India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் நேற்றிரவு முதல் திடீரென மழை பெய்து வருகிறது. பகலில் மழை பெய்யாத நிலையில், நள்ளிரவு சுமார் 2.25 மணி முதல் அம்பத்தூர், கோயம்பேடு, சைதாப்பேட்டை, கிண்டி, நுங்கம்பாக்கம், அடையாறு, தேனாம்பேட்டை, வடபழனி, சோழிங்கநல்லூர், OMR சாலை, ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று காலை கரையை கடந்தது.
பேரளம் அருகே காரைக்கால் – பெங்களூரு செல்லும் ரயில் நேற்று காலை 6 மணிக்கு கொத்தவாசல் என்ற இடத்தில் சென்றபோது, 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் தண்டவாளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதை பார்த்த என்ஜின் டிரைவர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வேம்பத்தூர் காலனியை சேர்ந்தவர் எட்வின்ராஜ். இவருக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி கனகசபாபதி என்பவர் ரூ.6 லட்சம் வாங்கி கொண்டு வேலை வாங்கி கொடுக்காததால் பணத்தை கேட்ட போது இரண்டு காசோலைகளை கொடுத்துள்ளார். அந்த காசோலையில் வங்கியில் பணம் இல்லாததால் பணத்தை எட்வின்ராஜ் திருப்பி கேட்டபோது அவரையும் ஜெகன் என்பவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கோட்டாறு போலீசார் நேற்று வழக்கு செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அக்டோபர் 23ஆம் தேதி முதல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ (பிரிலிம்ஸ்) போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்கள் விவரங்களை https://forms.gle/13skgPbY9TZk5Zf18 என்ற லிங்க்கில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு 0424-2275860, 9499055943 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
கடலூர் பல்வேறு மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (19-ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை திட்டக்குடி, பி முட்லூர், செம்மங்குப்பம் , பெண்ணாடம், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, விருதாச்சலம், காட்டுமன்னார்கோயில், பரங்கிப்பேட்டை, ஆலப்பாக்கம், எறையூர், கருங்குழி, மேலப்பாளையம், புவனகிரி, நெல்லிக்குப்பம், கிள்ளை ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது.
சேலம் அரசு இசைப்பள்ளியில் வரும் அக்.20- ம் தேதி அன்று காலை 09.15 மணிக்கு மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நடைபெற உள்ளதாக ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். குரலிசைப் போட்டி, பரதநாட்டிய போட்டி, நாட்டுப்புற நடனப் போட்டி, ஓவியப்போட்டி நடைபெறுகிறது. 5 முதல் 8 வயது, 9 முதல் 12 வயது, 13 முதல் 16 வயது வகை சிறார்களுக்கிடையே கலை ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில் இப்போட்டி நடைபெறுகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி,ஊராட்சித் துறையின் சாா்பில் ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் கீழ் காளையார்கோவில், தேவகோட்டை, மானாமதுரை ஆகிய ஒன்றியங்களில் உள்ள 124 ஊராட்சிகளில் 263 தொழில் முனைவோா்களுக்கு வங்கிகள் மூலம் ரூ.9.76 கோடி கடன் தொகை விடுவிக்கப்பட்டது. இதில் மானியம் ரூ.2.93 கோடி என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள யூனியன் கிளப் சார்பில் இன்று மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம் யூனியன் கிளப் சார்பில் குறு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறும் எனவும் இதில் பங்கேற்று பயனடைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் அரசு பொது இ-சேவை மையத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். நேரடி விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது. எனவே, உரிமம் பெற விருப்பமுள்ளவர்கள் நாளைக்குள் (அக்.19) விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார். உடனே ஷேர் பண்ணுங்க
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வரும் (18.10.2024) வெள்ளிக்கிழமை காலை 10:30 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற உள்ளது. மேலும் வேளாண் துறை அலுவலர்கள் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகளை தீர்வு காண உள்ளதால் விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனர்.
Sorry, no posts matched your criteria.