India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 13.09.2024 முதல் நடைபெற்று வரும் 30வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியின் நிறைவு விழா 21.10.2024 திங்கட்கிழமை மாலை 5.00 மணியளவில் கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிறைவு விழா நிகழ்ச்சியில் சிறந்த முறையில் அரங்கம் அமைத்த அரசுத்துறை அலுவலர்களுக்கும் சிறந்த விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.
திருநல்வேலியில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வாகனம் விபத்துக்குள்ளானதாக வரும் செய்தி தவறானது. விபத்துக்குள்ளான வாகனம் அந்தநல்லூர் ஒன்றிய பெருந்தலைவர் அண்ணன் ச.துரைராஜ் அவர்களுடையது. யாருக்கும் காயம் ஏதுமில்லை என திருச்சி மத்திய மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி தகவல் தெரிவித்துள்ளனர்.
கமிஷனர் அருண் சார்பில் மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அவர் மன்னிப்பு கேட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், “நான் மன்னிப்பு கேட்கவில்லை. என் விளக்கத்தை ஏற்று மாநில மனித உரிமைகள் கமிஷன், வழக்கிலிருந்து என்னை விடுவித்துள்ளது. அவ்வளவு தான்” என கமிஷனர் அருண் இன்று விளக்கம் அளித்துள்ளார். அவர் மன்னிப்பு கேட்டதாக தவறான தகவல் பரவியதால், அவர் விளக்கம் அளித்துள்ளார்.
காஞ்சிபுரம் தீபிகா மருத்துவமனையில், நாளை (அக்.20) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஆஸ்துமா மற்றும் நுரையீரல் நோய்களுக்கான இலவச பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. மூச்சுத்திணறல், நீண்ட கால இருமல், சளி, நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்கான சிகிச்சை ஆலோசனைகளை மூத்த உதவி அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் நுரையீரல் நிபுணர் டாக்டர் தீபிகா வழங்க உள்ளார். ஷேர் பண்ணுங்க
கோவை, வால்பாறை அடுத்த ஊசிமலை தேயிலை தோட்டப் பகுதியில் சிறுத்தை தாக்கி 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநில தொழிலாளர்களின் குழந்தை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுத்தை தாக்கியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை கதீட்ரல் சாலையில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவுக்கு மழையின் காரணமாக கடந்த 15ஆம் தேதி முதல் 18ஆம் தேதி (நேற்று) வரை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், சனிக்கிழமை (இன்று) முதல் பூங்கா வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்படுகிறது, நுழைவுச்சீட்டை ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என தோட்டக்கலைத்துறை சார்பாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட அறிக்கை: தீபாவளியில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். பட்டாசு வெடிப்பதால் நிலம், நீர், காற்று மாசுபடுகிறது. வருங்காலத்தில் பசுமை பட்டாசுகளையே உற்பத்தி செய்து விற்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளனர். தீபாவளி காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு, 7 முதல், 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் சர்வதேச முனையத்திலிருந்து, உள்நாட்டு முனையத்திற்கு டிரான்சிட் பயணிகள் வரும் வழியில் உள்ள 7 அடி உயரம் 3 அடி அகலம் கொண்ட கண்ணாடி கதவு திடீரென உடைந்து நொறுங்கியது. இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள், அந்த வழியை மூடிவிட்டு, பயணிகளை வேறு வழியாக அனுப்பி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் கண்ணாடிகள் உடைவது, தொடர்ந்து வருவதால் பரபரப்பு உள்ளது.
செம்பரபாக்கம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி, தற்போது நீர் இருப்பு 13.97 அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தம் 3.645 டி.எம்.சி. தண்ணீரை தேக்கி வைக்க முடியும். தற்போது, தண்ணீரின் அளவு 1.348 டி.எம்.சி.யாக உள்ளது. தற்போது குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்காக 134 கன அடி நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது.
குடிமை பொருள் கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பவங்கள் நடைபெற்று வருவதால் இது பற்றி பொதுமக்கள் நேரடியாக புகார் தெரிவிக்க அரசு தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் எண்களை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி 18005995950 என்ற தொலைபேசி எண்ணிலும், வாட்ஸ் அப் எண்ணாக 9677736557 என்ற எண்களை அரசு வெளியிட்டுள்ளது. இவற்றில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.