India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிங்கப்பூரில் கடந்த 8ஆம் தேதி, ரிவர் வேலி சாலையில் உள்ள பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய ஆந்திர துணை முதல்வர் பவன்கல்யாண் மகன் உள்ளிட்ட 22 பேரை காப்பாற்றிய தஞ்சை, பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த அன்பரசன் உட்பட 4 பேரை சிங்கப்பூர் அரசு பாராட்டி விருது வழங்கி கௌரவித்துள்ளது. சிங்கப்பூர் அரசு அவர்களுக்கு “Community Lifesaver Award” வழங்கி கௌரவித்துள்ளது.
சேலம்: வீரபாண்டி, புதுப்பாளையம், பாலம்பட்டி, கோணநாயக்கனூர், ராமாபுரம், சித்தர்கோவில், ஆரியகவுண்டம்பட்டி, ரெட்டிப்பட்டி, அரியானூர், உத்தமசோழபுரம், சித்தனேரி, ஆத்துக்காடு, கிச்சிப்பாளையம், எருமாபாளையம், சீலநாயக்கன்பட்டி, ராசிநகர், காஞ்சிநகர், எஸ்.கே.நகர், எம்.கே.நகர், காந்திபுரம் காலனி, மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று(ஏப்.19) மின்சார ரத்து. அக்கம் பக்கத்தினருக்கு SHARE பண்ணுங்க.
தேனி, பெரியகுளத்தை சேர்ந்தவர் குணசீலன் 27. தேனியிலிருந்து பைபாஸ் ரோட்டில் டூவீலரில் இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது குணசீலனை கத்தியை காட்டி 3 பேர் பணம் கேட்டு மிரட்டினர். குணசீலன் தன்னிடம் பணம் இல்லை என்றார். மூவரும் அவரது ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள அலைபேசியை வழிப்பறி செய்து தப்பினர்.போலீசார் வடுகபட்டியைச் சேர்ந்த 17 வயது 3 சிறுவர்களை கைது செய்து அலைபேசியை கைப்பற்றினார்.
ஸ்ரீபெரும்புதுாரில் நாளை (ஏப்ரல் 20) மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதனால், மப்பேடு, செங்காடு, உசேன் நகர், விஸ்வநாதகுப்பம், அமுஞ்சிவாக்கம், சமத்துவபுரம், இருங்காட்டுக்கோட்டை, நெமிலி, சிவன்தாங்கல், NGO காலனி, சுகம்தரும்பேடு, தண்டலம், மேவலுார்குப்பம், மண்ணுார், நயப்பாக்கம், பாப்பரம்பாக்கம், வளர்புரம், கிறிஸ்தவ கண்டிகை, செட்டிபேடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் (9AM – 5PM) மின்தடை ஏற்படும்.
நாசரேத் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் கென்னடி (48 ). இவர் தனது ஆட்டோவை சர்வீஸ் செய்வதற்காக உவரி நவ்வலடி சாலை மேல்நிலைப்பள்ளி அருகே சென்ற போது வேகத்தடையில் ஆட்டோ இறங்கியதில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவெண்ணெய்நல்லூர் போலீசார் நேற்று மாலை ஆனத்துாரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் மூட்டையுடன் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்த போது குட்கா இருப்பது தெரியவந்தது. விசாரணையில் பைக்கில் வந்தவர் மரக்காணம் பகுதியை சேர்ந்த மதன்குமார் என்பதும், திருவெண்ணெய்நல்லூர் அருகே தங்கி, குட்கா பொருட்களை பல பகுதிகளுக்கு சப்ளை செய்து வருவதும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 18) நடந்த அரசு விழாவில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். 390 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 418 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடங்களை திறந்து வைத்தார். மேலும். 2.02 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஒட்டுமொத்தமாக 1,166 கோடி ரூபாய் மதிப்பிலான விழாவாக இந்த விழா அமைந்தது.
பெண்கள் மீதான குடும்ப வன்முறை மற்றும் பாலியல் சீண்டல்களை தடுக்கும் வகையில் திருச்சி மாவட்ட காவல்துறை, தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பெண்களை பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்படுவோம் எனவும், பெண்கள் மீதான குடும்ப வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணி நேர சேவை எண் 181 என்பதை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது. SHARE செய்ங்க
வேலூர் மாவட்டம் சம்பத் நகரைச் சேர்ந்தவர் தனுஷ் (20). இவர் 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கர்ப்பமடைந்த சிறுமி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு சென்றபோது, அவரின் ஆதார் அட்டையை பார்த்த டாக்டர்கள் சிறுமிக்கு 18 வயது நிரம்பாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மகளிர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தனுஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி அருகே பண்டாரவிளையை சேர்ந்தவர் ஜெபாவைலட்(28). இவருக்கும், குருவுமேடு பகுதியைச் சேர்ந்த மாரிக்கனி(25) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 2 பேரும் ஏப்.16 அன்று மாரிக்கனி வீட்டில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் உருட்டுக்கட்டையால் தாக்கியதில் ஜெபாவைலட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவர் உயிரிழந்த நிலையில் போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.