Tamilnadu

News April 19, 2025

தேனி மாவட்டத்தில் 106 சத்துணவு உதவியாளர் காலி பணியிடங்கள்

image

தேனி மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 106 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளது. வட்டாரம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்படவுள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை அந்தந்த வட்டார அலுவலகங்களில் இனசுழற்சி வாரியாக தெரிந்து கொள்ளலாம். ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கு 26.04.2025 கடைசி நாள் ஆகும்.

News April 19, 2025

திருவள்ளூர் மாவட்ட வட்டாட்சியர் எண்கள்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் எண்களை தெரிந்துகொள்ளுங்கள். ஆர்.கே. பேட்டை-044-27845709, ஆவடி-044-26850313, திருவள்ளூர்-044-27660254, பூவிருந்தவல்லி- 044-26274314, ஊத்துக்கோட்டை-044-27630262, கும்மிடிப்பூண்டி-044-27921491, பொன்னேரி-044-27972252, திருத்தணி-044-27885222, பள்ளிப்பட்டு-044-27843231. *மிக முக்கிய நம்பர்களான இவற்றை உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.

News April 19, 2025

சொந்த வீடு யோகம் தருவார் பதிமலை பாலமுருகன்!

image

பலரும் அறிந்திடாத ஓர் அற்புதமான மலைக்கோயில்தான் பதிமலை பாலமுருகன் கோயில். இக்கோயில் கோவை, ஒத்தக்கால் மண்டபம் பிச்சனூர் அருகே அமைந்துள்ளது. கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டும் பக்தர்கள், இங்கு மனமுருக வேண்டினால் விரைவில் பலிக்குமென்பது ஐதீகம். செங்கற்களை அடுக்கிவைத்து வேண்டினால், விரைவில் சொந்த வீடு வாங்கும் யோகம் அமையும் என்பது நம்பிக்கை. சொந்த வீடு கனவு காணும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News April 19, 2025

நாகையில் இப்படிப்பட்ட இடங்களா ?

image

நாகை மாவட்டத்தில் இந்த சம்மருக்கு நீங்கள் போக வேண்டிய இடங்கள் இருக்கின்றது. அதில் இயற்க்கை அழகை காட்டும் கடற்கரைகள், ஆன்மிக தலங்கள், பொழுதுபோக்கு இடங்கள் என நீங்கள் அறிய வேண்டியது?
காயாரோகணசுவாமி கோவில், சௌந்தரராஜ பெருமாள் கோவில், நாகூர் தர்கா, வேளாங்கண்ணி மாதா கோவில், சிக்கல் முருகன், கோடியக்கரை சரணாலயம் நாகை இலங்கை கப்பல் சேவை போன்றவைகளாகும். உங்கள் பகுதியினருக்கு Share செய்து பயனடையுங்கள்.

News April 19, 2025

சென்னை மாவட்ட வட்டாட்சியர் எண்கள்

image

தண்டையார்பேட்டை-044-25911727, திருவொற்றியூர்-25991997, புரசைவாக்கம்-25388978, பெரம்பூர்-25375131, மாதவரம்-26590193, அயனாவரம்-26431726, அமைந்தகரை-26201727, அம்பத்தூர்-26252785, எழும்பூர்-28361890, மதுரவாயல்-23861386, மாம்பலம்-24891464, மயிலாப்பூர்-24331292, வேளச்சேரி-22431737, கிண்டி-22351850, ஆலந்தூர்-22320580, சோழிங்கநல்லூர்-24501700. *முக்கியமான எண்களான இவற்றை நண்பர்களுக்கும் பகிரவும்*

News April 19, 2025

கடலூர்: கடலில் மூழ்கும் பிச்சாவரம்?

image

பிச்சாவரம் சதுப்புநிலக்காடுகள், மாங்குரோவ் காடுகள் மிகுந்துள்ள இந்த பகுதி தமிழக மட்டுமின்றி இந்தியாவின் மிக முக்கிய சுற்றுலாதலமாகும். கடலோர மாவட்டங்களில் எதிர்கொள்ளும் இயற்கை சீற்றங்கள் புயல், சுனாமி , கடல் அரிப்பு போன்றவற்றின் பாதிப்புகளை தடுத்து வருகிறது. கடல் மட்டம் உயர்வு காரணமாக 2100-க்குள் பிச்சாவரம் சதுப்புநிலங்களில் 413 ஹெக்டேரும் நீரில் மூழ்கிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, Share It

News April 19, 2025

அரியலூர்: கோடைச்சுற்றுலா குடும்பத்தோடு கிளம்புங்க!

image

அரியலூரில் இருந்து 15 கிலோ மீட்ட்ர் தொலைவில் வெளிநாடு நாட்டில் இருந்து அதிகளவு பறவைகள் வரும் இடம் உகரைவெட்டியில் பறவைகள் சரணாலயம் அதிகளவில் நில பறவைகள்,நீர் பறவைகள் செயல்கள் நாம் காணும் போது நம் கண்ணுக்கு அமைதியை ஏற்படுத்தும்,உள்ளுரில் கோடை சுற்றுலா செல்லும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News April 19, 2025

கடலுக்குள் மூழ்கும் முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள்

image

முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் நாட்டின் மிகப்பெரிய அலையாத்தி காடுகளுள் ஒன்றாகும். சுமார் 120 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இந்த அலையாத்தி காடு, புயல், கடல் அரிப்பு, சுனாமி போன்ற பேரிடர்களில் இருந்து மக்களை காத்து வருகிறது. இந்நிலையில், சமீபத்திய ஆய்வு ஒன்றில் உயரும் கடல் மட்டம் காரணமாக 2100-க்குள் முத்துப்பேட்டையில் 2,382 ஹெக்டேர் அலையாத்தி காடுகள் நீரில் மூழ்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 19, 2025

புதுக்கோட்டை: கோடைச்சுற்றுலா குடும்பத்தோடு கிளம்புங்க!

image

புதுக்கோட்டையிலிருந்து 17 கி.மீ. தொலைவில் கி.பி 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சித்தன்னவாசல் அமைந்துள்ளது,இங்குள்ள சமனர் குகைகளில் ஒவியங்கள்,அகழ்வராச்சிகளின்படி புதைக்கப்பட்ட பானைகளும்,மனித எலும்புகூடுகளும் உள்ளது,மலையழகும்,பூங்காக்களும்,சிற்பக்கலை,
ஒவியக்கலைகள் இந்த சித்தன்னவாசல் சுற்றுலாதலத்தில் உள்ளது,உள்ளுரில் கோடை சுற்றுலா செல்லும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News April 19, 2025

மயிலாடுதுறை மாவட்ட காவல் துறை எச்சரிக்கை

image

சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதில் தங்கள் வாட்ஸ்அப்பிற்கு ஜியோ இன்டர்நெட் ஸ்பீட் 5ஜி நெட்வொர்க் என்ற பெயரில் ஏதேனும் APK கோப்பு வந்தால் அதனை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்தால் உங்கள் தொலைபேசி சைபர் குற்றவாளிகளால் ஹேக் செய்யப்படும் காவல்துறை எச்சரித்துள்ளது. உறவினருக்காலுக்கும் ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!