India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள Solar Technician பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. தகுதியுடைய எலக்ட்ரீஷியன் படிப்பை முடித்தவர்கள் இங்கே <
இந்திய உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறு மற்றும் குழாய் கிணறுகளில் சிறு குழந்தைகள் விழுவதால் ஏற்படும் அபாயகரமான விபத்துகளை தடுப்பதற்காக கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை களிமண், மணலால் மூட வேண்டும். மூடாத போர்கள் குறித்த விவரங்களை பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று புதுகை மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
கோயில் 1500 ஆண்டுகளுக்கும் மேலானது கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. பால்வண்ண நாதர் கோயில் அதன் முக்கியத்துவத்தில் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குச் சமமாக கருதப்படுகிறது. சங்கரன்கோவிலை சுற்றி அமைந்துள்ள பஞ்ச பூத ஸ்தலங்களில் இக்கோவில் ஒன்றாகும். இந்த கோவில்கள் ஐந்து முக்கிய கூறுகளை குறிக்கின்றன: நிலம், நீர், காற்றுவானம் மற்றும் நெருப்பு. என்று குறிக்கிறது
புதுகை மாவட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு 15 நாட்கள் முன்பாக மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி ஊராட்சி நிர்வாகம், நீர்வளத்துறை, பொது சுகாதாரம் துறையில் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு எழுத்துப்பூர்வமாக தகவல் தெரிவிக்க வேண்டும். கிணற்றை சுற்றி இரும்பு தகட்டால் மூடவேண்டும், உரிமையாளர் முழு முகவரி இருத்தல் வேண்டும், பாதுகாப்பு தடுப்பு வேலி போட வேண்டும் என்றும் ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க ‘ஊராட்சி மணி’ அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு, மின்சாரம் மற்றும் ரேஷன் கடைகள் குறித்தான புகார்களை 155340 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். குறிப்பாக தற்போது கோடை காலம் என்பதால் குடிநீர் பிரச்சனை இருந்தால் 1916 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
தேனி மாவட்டத்தில் தேனி, சின்னமணூர், கம்பம் உள்ளிட்ட மூன்று தபால் நிலையங்களில் தற்போது பார்சல் பேக்கேஜிங் மையம் செயல்பட்டு வருவதாகவும் இங்கு வெவ்வேறு அளவுகளில் வணிகர்களின் தேவைக்கு ஏற்ப பார்சல் பெட்டிகள் கிடைக்கும் எனவும். இங்கு பொது மக்கள், வணிகர்கள் பார்சல் செய்வதற்கான பெட்டிகளை குறைந்த விலைக்கு வாங்கி பார்சல் செய்து அனுப்பி பயன் பெறலாம் என தபால் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தில் உள்ள Loan Processing Officer பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி துறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ரூ.15,000-ரூ.25,000 வரை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் இங்கே<
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க ‘ஊராட்சி மணி’ அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு, மின்சாரம் மற்றும் ரேஷன் கடைகள் குறித்தான புகார்களை 155340 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். குறிப்பாக தற்போது கோடை காலம் என்பதால் குடிநீர் பிரச்சனை இருந்தால் 1916 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
தோகைமலை அருகே கொசூரில் உள்ள விநாயகர், குள்ளாயிஅம்மன் மற்றும் பாம்பலம்மன் கோயில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகின்றது. 16 வகையான திரவியங்களால் அபிஷேக ஆராதனைகள் செய்தனர். தொடர்ந்து குள்ளாயி அம்மனுக்கு ரூ.5 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தமிழக அரசு கலை பண்பாட்டு துறை, காஞ்சிபுரம் மண்டல கலை பண்பாட்டு மையத்தின் சார்பில் ஓவிய, சிற்பக்கலைஞர் பங்கேற்கும் 2 நாள் பயிற்சி முகாம் வேலூரில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களது சுயவிவர குறிப்பை உதவி இயக்குனர், மண்டல கலை பண்பாட்டு மையம், சதாவரம், ஓரிக்கை அஞ்சல், சின்ன காஞ்சிபுரம், காஞ்சிபுரம் முகவரிக்கு மே10-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.