India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்ட காவல்துறை நேற்று (அக்.18) வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்த போர்டல் (CEIR- Central Equipment Identity Register) மூலமாக கொடுக்கப்படும் புகாரால் தொலைந்து போன அல்லது தவறவிட்ட செல்போனை உடனடியாக மீட்க பயன்படுகிறது. ஒரு வேளை நீங்கள் பாதிக்கப்பட்டால் https://cybercrime.gov.in/ ல் புகார் அளிக்கவும். மேலும் 1930 என்ற சைபர் கிரைம் இலவச எண்ணிலும் புகார் அளிக்கலாம்.
சிவகாசி அருகே நாரணாபுரத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ராஜசேகரன் (40). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வைர பிரகாசத்திற்கும் ஏற்பட்ட தகராறில் ராஜசேகரன் வைர பிரகாசத்தை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வைர பிரகாஷ் அவரது தந்தை விநாயக மூர்த்தி, சகோதரர் விக்ரமனை அழைத்து சென்று ராஜசேகரனை கத்தி அரிவாளால் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.கொலை செய்த தந்தை மகன்கள்களை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த 2023-2024-ம் கல்வி ஆண்டில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, முதல் 10 இடங்களை பிடித்த காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 20 மாணவ/மாணவியர்களுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், காவலர் சேமநல நிதியிலிருந்து ரூபாய்.1,23,000/- பணத்தை ஊக்கத்தொகையாக நேற்று அக்டோபர் 18 வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறிய அளவிலான வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு பெற்ற 58 ஆண்கள், 25 பெண்கள் என 83 தேர்வாகினர். அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் பணி நியமன ஆணைகளை நேற்று வழங்கினார். மேலும், முதற்கட்ட தேர்வில் 143 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிகழ்வின் போது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தணிகைவேல் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
தாய்கோ வங்கி கிளைகளில் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு மிக குறைந்த வட்டியில் (7%) ரூ.20 லட்சம் வரை புதிய திட்டமான கலைஞர் கடன் உதவி திட்டத்தின் கீழ் நடைமுறை மற்றும் மூலதன கடன்கள் வழங்கப்பட உள்ளன. இதனால் குறு உற்பத்தி நிறுவனங்கள் அசையா சொத்துக்களை அடமானம் வைத்து இந்த கடன்களை மாவட்ட தொழில் மையத்தை நேரில் அணுகி பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் இன்று (அக்.18) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்கள். மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று (அக்.18) இரவு நேர ரோந்து பணிகளுக்குபோலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில் குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்ணைகளை தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கக்கபட்டுள்ளது.
காஞ்சிபுரம், புத்தேரி மேட்டுத்தெரு பகுதியில் வசிக்கும் முதுகலை தமிழ் பட்டதாரி மாணவியான நீனா, கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக பிக் பாக்ஸிங் பயிற்சிகளை பெற்றுள்ளார். இவர் அக். 6ம் தேதியில் இருந்து 13-ஆம் தேதி வரை கம்போடியா நாட்டில் நடைபெற்ற வாக்கோ ஆசிய கிக் பாக்ஸிங் போட்டியில் தமிழக சார்பில் பங்கேற்றார். இதில் 1 தங்கம், 2 வெள்ளி பதக்கங்களை பெற்று காஞ்சிபுரத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
தி.மலை, கிரிவலப்பாதையில் மேம்படுத்தப்பட்டு வரும் அருணகிரிநாதர் மணிமண்டபத்துக்கான பணிகள், பக்தர்கள் தங்கும் இடம், பேவர் ப்ளாக் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் உள்ளிட்டவற்றை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்து, அவை குறித்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடம் கேட்டறிந்தார். இதில் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
Sorry, no posts matched your criteria.