India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை உயர்நீதி மன்றத்தில் உதவியாளர், எழுத்தர் ( Perosnal Assitant, Personal Secretary, Clerk) உள்ளிட்ட பணிகளுக்கான 47 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ரூ.56,000 முதல் மாத சம்பளமாக வழங்கப்பட உள்ளது. ஏதேனும் டிகிரி முடித்த 18-37 வயதுக்குட்பட்ட நபர்கள் <
திருப்பூர்: காங்கேயம் வட்டத்தில் உள்ளது சிவன்மலை. இமயமலையை சிவபெருமான் வில்லாக வளைத்து அசுரர்களை அழித்தபோது அதிலிருந்து விழுந்த சிறுதுண்டு தான் இந்த சிவன் மலை எனும் புராணக் கதை உண்டு. இந்த மலையில் உள்ள சுப்ரமணிய சுவாமி பக்தர்களின் கனவில் வந்து உத்தரவு தருவாராம். அப்படி உத்தரவு தரும் பொருளுக்கும் நடக்கவிருக்கும் உலக நிகழ்வுகளுக்கும் சம்மந்தம் உண்டு என்கிறார்கள் பக்தர்கள். SHARE பண்ணுங்க!
1956 ஆம் ஆண்டு கன்னியாகுமரி, திருவிதாங்கூரில் இருந்து தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது. ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது இங்குள்ள உணவு வகைகள் கேரள உணவு வகைகளை ஒத்திருக்கும். அதில் சிறந்தவைகள் :
▶️கப்பா
▶️ரச வடை
▶️சத்யா
▶️அவல் (வெட்டன் ரைஸ்)
▶️அவியல்
▶️முந்திரி கொத்து
▶️வாழை சிப்ஸ்
▶️பழ பஜ்ஜி
▶️பலாப்பழ சிப்ஸ்
▶️ஆயினி சக்கை *ஷேர் பண்ணுங்க (உங்களுக்கு தெரிந்த உணவுகளை குறிப்பிடலாம்)
ஈரோடு மாவட்டத்தில் உள்ள திண்டல் முருகன் கோயிலுக்குப் பல சிறப்புகள் உண்டு. மொத்த ஊரின் பஞ்சத்தை தீர்த்தக் குமரன் என தலபுராணம் கூறுகிறது. இந்தக் கோயிலில் வழிபட்டால் வாழ்வின் தீரா வினையும் தீரும் என்பது நம்பிக்கை. வாழ்க்கையில் தீராத பிரச்னை எதுவிருந்தாலும் இங்கு வந்த முருகனை வழிபட்ட கணத்தே அது தீர்ந்துவிடுமாம். பிரச்னை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் உதவியாளர் பணியிடத்திற்கான முதல் நிலைத் தேர்வு ஏப்.27 ஞாயிற்றுக்கிழமை, புதுச்சேரி காரைக்கால் மாஹே ஏனாம் பகுதிகளில் நடைபெற இருக்கின்றது. இத்தேர்வுக்கான அனுமதி சீட்டை தேர்வர்கள் http://recruitment.i-v.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து நாளை 16ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு செயலர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் “காவல் உதவி App” பொதுமக்களின் பாதுகாப்புக்காக கொண்டு வரப்பட்டது. எந்த வகையான இன்னல், அவசரநிலையின் போதும் உடனடி உதவியைப் பெறுவதற்காக, கட்டுப்பாட்டு அறைக்கு அவசர எச்சரிக்கையை அனுப்புவதற்கு, இந்த செயலியைப் பயன்படுத்தலாம். இந்நிலையில், மகளிர் அனைவரும் காவல் உதவி செயலியை, தங்களது மொபைல் போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT!
திருப்பத்தூர் அடுத்த சுண்ணாம்புபள்ளம் அருகே உள்ள வாணியம்பாடி ஆலங்காயம் சாலையில், இன்று சென்ற தனியார் பேருந்து பழுதாகி ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் ஐந்து பேர் படுகாயங்களுடன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 154 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. இதற்கு, 10 வகுப்பு பாஸ்/ஃபெயில் ஆன 18-40 வயதுடைய பெண்கள் https://chengalpattu.nic.in/ என்ற தளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கி, இந்த மாதம் 17- 29-க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளார். *செம வாய்ப்பு. தெரிந்தவர்களுக்கு பகிரவும்
ஒரகடம், சென்னகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காதரன் (33), வல்லம் சிப்காட் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை அதே பகுதி விளையாட்டு திடலில் மாங்காய் பறிக்க சென்றுள்ளார். மரத்தில் இருந்து விழுந்தவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிரிழந்தது தெரிந்தது. இதுகுறித்து ஒரகடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
சமூக வலைதளங்களில் அறிமுகம் இல்லாத நபர்களுடன் சேட் செய்யும் போது மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். மற்றவர்கள் உங்கள் வீடியோ உரையாடல்களை பதிவு செய்து அச்சுறுத்த பயன்படுத்தலாம் என மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் இது போன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணிலும், www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் தெரிவிக்கலாம்.
Sorry, no posts matched your criteria.