Tamilnadu

News October 20, 2024

பெரம்பலூரில் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் ராணுவத்தில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் வரும் 25ஆம் தேதி மாலை 4 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இதில் முன்னாள் ராணுவ வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக சமர்ப்பிக்க ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். ஷேர் செய்யவும்

News October 20, 2024

மதுரை ஆட்சியர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

image

மதுரை மாவட்டத்தில் விதிமீறல் மற்றும் அனுமதியற்ற கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்க கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளதா, இல்லையெனில் எவ்வளவு காலவரம்பிற்குள் அமைக்கப்படும் என கலெக்டர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. கண்காணிப்புக்குழு அமைக்கக்கோரி மதுரை மயில்சாமி தாக்கல் செய்த பொதுநல மனுவில் வரும் 25 ஆம் தேதிக்குள் ஆட்சியர் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

News October 20, 2024

நகரங்களை தூய்மையாக்க மாணவர்களுக்கு பயிற்சி

image

காரைக்குடி எம்.பி.கார்த்திக் சிதம்பரம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நகரங்களை தூய்மையாக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ‘தூய்மை நகர இன்டர்ன்ஷிப் நிகழ்வு காரைக்குடியில் நடைபெறுகிறது. ஆர்வமுள்ள மாணவர்கள் பயிற்சி பெற தூய்மை நகர ஒருங்கிணைப்பாளர் அப்துல்லா ஜலாலின் 9809936618 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம் என்றார்.

News October 20, 2024

கரூரில் பிரதமர் கல்வி உதவித்தொகை

image

கரூரில் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (https://scholarships.gov.in) விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிய மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை (https://socialjustice.gov.in) பதிவு செய்து பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News October 20, 2024

அரசு பேருந்து சேவை மீண்டும் தொடங்க வேண்டுகோள்

image

காஞ்சிபுரம் மாவட்டம் சிறுணைபெருகல் கிராமத்திலிருந்து, ஆரியபெரும்பாக்கம், சமத்துவபுரம், துலங்கும் தண்டலம், திம்மசமுத்திரம் வழியாக காஞ்சிபுரம் அரசு பேருந்து ‘T10’ பேருந்து இயக்கப்பட்டது. இந்த பேருந்து, தினசரி 3 நடைகள் இயங்கப்பட்டன. கொரோனாவிற்குப் பின் இந்தச் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனை மீண்டும் தொடங்குமாறு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். உங்கள் கருத்து?

News October 20, 2024

முதல்வர் வருகையால் போக்குவரத்து மாற்றம்

image

நாமக்கல் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழக முதல்வர் முதல்வர் அக்.22 ஆம் தேதி நாமக்கல் வருகை தருவதால் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக காவல் துறை அறிவித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் ஒருநாள் சிரமமின்றி காவல் துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு நாமக்கல் காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 20, 2024

காட்பாடி ரயிலில் கடத்த முயன்ற 1500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

image

காட்பாடி ரயில்வே போலீசார் நேற்று பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை செய்தனர். அப்போது முன்பதிவில்லா பெட்டியில் சந்தேகத்துடன் அமர்ந்திருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் பாணாவரத்தை சேர்ந்த ராஜேஷ்(23) என்பதும் அரக்கோணத்தில் இருந்து பெங்களூருக்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 1500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

News October 20, 2024

அரசு பேருந்தில் பயணம் செய்த மாணவர் உயிரிழப்பு

image

ஈரோடு: புளியம்பட்டி அருகே நேற்று அரசு பேருந்தும், லாரியும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பேருந்தின் பின் சீட்டில் பயணம் செய்த நதிஷ் என்ற கல்லூரி மாணவர், லாரியின் மோதலால் பேருந்தின் பக்கவாட்டு கம்பி உடலில் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் விடுமுறை நாளான நேற்று கல்லூரியில் இருந்து ஊருக்குத் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

News October 20, 2024

மன்னார்குடியில் புதிய ஆர்டிஓ நியமனம்

image

மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்த கீர்த்தனா மணி தற்போது சிவகங்கைக்கு மாற்றப்பட்ட காரணத்தால், நாகையில் பணிபுரிந்து வந்த யோகேஸ்வரன் மன்னார்குடி புதிய வருவாய் கோட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அக்டோபர் 20 முதல் ஆர்டிஓவாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

News October 20, 2024

ஆவினில் சிறப்பு வகை இனிப்புகள் அறிமுகம்

image

மதுரை ஆவின் தீபாவளி இனிப்பு வகைகள் உற்பத்தி மற்றும் விற்பனை டைபெற்று வருகிறது. ஆவின் பொது மேலாளர் சிவகாமி கூறும் போது ஆவினில் பல்வேறு இனிப்புகள் அடங்கிய காம்போ பேக் ரூ.300 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நெய் பாதுஷா. முந்திரி அல்வா அடங்கிய காம்போ பேக் ரூ.900 க்கு சிறப்பு சலுகையில் விற்பனையாகிறது. ஆவின் ஸ்பெஷல் காம்போ பேக் பற்றிய விளம்பரங்களும் பால் பாக்கெட்டுகளில் அச்சிடப்பட்டுள்ளன என்றார்.

error: Content is protected !!