Tamilnadu

News April 16, 2025

திருவாரூர் எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம்

image

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று வாரந்தோறும் புதன்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இதில் தஞ்சை சரக காவல்துறை டி.ஐ.ஜி கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து 24 மனுக்களை பெற்றுக் பெற்றுக்கொண்டு, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருன்கரட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

News April 16, 2025

ராணிப்பேட்டையில் இரவு ரோந்து போலீசார் பற்றிய தகவல்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று காவலுக்கு இருக்கும் போலீசாரை பற்றிய பெயர் குறிப்பு மற்றும் அலைபேசி எண்கள் மேலே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன. இதனை ராணிப்பேட்டை பொதுமக்கள் எவையேனும் தேவை ஏற்பட்டால் நிச்சயமாக இந்த அலைபேசி எண்ணை உபயோகிக்கலாம் என காவல்துறை குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு புகைப்படத்தை பார்க்கவும்.

News April 16, 2025

திருவாரூர்: தஞ்சை சரக டி.ஐ.ஜி ஆய்வு

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட கண்காணிப்பாளர் காவல் அலுவலகத்தில் இன்று தஞ்சை சரக காவல் துறை துணைத்தலைவர் ஜியாவுல்ஹக் இன்று மாவட்ட ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை உள்ளிட்ட வழக்குகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கை பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

News April 16, 2025

அமைதி தரும் மரக்காணம் கடற்கரை

image

விடுமுறை தினத்தில் வெளியில் சென்று வர அருகிலேயே சிறந்த சுற்றுலா தலமாக மரக்காணம் கடற்கரை உள்ளது. கீழக்கு கடைகரையோரம் அமைந்துள்ள இந்த பகுதியின் அமைதியான சூழல் மனதுக்கு அமைதி தரும். அமைதியை விரும்புவோர் நிச்சயம் சென்று வரலாம். இங்குள்ள உப்புத் துறை இந்த கடற்கரையின் மிகவும் பிரபலமான ஒன்றாகும். இப்பவே உங்க நண்பருக்கு ஷேர் பண்ணி ட்ரிப்க்கு பிளான் பண்ணுங்க

News April 16, 2025

பாலக்கோடு: ஏரியில் மூழ்கி தொழிலாளி சடலமாக மீட்பு

image

தொம்பகாரம்பட்டியை சேர்ந்த தொழிலாளி விக்னேஷ் என்பவர் நேற்று முன்தினம், தமிழ் புத்தாண்டு விடுமுறை என்பதால், பாலக்கோடு அருகே உள்ள சோமனஅள்ளி ஏரிக்கு குளிக்கச் சென்றனர். அப்போது, விக்னேஷ் நீரில் மூழ்கினார். அங்கு வந்த பாலக்கோடு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அன்று மாலை முதல், தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று ஏப்ரல் 15 விக்னேஷ் சடலத்தை மீட்டனர். பாலக்கோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 16, 2025

நியாய விலை கடையில் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு

image

சீர்காழி வட்டம் காவிரிபூம்பட்டினம் கிராமத்தில் உள்ள நியாய விலை கடையினை தமிழக முதலமைச்சரின் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று பார்வையிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு குடிமை பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்தார். மேலும் அங்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்தும் பார்வையிட்டார்.

News April 16, 2025

புதுவை: மே.30 கடைசி நாள்

image

புதுச்சேரி அரசு ஓய்வூதியதாரர்கள் 2025ஆம் ஆண்டிற்கான வாழ்வாதார உறுதிச் சான்றிதழை வரும் மே 2 முதல் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இச்சான்றி தழைகருவூலகத்திற்கு நேரில் வந்தோ (அ) தபால் அலுவலக சேவையை பயன்படுத்துவதன் வாயிலாகவோ பதிவு செய்யலாம். 2025ஆம் ஆண்டிற்கான வாழ்வுறுதிச் சான்றிதழை 30.05.2025க்குள் சமர்ப்பிக்கத் தவறினால் மேற்கொண்டு ஓய்வூதியம் வழங்க இயலாது என DAT இயக்குனர் அறிவித்துள்ளார்.

News April 16, 2025

கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான ஆய்வுக் கூட்டம்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலநிலை மாற்றத்திற்கான விவசாய உத்திகள் குறித்த விவசாயிகளுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சேகர் தலைமையில் நேற்று நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏற்படும் காலநிலை மாற்றம் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய விவசாய உத்திகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் பங்கேற்று பயன்பெற்றனர்.

News April 16, 2025

தீராத நோய்கள் தீர்க்கும் வள்ளி குளம்

image

காவேரிப்பட்டினம் சுண்டக்காய்பட்டி கிராமத்தில் கந்தர்மலை முருகன் கோவில் உள்ளது. இந்த மலையில் உள்ள குகையில் சூரிய ஒளி படாத வள்ளி குளம் உள்ளது. இந்த குளத்தின் நீரை பருகினால் தீராத நோயும் தீரும் என்பது நம்பிக்கை. வள்ளிக்கு விக்கல் ஏற்பட்ட போது சூரிய ஒளி படாத குளத்தின் நீரை பருகினால் விக்கல் தீரும் என முருகன் கூற வள்ளி இங்கு வந்து நீரை பருகியதாக கூறப்படுகிறது. ஷேர் பண்ணுங்க

News April 16, 2025

வேலூர் சிறையும் சுதந்திர போராட்டமும்

image

ஆங்கிலேயர் காலத்தில் அந்தமான் சிறைக்கு அடுத்தபடியாக கொடிய சிறையாக வேலூர் சிறை இருந்தது. 1830ல் தொடங்கப்பட்ட இங்கு விடுதலைப் போரில் பங்கெடுத்த வினோபாபாவே, இராஜாஜி, கர்மவீரர் காமராஜர் போன்ற தலைவர்களும், முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவும் சிறை வாசத்தை அனுபவித்தனர். விடுதலை போராட்டதிலிருந்து இன்று வரை செயல்பட்டு வரும் இந்த சிறை தற்போது புழல் சிறைக்கு அடுத்ததாக பார்க்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!