Tamilnadu

News April 14, 2025

திருமணத் தடை நீக்கும் அர்ச்சுனேஸ்வரர் !

image

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் ஆலயத்திற்கு ஆயிரம் ஆண்டு கால வரலாறு உள்ளதாம் . அமராவதி நதிக்கரையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் வழிபட்டால் திருமணத் தடை நீங்கும் எனப் புராணம் சொல்கிறது. ஆம்,குலோத்துங்க சோழன் மகளின் மாங்கல்ய தோஷத்தை தீர்த்து வைத்த தலம் இது என நம்பப்படுகிறது. பிரச்னை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News April 14, 2025

திண்டுக்கல்லில் உள்ள இமயமலை !

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலை இமயமலையின் ஒரு பகுதி என ஒரு நம்பிக்கை உண்டு. இந்தப் பகுதியில் மிக உயரமான மலை என்றால் அது வெள்ளி மலை தான். இந்த மலையின் உச்சியில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான ஒரு சிவலிங்கம் உள்ளது. இந்த சிவலிங்கத்தைக் காண அரைமணி நேரம் நடந்து செல்ல வேண்டும். அப்படி நடந்து சென்றால் கைலாயத்தையே கண்ட ஒரு அனுபவம் உங்களுக்கு கிட்டும். உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News April 14, 2025

ராமேஸ்வரத்தில் சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள்

image

ராமேஸ்வரத்தில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள் ▶️தனுஷ்கோடி ▶️ஓல்ட் சர்ச் மற்றும் ரயில் நிலையம் ▶️கோதண்டராமர் கோவில் ▶️அப்துல் கலாம் ஐயா வீடு▶️ஐந்து முகம் ஆஞ்சநேயர் ▶️ராமர் தீர்த்தம் ▶️சீதா தீர்த்தம் ▶️லக்ஷ்மணன் தீர்த்தம் ▶️ராமர் பாதம் ▶️அப்துல் கலாம் நினைவகம் ▶️வில்லூண்டி தீர்த்தம் ▶️பாம்பன் பாலம் *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க (ஏதேனும் விடுப்பட்ட இடத்தை நீங்கள் கூறலாம்)

News April 14, 2025

அம்பேத்கர் பிறந்தநாள் – தூத்துக்குடி எம்பி சூளுரை

image

தூத்துக்குடி எம்.பி கனிமொழி இன்று (ஏப்.14) முகநூல் பக்கத்தில்; ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை கீற்றாக, ஜனநாயக உரிமைக்காக ஓங்கி ஒலித்த குரலாக, சாதி மத ஆதிக்க சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாக என்றென்றும் சுடர்விட்டு ஒளிரும் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் இன்று. அவர் உயர்த்தி பிடித்த அடிப்படை கட்டுமானங்களை அழிக்கத் துடிக்கும் பாசிச சக்திகளிடம் இருந்து நாட்டைப் பாதுகாக்க உறுதியேற்போம் என பதிவிட்டுள்ளார்.

News April 14, 2025

நாமக்கல்லில் தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைவு!

image

நாமக்கல் நகர நகை வியாபாரிகள் சங்கம் நிர்ணயித்த இன்றைய (14.04.2025) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு. ஒரு கிராம் விலை ரூ.8,755-க்கும், ஆபரண தங்கம் 1 பவுன் ரூ.70,040-க்கும், முத்திரை காசு 1 பவுன் ரூ.70,500-க்கும், முத்திரை காசு 1 கிராம் ரூ.8,813-க்கும், விற்பனை வெள்ளி ஒரு கிராம் ரூ.104-க்கு விற்பனையாகிறது.

News April 14, 2025

சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகளுக்கு ஒரு வாய்ப்பு

image

மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் நடக்கும் பராமரிப்பு பணி காரணமாக கோவை விரைவு ரயில் வ.எண்(16322) வருகின்ற ஏப்ரல் 25, 26, 28, 29′ 30 ஆகிய 5 நாட்களுக்கு வழக்கமாக நாகர்கோவிலுக்கு செல்லும் வழித்தடத்தில் செல்லாது. மாறாக காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக நாகர்கோவில் செல்லும் எனவே சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் 5 நாளைக்கு இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

News April 14, 2025

தூத்துக்குடிக்கு எஸ்ஐ ஆயுதப் படைக்கு மாற்றம்

image

தூத்துக்குடியை சேர்ந்த வாலிபரை தென்பாகம் எஸ்ஐ முத்தமிழ் அரசன்  தாக்கியதாகவும், அதனால் வாலிபருக்கு கை எலும்பு முறிவு ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது .இதைத் தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் முத்தமிழ் அரசனை மீண்டும் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார்.

News April 14, 2025

திருச்சி மாவட்டத்தில் 68.3 மி.மீ மழை பதிவு

image

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் நேற்று மாலை முதல் இரவு வரை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் திடீர் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதில் திருச்சி மாவட்டத்தின் முசிறி, புலிவலம், தாத்தையங்கார்பேட்டை, துறையூர் ஆகிய பகுதிகளில் மொத்தம் 68.3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 14, 2025

குலசேகரத்தில் புத்தகக் கண்காட்சி ஏராளமானோர் பங்கேற்பு

image

குலசேகரம் கான்வென்ட சந்திப்பு மனுவேல் மண்டப வளாகத்தில் NCBH புத்தக நிலையம் சார்பில் இன்று தமிழ்ப் புத்தாண்டு மற்றும் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த புத்தக கண்காட்சியில் பல்வேறு வகையான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. புத்தக கண்காட்சியை அப்பகுதியில் உள்ள ஏராளமானவர்கள் வந்து பார்வையிட்டு புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.

News April 14, 2025

ரயிலில் 120 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

image

மதுரையில் இருந்து குருவாயூர் செல்லும் ரயிலில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி விற்பனை தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே காவல் நிலைய சார்பு ஆய்வாளர் துரைசாமி தலைமையிலான ரயில்வே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கழிவறை அருகே 4 பிளாஸ்டிக் சாக்கு பைகளில் இருந்த 120 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்து,ரயிலில் கொண்டு வந்தவர்கள் குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!