India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர்:தாட்கோ மூலம், டிப்ளமோ ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி வழங்கப்படும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலமாக, பல்வேறு பயிற்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த பிளஸ் 2 தேர்ச்சி பெற்று, குடும்ப வருமானம் 3 லட்சம் உள்ள 18 – 30 வயதிற்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம்.SHARE பண்ணுங்க!
கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட வேளான் இணை இயக்குனர் பெரியசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் நில விவரங்களை மின்னணு முறையில் பதிவு செய்யும் வேளாண் அடுக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 42 ஆயிரம் விவசாயிகள் இன்னும் பதிவு செய்யாமல் இருப்பதால் இதற்கான காலக்கெடுவை ஏப்.30 வரை நீட்டித்திருப்பதாக அதில் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் TNPSC மற்றும் TNUSRBஇல் வெளியான குரூப் 1 மற்றும் SI தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. அதற்கு விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு https://tamilnaducareerservices.tn.gov.in/ என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம். போட்டித் தேர்வுக்கு தயாராகும் நபர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க..
கோவையில் எழில்கொஞ்சும் கோவனூரில், பழமையான பூங்கோல் தாயார் குகைக்கோயில் அமைந்துள்ளது. அழகிய மலையிடுக்குகளில் இடையில், அம்மன் சுயம்பு லிங்கமாக வீற்றிருக்கிறார். அம்மனை தரிசிக்க செல்லும் வழியில் எல்லாம் சிறிய சிறிய நீருற்றுக்கள் என, இயற்கை நம்மை பிரம்மிக்க வைக்கிறது. குடும்பத்துடன் ஒரு நாள், இயற்கையுடன் செலவிட வேண்டும் என நினைப்பவர்களுக்கு, பூங்கோல் தாயார் கோயில் ஒரு வரப்பிரசாதம். SHARE பண்ணுங்க.
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிக வேகத்தில் செல்லும் வாகனங்களுக்கு ரேடார் கருவி மூலம் கண்காணித்து, இ-சலான் முறையில் அபராதம் விதிக்கப்படும் நடவடிக்கையை ராணிப்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜி. மோகன் மேற்கொண்டுள்ளார். வாகன உரிமையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அபராத விவரங்கள் அனுப்பப்படுகிறது. விபத்துகளைத் தடுக்கும் முயற்சியாக இதை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். ஷேர் பண்ணுங்க.
கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மயிலாடுதுறை மீனவர்கள் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த பொழுது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் ஆயுதங்களால் தாக்கி செல்போன், 50 கிலோ மீன், ஜிபிஸ் கருவி ஆகியவற்றை பறித்து சென்றதாக மீனவர்கள் புகார். மேலும் தாக்குதலில் 4 மீனவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சித்திரை விழாவை முன்னிட்டு திருச்சி அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து தபால் அலுவலகங்களிலும், இந்திய அஞ்சல் துறை சர்வதேச விரைவு தபால் மற்றும் பார்சல் மூலமாக குறைந்த கட்டணத்தில் வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்பும் சேவை சிறப்பு கவுண்டர்கள் மூலமாக ஏப்-30 வரை செயல்பட உள்ளது என்று திருச்சி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். திருச்சி மக்களே இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் உதவிக்காக தொலைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் மாவட்ட கட்டுப்பாட்டு அறை -1077,ஆட்சியர் அலுவலகம் : 04652 – 279090,279091, காவல் – 100, விபத்து – 108, தீ தடுப்பு – 101, குழந்தைகள் பாதுகாப்பு – 1098, பாலின துன்புறுத்தல் தடுப்பு -1091 என்ற உதவி எண்களில் அழைக்கலாம்.
நாமக்கல்: வேலைவாய்ப்பு இல்லாதவர்கள் உதவித்தொகை திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.600 வரை 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. எனவே தகுதியானவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார். மேலும், <
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் உதவிக்காக தொலைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் போலீஸ் – 100, விபத்து – 108, தீ தடுப்பு – 101, குழந்தைகள் பாதுகாப்பு – 1098, பேரிடர் கால உதவி – 1077, பாலின துன்புறுத்தல் தடுப்பு – 1091, நெடுஞ்சாலை கட்டுப்பாடு – 1033, இரத்த வங்கி உதவி – 1910, மூத்த குடிமகன் உதவி – 1253, இரயில்வே பாதுகாப்பு படை -1322, சைபர் கிரைம் – 1930 என்ற எண்களில் அழைக்கலாம்.
Sorry, no posts matched your criteria.