India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மின் வாரியத்தில் இருந்து ஓர் விழிப்புணர்வு . மின் சேவைகள், மின் கம்பிகள் அறுந்து தொங்கிகொண்டிருந்தாலோ, மின் கம்பங்கள் உடைந்திருந்தாலோ, மற்றும் மின் தடை குறித்து புகார்களுக்கு உடனடியாக 24 மணி நேரமும் செயல்பாடும் மாநில நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தை (9498794987) நெம்பர் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டு கொள்ளப்படுகின்றனர்.
வேலூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் தலைவரும் வேலூர் எம்.பியுமான கதிர் ஆனந்த், இன்று (அக்.22) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் பொறியியல் துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு நெல் நடவு இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் கலெக்டர் சுப்புலட்சுமி, எம்எல்ஏக்கள் அமுலு விஜயன் (குடியாத்தம்), வில்வநாதன் (ஆம்பூர்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் (22.10.2025) இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்கள், காவல் நிலையம் வாரியாக பொதுமக்களுக்கு எளிய தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் எந்தவொரு அவசர நிலையும், குற்றச் சம்பவங்களையும் நேரடியாக தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இது மாவட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் செய்யப்பட்டது
நாமக்கல் அரசு ஆண்கள் (தெற்கு) மேல்நிலை பள்ளியில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி வரும் அக்.30ந் தேதி காலை 09.30 மணி முதல் 1 மணி வரை 6 முதல் 12 ஆம் வகுப்பு அரசு/தனியார் பள்ளி மாணவர்களுக்கும், பிற்பகல் 01.30 மணி முதல் கல்லூரி மாணவர்களுக்கும் பேச்சுப் போட்டிகள் தனித்தனியே நடத்தப்படவுள்ளன. இப்போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பெறும் என ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (23.10.2025) ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. திண்டுக்கல் மாநகராட்சியில் மேட்டுப்பட்டி; உயிர்த்த ஆண்டவர் மக்கள் மன்றம், தொப்பம்பட்டி வட்டாரத்தில் தாளையூத்து; அரசு மேல்நிலைப்பள்ளி, வேடசந்தூர் வட்டாரத்தில் கூவக்காபட்டி; சமுதாய கூடம், வெள்ளைய கவுண்டனூர், வத்தலகுண்டு வட்டாரத்தில் விருவீடு எஸ்.எம்.மஹால், இடங்களில் முகாம்கள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம் இன்று அக்டோபர்-22 புதன்கிழமை இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதியான திண்டுக்கல் ஊடகம், திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல் துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
ஊட்டியில் பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நான்காவது புத்தக கண்காட்சி வரும் 24ஆம் தேதி முதல் அடுத்த மாதம் இரண்டாம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் முக்கிய சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்கள். பல்வேறு பதிப்பகங்கள் புத்தக கண்காட்சியில் கலந்து கொள்ள உள்ளன. இந்நிலையில் கண்காட்சிகள் நடைபெறும் கலை குழுக்களின் விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (22.10.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
திமுக சார்பில் உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் திமுக நிர்வாகிகளிடம் தொகுதியில் உள்ள வெற்றி நிலவரம் குறித்தும் கள நிலவரம் குறித்தும் தமிழ்நாடு முதல்வரும் மு.க ஸ்டாலின் நேரடியாக கலந்துரையாடினர். இன்று அக்.22 உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளிடம் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துரையாடினார். அப்போது கள்ளக்குறிச்சி திமுக வடக்கு மாவட்ட கழக செயலாளர் உதயசூரியன் உடன் இருந்தார
சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் முகாமில் காவல் ஆணையாளர் ஆ.அருண் இன்று (22.10.2025) 9 புகார் மனுக்களை பெற்றார். சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் விரைந்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு, உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுமக்களின் குறைகளை நேரில் கேட்டு தீர்வு காணும் முயற்சியாக இந்த முகாம் நடைபெற்று வருகிறது.
Sorry, no posts matched your criteria.