India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டத்தில் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், சங்கங்களின் முன்னேற்றத்தை மேம்படுத்திடவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது நமது மாவட்டத்தில் செயல்படும் 73 பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பால் நாளொன்றுக்கு சராசரியாக 12,000 லிட்டர் வரை கொள்முதல் செய்யப்படுகிறது என தென்காசி மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. இந்நிலையில், நாகையில் இன்று இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் கோழி, ஆடு, பன்றி வளர்க்க 50 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் இதன் மூலம் புதிய கோழிப் பண்ணைகள், செம்மறியாடு, வெள்ளாட்டுப் பண்ணைகள் அமைக்கலாம். தகுதி உடையவர்கள் https://www.tnlda.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கால்நடை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திற்கு விமான மூலம் வருகை புரிந்து அன்றைய தினமே மதுரையிலிருந்து செல்ல இருப்பதால், மதுரை விமான நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயணிக்கும் வழிகள் மற்றும் மதுரை மாநகர் மாவட்ட எல்லைக்குள் 06.04.2025 அன்று ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் பொன்னை வாரி வழங்கும் பொன்வாசிநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் 800 ஆண்டுகள் பழமையானது. இங்கு புதிதாக வாங்கிய தங்க நகையினை பொன்னால் ஆன இறைவனுக்கு அர்ச்சனையில் வைத்து வழிபட்டால், வீட்டில் மேலும் மேலும் பொன் செல்வம் பெருகுமென நம்பப்படுகிறது.மேலும், நகை கடை வைத்திருப்பவர்களின் தொழில் மேம்படும். உடனே உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு SHARE செய்து செல்வம் பெருக்க உதவுங்கள்.
நவக்கிரகங்களில் ஒன்றான சனீஸ்வர பகவானுக்கு அமைந்துள்ள கோயில்தான் குச்சனூர் கிராமத்தில் உள்ள இந்த சனீஸ்வரன் ஆலயம். ஏழரை சனியால் ஏழேழு ஜென்மத்திலும் கஷ்டம் என்பார்கள். சனி தோஷம் உள்ளவர்கள், இந்த கோயிலில் பிரத்தியேகமாக வழிபாடு செய்வது வழக்கம். சனிக்கிழமை தோறும் இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டால், தொழில் வளர்ச்சி பெகும், தோஷங்கள் நீங்கும். சனிப்பெயர்ச்சி உள்ள உங்கள் நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
காவல்காரன்பட்டியைச் சேர்ந்த வெண்ணிலா என்பவர் கடந்த 07.12.2025 அன்று பல் வலி காரணமாக வேர் சிகிச்சை மேற்கொண்ட நிலையில் தீராத தலைவரால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டும் தலைவலி தீராததால் இன்று பல் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் 2024-25இல் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு “என் கல்லூரிக் கனவு” என்ற உயர்கல்வி வழிகாட்டு ஆலோசனை முகாம் வரும் 6ம் தேதி காலை 10 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் நடைபெறகிறது. அனைத்து பட்ட, பட்டய தொழிற்முறை படிப்புகள் மற்றும் அவை வழங்கப்படும் கல்வி நிறுவனங்கள் குறித்து ஆலோசனை வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க
ஈரோடு, அந்தியூர் அருகே கொள்ளபாளையம் பகுதியை சேர்ந்தவர் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி. இவர் தேர்வு சரியாக எழுதவில்லை என, மனவேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அந்தியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 18பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜானகி, ரவி, வெங்கடசுப்ரமணியன், ராஜவேல், சிவநேசன், சையது முகம்மது, சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட 18 பி.டி.ஓ.க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் பிறப்பித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.