India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. அதற்கான மஞ்சள் அலர்ட்டும் விடுத்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.
நீலகிரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக பட்டாசு கடைகள் நடத்த இன்றே (19.10.24) கடைசி நாள் என்று நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார். மேலும், விருப்பம் உள்ளவர்கள் இணையதள முகவரிக்கு, வரைபடம், பாஸ்போர்ட் புகைபடம், வங்கி கணக்கு எண், ஆதார், குடும்ப அட்டை, உரிமை கட்டணம் கட்டி இணையதளம் மூலம் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் நகரப் பகுதிக்கு வருகின்ற 22ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை புரிய உள்ளார். அதனால் அன்று காலை முதல் மாலை வரை நாமக்கல் நகரப் பகுதிக்குள் லாரிகள் மற்றும் பேருந்துகள் மாற்று பாதையில் செல்ல வேண்டுமென நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா தெரிவித்துள்ளார். பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்துகள் பிரதான சாலை வழியாக வந்து மீண்டும் பைபாஸ் வழியாக வெளியே செல்ல வேண்டும்.
திருப்பத்தூர் மாவட்ட ஊர்காவல் படையினருக்கு பல்பொருள் அங்காடியில் பொருட்கள் வாங்குவதற்கான அடையாள அட்டை மற்றும் அவர்களுக்கான சீருடைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா இன்று காலை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஊர்காவல் பிரிவு ஆண்கள், பெண்கள் என பலர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் பகுதியை சேர்ந்த வரதராஜ பெருமாள் (28) என்பவர் தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் காவல் நிலைய கோட்பட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதியில் விபத்துக்குள்ளானதில் மூளை சாவு அடைந்தார். அதனை அடுத்து அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு அரசு அலுவலர்கள், காவலர்கள் இறுதி அஞ்சலி அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் பல இடங்களில், குறிப்பாக கிராமப்புறங்களில் நடைபெறும் குழந்தை திருமணம் உள்ளிட்டவற்றை குழந்தை பாதுகாப்பு உதவி மையம் 1098 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றும் சட்டவிரோதமாக நடைபெறும் குழந்தை திருமணத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் கருவுற்ற பெண்களின் பாலினத்தை கண்டறிந்து பெண் சிசு கரு கலைப்பு செய்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அறிவிப்பு.
மெரினா கடற்கரையில் உள்ள மாநகராட்சி நீச்சல் குளம், 1.37 கோடி ரூபாயில் சீரமைக்கப்பட்டு, சமீபத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. நீச்சல் குளத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை. இந்நிலையில், https://chennaicorporation.gov.in/gcc என்ற இணையதளத்தில் பொதுமக்கள் முன்பதிவு செய்வது, வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கவும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதை SHARE பண்ணுங்க.
திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 25ஆம் தேதி காலை 10:30 மணியளவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமை வகிக்கிறார். முதலில் விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை கொடுக்க வேண்டும். அதன்பின் பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்களில் ஒரு சங்கத்துக்கு ஒருவர் வீதம் தங்களது கோரிக்கையை தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் 1ஆண்டு தொழில் பழகுநர் பயிற்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட மாணவர்கள் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், சிவில், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், இசிஇ ஆகிய பொறியியல் பிரிவில் டிப்ளமா, பொறியியல் அல்லாத பிரிவில் பட்டப் படிப்பை முடித்தவர்கள் என 499 பேருக்கு தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியில் சேர www.boat-srp என்ற இணையதளத்தில் அக்.21க்குள் விண்ணப்பிக்கலாம்.
பூந்தமல்லியில் உள்ள ஹோட்டல் ஹைவே நிகழ்ச்சி அரங்கத்தில் இன்று திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் இந்த கூட்டத்தில் பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி உட்பட கட்சி நிர்வாகிகள் இருந்தனர்
Sorry, no posts matched your criteria.