Tamilnadu

News August 22, 2025

நீலகிரி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

நீலகிரி மக்களே வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். மற்றவர்களுக்கு ஷேர் செய்யவும்

News August 22, 2025

கிருஷ்ணகிரியில் வேலைவாய்ப்பு முகாம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (ஆக.22) காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. எட்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். 25க்கு மேற்பட்ட கம்பெனிகள் பங்கேற்க உள்ளன. மாவட்ட வேலை வாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஷேர் பண்ணுங்க

News August 22, 2025

இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம்.

image

தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், இன்று (ஆக.22) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. விருப்பமுள்ள ஆண், பெண் அனைவரும் கலந்து கொண்டு பயனடையலாம். SHARE பண்ணுங்க!

News August 22, 2025

விழுப்புரம்: வேளாண் திட்டங்கள் குறித்து ஆய்வு.

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ஆய்வுக் கூட்டம் நேற்று (ஆக.21) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வேளாண் இணை இயக்குநர் சீனிவாசன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பிரேமலதா உட்பட பலர் இதில் பங்கேற்றனர்.

News August 22, 2025

நெல்லை: ரூ.85,000 சம்பளத்தில் வங்கி பணி

image

நெல்லை இளைஞர்களே; பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள 750 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டிகிரி முடித்த 20 – 30 வயதிற்க்குட்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணபிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 04.09.2025. மேலும் விவரங்களுக்கு <>கிளிக் <<>>செய்யவும். *ஷேர் பண்ணுங்க

News August 22, 2025

100 கோடி ரூபாய் கல்வி கடன் வழங்க இலக்கு – ஆட்சியர் தகவல்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்படிப்பு பயில விரும்பும் மாணவ – மாணவிகளுக்கு கல்விக்கடன் பெற ரூ.100 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று தெரிவித்தார். இதில் இதுவரை ரூ.28 லட்சம் கடனாக வழங்கப்பட்டுள்ளது என்றும், மாணவ-மாணவியர்கள் உயர்கல்விக்கு கல்விக்கடன் பெறுவதற்கு விண்ணப்பித்து கடன் பெறலாம் என்றும் அவர் கூறினார்.

News August 22, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் 4724 மனுக்களுக்கு உடனடித் தீர்வு

image

குமரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருகிறது. இதுவரையிலும் 120 முகாம்கள் நடத்தப்பட்டு 62,638 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. சொத்து வரி, பிறப்பு சான்றிதழ், பெயர் மாற்றம், மின் கட்டண பெயர் மாற்றம், புதிய மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட 4724 மனுக்களுக்கு தீர்வுகள் காணப்பட்டு அதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

News August 22, 2025

மகளிர் உரிமைத்தொகைக்கு 73,915 பேர் விண்ணப்பம்!

image

சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 20- ஆம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் நடந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பல்வேறு துறைகள் சார்பில் 63,342 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக் கோரி 73,915 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். மகளிர் உரிமைத்தொகைக் கோரி விண்ணப்பங்கள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

News August 22, 2025

கரூர் மாவட்டத்தில் இன்று மின்தடை

image

கரூர்: மின் அலுவலகத்திற்கு உட்பட்ட சஞ்சய் நகர் மின்பாதையில் இன்று(ஆக.22) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் அருள் நகர், சுந்தர் நகர், ஆத்தூர் பிரிவு, செல்லராபாளையம், திருமால் நகர் ,மருத்துவ நகர் ,அமிர்தாம்பாள் நகர், சஞ்சய் நகர், சாந்தி நகர் ,அர்ச்சனா நகர், அம்மன் சிட்டி, பழனியப்பா நகர், ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்ரத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 22, 2025

BREAKING: சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை

image

சென்னையில் இன்று (ஆக.22) அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கு மழை நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமான என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்றும் வழக்கம் போல் இயக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!