India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
துறையூறை சேர்ந்தவர் சுரேஷ்.இவரும் இவரது மனைவியும் வீட்டிலேயே முறுக்கு,மிச்சர்,இனிப்பு பலகாரம் செய்து சுற்றுப்புற கிராம கடைகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் தொழிலுக்காக கடன் அதிகமாக சுரேஷ் வாங்கி உள்ளார். கடன் கொடுத்தவர்கள் கடனை கேட்டு உள்ளனர். இதனால்,கணவன்- மனைவி இருவரும் நேற்று கத்தியால் கழுத்தை அறுத்துக்கொண்டனர். இதில், சுரேஷ் உயிரிழந்தார். இது குறித்து துறையூர் போலீசார் விசாரணை.
கோவை கலெக்டர் அலுவலகம் நேற்று எடுத்த செய்தி குறிப்பில், பொது விநியோக திட்ட சேவைகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் விதமாக மாதந்தோறும் 2வது சனிக்கிழமை மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சிறப்பு குறைகேட்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி நாளை சிறப்பு வட்ட வழங்கல் அலுவலகங்களில் முகாம்கள் நடைபெற உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வந்தவாசி அடுத்த சீயமங்கலம் கிராமத்தில் பட்டா திருத்தம் செய்வதற்கு புஷ்பா என்பவரிடம் கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் ரூபாய் 3000 லஞ்சம் கேட்டதாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் இன்று கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் புஷ்பாவிடம் லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களமாக பிடித்து தற்போது வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்துகின்றனர்.
தாம்பரம் ரயில்நிலையத்தில் 4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் புதுவை பா.ஜ.க எம்.பி செல்வகணபதிக்கு சம்மன் புதுச்சேரி பா.ஜ.க எம்.பி செல்வகணபதி, சூரஜ், பங்கஜ் லால்வாணி ஆகிய 3 பேருக்கு சம்மன் வழங்கி, வருகிற 25ஆம் தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராக சிபிசிஐடி போலீசார் இன்று உத்தரவிட்டுள்ளனர் . மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஹவாலா பணம் என சந்தேகம் எழுந்துள்ள நிலையில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.
தூத்துக்குடியில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அந்தந்த வட்டங்களில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து பொது விநியோக சிறப்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. இதில் குடும்ப அட்டை முகவரி மாற்றம், பெயர் திருத்தம், புதிய குடும்ப அட்டை போன்றவைக்கு விண்ணப்பித்தல் உள்ளிட்ட சிறப்பு முகாமில் பொதுமக்கள் தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
சென்னிமலையில் இன்று பெருந்துறை போக்குவரத்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது ஒரு இளைஞர் புல்லட் வண்டியில் செல்லும்போது வெடிச்சத்தம் போன்ற ஒரு அதிபயங்கர சத்தம் கேட்டுக் கொண்டே சென்றது. இதனைக் கண்ட போக்குவரத்து போலீசார், அந்தப் பைக்கை ஓட்டி வந்த இளைஞருக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை செய்து அனுப்பினர்.
சேலம் ஈரடுக்கு பேருந்து நிலையத்தில் ரூபாய் 2.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நகரும் படிக்கட்டுகளை வரும் அக்.20-ம் தேதி சேலத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்ளும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பேருந்து பயணிகளுக்கு அர்ப்பணிக்கிறார். அதேபோல், சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை கிடைக்கப் பெறாத மாற்றுத்திறனாளிகள் பயன் பெற வட்டார வாரியாக சிறப்பு மருத்துவ முகாம்கள் 22,23 புகழுரிலும் 24,25, கோவ குளம், கிருஷ்ணராயபுரம் அரசு மருத்துவமனை 26,29 குளித்தலை அரசு மருத்துவமனையில் 05,06,07.11.24 ஆகிய மூன்று நாட்களும் முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு செய்தார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று(அக்.18) வெளியிட்டுள்ள அறிக்கையில், சீர் மரபினர் இனத்தினை சார்ந்த 18 – 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு சீர் மரபினர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்வதற்கான முகாம் வருகிற அக்.24-ஆம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் & சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நடைபெறவுள்ளதை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார். (SHARE IT)
நாமக்கல் மாநகராட்சி பகுதிக்கு வருகின்ற 22ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை புரிய உள்ளார். முதல் நிகழ்ச்சியாக பரமத்தி சாலையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து முதலைப்பட்டி புதூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டப மைதானத்தில் முதலமைச்சர் சிறப்புரையாற்றி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.
Sorry, no posts matched your criteria.