்றபோது, அவர்கள் மீது தி.மலையில் இருந்து ஒசூர் நோக்கிச் சென்ற கார் மோதிய விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

News April 30, 2025

தேனி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

image

தேனி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Helper(பெண்), Night Watchman(ஆண்) பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தமாக 2 காலிபணியிடங்களுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நாள் 30-04-2025 முதல் 07-05-2025 வரை. தகுதியான நபர்களுக்கு Rs.4,500 வரை சம்பளம் கிடைக்கும். இதற்கு விண்ணபிக்க 8ம் வகுப்பு தேர்ச்சியும் 42வயது மிகாமல் இருத்தல் அவசியம். <>லிங்க்<<>> *ஷேர் பண்ணுங்க

News April 30, 2025

கிருஷ்ணகிரியில் பயங்கர விபத்தில் பெண் பலி

image

சூளகிரி பகுதியில், நேற்று (ஏப்ரல்.29) இரவு 9 மணி அளவில் சரக்கு ஏற்றி வந்த டிப்பர் லாரி முன்னால் சென்ற இரண்டு சக்கர வாகனம் மீது மோதிய பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு சக்கர வாகனத்தில் பயணித்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் உத்தனப்பள்ளி பகுதியில் 200க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் அதிவேகமாக இயக்கப்படுவதாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

News April 30, 2025

ரூ.6,000 ஊக்கத்தொகையுடன் சேலத்தில் இலவச பயிற்சி

image

சேலம் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி கழகம் சார்பில் இலவச சாஃப்ட் ஸ்கில் (Soft skills) பயிற்சி வகுப்புகளை நடைபெறவுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் மூலம், மாணவர்கள் 20 நாட்களில் நேர்காணல்களில் பங்கேற்பதற்கான திறன்களைப் பெற முடியும். மேலும், பயிற்சி முடிவில் ரூபாய் 6,000 ஊக்கத்தொகையும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9500980430, 9443207802 என்ற எண்களை அழைக்கலாம்.

News April 30, 2025

அட்சய திருதியை: செல்வம் பெருக இந்த கோயிலுக்கு போங்க

image

கடலூர், இன்று அட்சயதிருதியை முன்னிட்டு செல்வம் பெருக வழிபட வேண்டிய கோயில்கள்: 1.சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள மகாலட்சுமி, 2.திருவந்திபுரம் பெருமாள் கோயிலில் உள்ள வைகுண்ட நாயகி, 3.சேந்திரக்கிள்ளை லட்சுமி குபேரர், 4.குறிஞ்சிப்பாடி பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் உள்ள செங்கமல வல்லி தாயார், 5.பரங்கிப்பேட்டை வரதராஜ பெருமாள். நேரம் கிடைத்தால் சென்று வாருங்கள். பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க..

News April 30, 2025

விழுப்புரம் அருகே ரேஷன் அரிசி பறிமுதல்

image

விழுப்புரம் வி.மருதுார் காளியம்மன் கோவில் அருகில், ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமைபொருள் பிரிவிற்கு தகவல் கிடைத்தது. தனி தாசில்தார் ஆனந்தன் மற்றும் ஆர்.ஐ.,க்கள் கண்ணன், லட்சுமிநாராயணன்,சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். 25 மூட்டைகளில்,1,250 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிப கழக குடோனிற்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!