India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்டம் முழுவதும் நேற்று(அக்.,19) காலையில் இருந்தே தீவிர வாகன சோதனை நடந்தது. போக்குவரத்து விதிகளை மீறிய 627 பேர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஹெல்மெட் இல்லாமல் வந்தவர்களில் 200க்கு மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், செல்போன் டிரைவிங், அதிகவேகம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்தனர்.
மன்னார்குடியில் நேற்று இரவு அதிமுக சார்பில் 53 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு, தமிழகத்தில் அம்மா கொண்டு வந்துள்ள அனைத்து திட்டங்களையும் திமுக தற்பொழுது செயல்படுத்தவில்லை என்று கூறினார். மேலும் இந்த திட்டத்தை 2026ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றவுடன் நடைமுறைப்படுத்துவதாக கூறினார்.
புதுச்சேரி இணைய வழி குற்றப்பிரிவு கண்காணிப்பாளர் பாஸ்கரன் குறிப்பிட்டுள்ளதாவது, இணைய வழியில் இளைஞர்களை குறி வைத்து மசாஜ் மையங்கள் போன்ற தகவல்கள் மோசடியாளர்களால் கையாளப்படுகின்றன. ஆகவே, பணத்தை செலுத்தி இளைஞர்கள் ஏமாற வேண்டாம். அத்துடன், மோசடிக் கும்பலால் பாதிக்கப்படுவோர் பயப்படாமல் புகாரளிக்க வேண்டும். கடந்த 2 மாதங்களில் ரூ.7 லட்சம் மோசடி நடந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
தற்போது பெய்த கனமழையால், சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. குறிப்பாக, திருவொற்றியூர் மண்டலம் தாமரைக்குளம், மணலி மண்டலம் எலந்தனுார் குளம், பர்மா நகர் குளம், கன்னியம்மன்பேட்டை குளம், காமராஜபுரம் குளம், வடபெரும்பாக்கம் குளம், விநாயகபுரம் மயானபூமி குளம், தீயம்பாக்கம் குளம், காந்திநகர் குளம் உட்பட 59 குளங்களில் மழைநீர் நிரம்பியுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சேலத்தில் இன்று நடைபெறவுள்ள அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார். இந்நிலையில் “மாவட்ட எல்லையான தலைவாசல் அருகே சாலை நெடுக நின்றிருந்து, என்னை ஆரவாரத்துடன் வரவேற்ற முத்தமிழ் அறிஞர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளுக்கு என் அன்பையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2024-25ஆம் ஆண்டு ராபி பருவ தோட்டக்கலை பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி வெங்காயம், கொத்தமல்லி பயிர்களுக்கு 17.01.2025, வாழை பயிருக்கு 28.02.2025, மிளகாய் பயிருக்கு 31.01.2025 வரை காப்பீடு பிரீமியம் தொகை செலுத்தி பதிவு செய்து பயன் பெறலாம் என ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் தவறான தகவலை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார். தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்க நிறுவனத் தலைவர் கண்ணபிரான் கைது தொடர்பாக சிலர் தவறான கருத்துகளை சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். யூடியூப்பில் ஒருவர் குறிப்பிட்ட நபருக்கும் கண்ணபிரானுக்கும் இடையே உள்ள பகையை குறிப்பிட்டுள்ளார்.இது உண்மைக்கு புறம்பான தவறான கருத்து ஆகும்.
பொது போக்குவரத்து வாகனங்கள் இல்லாத அந்த நாளில் புதுக்கோட்டை மக்கள் கால்நடையாகவே பல்வேறு ஊர்களுக்கு சென்றனர். திருச்சிக்கு கால்நடையாக செல்லும் பயணிகள் தங்கி இளைப்பார ரெங்கம்மா சத்திரம், அம்மா சத்திரம், நல்லூர், மாத்தூர் போன்ற இடங்களில் தொண்டமான் மன்னர்கள் சத்திரங்களை கட்டியிருந்தனர். திருச்சி-புதுக்கோட்டை சாலையில் இன்னும் இந்த சத்திரங்களை காணலாம். “காலச்சுவடு”. ஷேர் செய்யவும்….
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் (அடுத்த 3 மணி நேரத்திற்கு) பகல் 1 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டிலிருந்து வெளியே செல்வோர் குடை எடுத்துச் செல்லவும். ஷேர் பண்ணுங்க
காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறுகையில், தமிழகத்தில் அரசின் கொள்கையும், மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கக்கூடிய கொள்கையும் இரு மொழித் திட்டம் தான். இதனை கவர்னர் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன சிந்தனை இருக்கின்றதோ அதற்கு நேர்மறையான கருத்து தெரிவிப்பவர் தான் தமிழக கவர்னர் மற்ற மாநிலங்களில் மூன்று மொழிகள் இருக்கிறது என்பதே தவறு என்று கூறினார்.
Sorry, no posts matched your criteria.