India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நலத்திட்ட உதவிகள் கோரும் மனுக்களை பெறுதல் தொடர்பாக 24.10.2024 அன்று முற்பகல் 11.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் 2ஆம் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளது. சீர்மரபினர் இனத்தை சார்ந்தவர்கள் மேற்படி முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மழையின் காரணமாக மூடப்பட்டிருந்த சென்னை கலைஞர் நூற்றாண்டு பூங்கா வரும் சனிக்கிழமை (19.10.2024) முதல் பூங்கா வழக்கம் போல் செயல்படும் என நிர்வாகம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், கூட்ட நெரிசலைத் தவிர்க்க கலைஞர் நூற்றாண்டு பூங்காவிற்கான நுழைவுச்சீட்டு https://tnhorticulture.in/kcpetickets என்ற இணையதளம் வாயிலாக பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில் “நான் காவல்துறையிலிருந்து அழைக்கிறேன். உங்கள் பார்சல் கைப்பற்றப்பட்டது. அதில் போதைப் பொருள் இருப்பதைக் கண்டுபிடித்தோம்” என பொதுமக்கள் தங்கள் தொலைபேசிக்கு வரும் போலியான அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் போலியான அழைப்புகளை தவிர்த்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு அரசு அறிவித்த காலை 6-7 மாலை 7-8 மணி வரை என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும்;. மருத்துவமனைகள், பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள், சரணாலயங்கள் உள்ள பகுதிகளில் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்கவும் என ஆட்சியர் கமல்கிஷோர் இன்று 18ம் தேதி அறிவிப்பு.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகமான மழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி இருக்கின்றன. எனவே பொதுமக்கள் நீர்நிலை பகுதிகளில் செல்பி எடுப்பது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடக் கூடாது என திருவள்ளூர் காவல்துறை எச்சரிக்கை பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அக்டோபர் 19ஆம் தேதி மதியம் 3 மணி அளவில் சிறு அரசு துறை அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்து துறைவாரியாக தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரிவாக கேட்டறிந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும், இந்த ஆய்வுக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் உள்ளிட்ட காலர் கலந்து கொள்ள உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று அறிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 18) அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
சென்னையில் 11 வது மாடியில் இருந்து கீழே விழுந்து காவலர் பலியாகியுள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள ஆர் ஆர் போலீஸ் ஸ்டேடியம் குடியிருப்பில் எலக்ட்ரிஷன் ஒர்க் செய்து கொண்டிருந்த போது 11ஆவது அடுக்குமாடி குடியிருப்பு மேலிருந்து தவறுதலாக கீழே இருந்த கார் மீது காவலர் செல்வகுமார் விழுந்து சம்பவ இடத்தில் உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை பழைய மாவட்ட ஆட்சியர் அருங்காட்சியக வளாகத்தில் சுற்றுலாத்துறை சார்பில் தஞ்சாவூர் கைவினை பொருட்கள் ஒன்றான நெட்டி வேலைப்பாடு கைவினை பொருட்கள் பயிற்சி வகுப்பு நாளை 19.10.2024 சனிக்கிழமை அன்று காலை 10.30 மணி முதல் 12 மணி வரை நடைபெறுகிறது. பயிற்சி கட்டணம் ரூபாய் 100. முன்பதிவிற்கு httpd/thanjavurtourism.org என்ற இணையத்தை பயன்படுத்தவும்.
கொள்ளிடம் அடுத்த ஆணைக்காரன் சத்திரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சுரேந்திரன் (27) என்பவர் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளி சுரேந்திரனை மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி எஸ்பி அறிவுறுத்தலில் குண்டர் தடுப்பு சட்டத்தில் இன்று கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.