Tamilnadu

News October 18, 2024

நீட் சென்டரில் மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் –  உரிமையாளர் கைது

image

பாளையில் உள்ள தனியார் நீட் பயிற்சி மையத்தில் படிக்கும் மாணவர்களை துன்புறுத்தியதாக வந்த தகவல் அறிந்து தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை செய்தது.  இந்நிலையில், மேலப்பாளையம் காவல்துறையினர் பயிற்சி உரிமையாளர் மீது 323 அடித்தல், 355 செருப்பால் அடித்தல், 75 J J இளம் சிறார்களை தாக்குதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அகாடமி உரிமையாளர் ஜலாலுதீனை கைது செய்தனர்.

News October 18, 2024

திருவாரூர் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் இன்று தமிழ்நாடு தொழில்துறை மற்றும் தொழில் முதலீடு ஊக்குவிப்பு வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டனர்.

News October 18, 2024

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் குறித்து ஆட்சியர் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு அக்டோபர்- 2024 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 25.10.2024 வெள்ளிகிழமை அன்று காலை 10.00 மணியளவில், மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News October 18, 2024

தூக்கில் தொங்கி இறந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு.

image

க.விலக்கு டூ கண்டமனூர் செல்லும் சாலையில் அண்ணா நுற்பாலைக்கு பின்புறத்தில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மரத்தில் இறந்த நிலையில் தொங்கிக் கொண்டு இருப்பதாக க.விலக்கு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, தற்கொலையா? கொலையா? என்று கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

News October 18, 2024

வேலூர் மாவட்டத்தில் ரேஷன் கார்டு திருத்த முகாம்

image

பொது விநியோகத் திட்டத்தின் சேவைகள் குறித்து சிறப்பு குறைதீர்வு முகாம் வேலூர் மாவட்டத்தில் தாலுகா வாரியாக குறிப்பிட்ட கிராமங்களில் நாளை நடக்கிறது. வேலூர் தாலூகா- கீழ்மொணவூர், அணைக்கட்டு-கரடிகுடி, குடியாத்தம் -ராஜா கோவில், கேவிகுப்பம்-மேல்காவனூர், ஆகிய இடங்களில் நடக்கிறது. ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், குடும்ப தலைவர் மாற்றம் போன்றவற்றை செய்துகொள்ளலாம்.

News October 18, 2024

கன்னிவாடி அருகே வேன் கவிழ்ந்து விபத்து

image

திருப்பூர்: கன்னிவாடி அடுத்த ஆனங்கூர் பகுதியில் இன்று வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையின் இடது புறம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் வேனில் பயணித்த அனைவரும் சிறிய காயங்களுடன் உயிர்த்தப்பினர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 18, 2024

காஞ்சிபுரத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று 31 மாவட்டத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.

News October 18, 2024

புதுவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை

image

புதுவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1000 உயர்த்தி வழங்கப்ப டும் என சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார். அதன்படி அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் சட்டசபையில் அதற்கான நடவடிக்கை எடுத்தார். அதன்படி புதுவை சமூகநலத்துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை கூடுதலாக ரூ.1000 உயர்த்தி வழங்கப்படும். இதன்மூலம் புதுவையில் 21,329 ரூ.1000 பயனடைவர் என தெரிவித்துள்ளார். 

News October 18, 2024

விழுப்புரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று 31 மாவட்டத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.

News October 18, 2024

திருவாரூர்: பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 15 கடைசி நாள்

image

நாடு முழுவதும் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களுக்கு பயிர் காப்பீடு செய்வதற்காக பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்ட அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகங்களில் பயிர் காப்பீடு செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE NOW!

error: Content is protected !!