Tamilnadu

News October 20, 2024

திருச்சியின் முதல் அமைச்சர் யார் என்று தெரியுமா?

image

சுதந்திர வரலாற்றில் முக்கியமான பெயர் என்றால் அது ‘டி.எஸ்.எஸ் ராஜன்’. காந்தி,நேரு போன்ற மகான்கள், திருச்சிக்கு வந்தபோதெல்லாம் இவரின் பங்களாவில் தான் தங்குவார்கள். 1927இல் ராஜனின் மருத்துவ நிலையத்தை காந்தியடிகள் தான் திறந்து வைத்தார். மேலும் 1937ஆம் ஆண்டு ராஜாஜி அமைத்த அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராகவும், திருச்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமைச்சரும் இவர் தான். SHAREIT

News October 20, 2024

ஜாமீனில் வெளிவந்த கைதி தற்கொலை

image

தாமரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (55). இவர் போக்சோ வழக்கில் கைதான நிலையில் 2021ல் மாவட்ட மகிளா நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. இத்தீர்ப்பை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்த பழனிசாமி சில மாதங்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News October 20, 2024

மருத்துவமனையை திறந்து வைத்தார் அமைச்சர்

image

மறைமலை நகரில், ஜீவன் மருத்துவமனையின் 2ஆவது கிளை நேற்று திறக்கப்பட்டது. திறப்பு விழாவில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். இந்நிகழ்வில், காஞ்சிபுரம் எம்.பி. க.செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், செங்கல்பட்டு நகர்மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், மருத்துவமனை நிறுவனர் டாக்டர் ஓ.வி.ஜெயகுமார், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News October 20, 2024

போக்குவரத்து விதிகளை மீறிய 627 பேர்கள் மீது வழக்கு

image

குமரி மாவட்டம் முழுவதும் நேற்று(அக்.,19) காலையில் இருந்தே  தீவிர வாகன சோதனை நடந்தது. போக்குவரத்து விதிகளை மீறிய 627 பேர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஹெல்மெட் இல்லாமல் வந்தவர்களில் 200க்கு மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், செல்போன் டிரைவிங், அதிகவேகம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்தனர்.

News October 20, 2024

திமுக செயல்படுத்தவில்லை: முன்னாள் அமைச்சர் காமராஜ்

image

மன்னார்குடியில் நேற்று இரவு அதிமுக சார்பில் 53 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு, தமிழகத்தில் அம்மா கொண்டு வந்துள்ள அனைத்து திட்டங்களையும் திமுக தற்பொழுது செயல்படுத்தவில்லை என்று கூறினார். மேலும் இந்த திட்டத்தை 2026ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றவுடன் நடைமுறைப்படுத்துவதாக கூறினார்.

News October 20, 2024

இளைஞர்களை குறிவைத்து இணைய வழியில் மோசடி

image

புதுச்சேரி இணைய வழி குற்றப்பிரிவு கண்காணிப்பாளர் பாஸ்கரன் குறிப்பிட்டுள்ளதாவது, இணைய வழியில் இளைஞர்களை குறி வைத்து மசாஜ் மையங்கள் போன்ற தகவல்கள் மோசடியாளர்களால் கையாளப்படுகின்றன. ஆகவே, பணத்தை செலுத்தி இளைஞர்கள் ஏமாற வேண்டாம். அத்துடன், மோசடிக் கும்பலால் பாதிக்கப்படுவோர் பயப்படாமல் புகாரளிக்க வேண்டும். கடந்த 2 மாதங்களில் ரூ.7 லட்சம் மோசடி நடந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

News October 20, 2024

59 குளங்கள் நிரம்பி உள்ளதாக மாநகராட்சி தகவல்

image

தற்போது பெய்த கனமழையால், சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. குறிப்பாக, திருவொற்றியூர் மண்டலம் தாமரைக்குளம், மணலி மண்டலம் எலந்தனுார் குளம், பர்மா நகர் குளம், கன்னியம்மன்பேட்டை குளம், காமராஜபுரம் குளம், வடபெரும்பாக்கம் குளம், விநாயகபுரம் மயானபூமி குளம், தீயம்பாக்கம் குளம், காந்திநகர் குளம் உட்பட 59 குளங்களில் மழைநீர் நிரம்பியுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

News October 20, 2024

‘ஆரவாரத்துடன் வரவேற்ற உடன்பிறப்புகளுக்கு நன்றி’

image

சேலத்தில் இன்று நடைபெறவுள்ள அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார். இந்நிலையில் “மாவட்ட எல்லையான தலைவாசல் அருகே சாலை நெடுக நின்றிருந்து, என்னை ஆரவாரத்துடன் வரவேற்ற முத்தமிழ் அறிஞர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளுக்கு என் அன்பையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

News October 20, 2024

ராமநாதபுரம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு – ஆட்சியர் தகவல்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2024-25ஆம் ஆண்டு ராபி பருவ தோட்டக்கலை பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி வெங்காயம், கொத்தமல்லி பயிர்களுக்கு 17.01.2025, வாழை பயிருக்கு 28.02.2025, மிளகாய் பயிருக்கு 31.01.2025 வரை காப்பீடு பிரீமியம் தொகை செலுத்தி பதிவு செய்து பயன் பெறலாம் என ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

News October 20, 2024

தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை: நெல்லை SP

image

சமூக வலைத்தளத்தில் தவறான தகவலை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார். தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்க நிறுவனத் தலைவர் கண்ணபிரான் கைது தொடர்பாக சிலர் தவறான கருத்துகளை சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். யூடியூப்பில் ஒருவர் குறிப்பிட்ட நபருக்கும் கண்ணபிரானுக்கும் இடையே உள்ள பகையை குறிப்பிட்டுள்ளார்.இது உண்மைக்கு புறம்பான தவறான கருத்து ஆகும்.

error: Content is protected !!