Tamilnadu

News May 7, 2025

தென்காசி மாவட்ட காவல்துறையின் விழிப்புணர்வு பதிவு

image

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம், சமூக வலைதளத்தில் இன்று ஸ்கேம் அலர்ட் வெளியிட்டுள்ளது. இந்திய ராணுவத்திற்கு உடனடி நிதி உதவி தேவை என பொய்யான மோசடி செய்தி பரவுவதாக எச்சரித்துள்ளது. பொதுமக்கள் இத்தகைய மோசடி செய்திகளை நம்ப வேண்டாம், பகிர வேண்டாம் எனவும், சந்தேகத்திற்குரிய செய்திகளை உடனடியாக காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.

News May 7, 2025

திருப்பூரில் ரூ.45,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித்துறையின் கீழ், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், காலியாக உள்ள குறைதீர்ப்பாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணிக்கு திருப்பூரை சேர்ந்தவர்கள் வரும் மே.5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.45000. விண்ணப்பங்களை பதிவிறக்க செய்ய இந்த லிங்கை <>க்ளிக் <<>> செய்யுங்கள். இதை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News May 7, 2025

தூத்துக்குடி: குறைகளை தெரிவிக்க வாட்ஸ்அப் எண் – அமைச்சர் தகவல்

image

தூத்துக்குடி, அனைத்து துறைகளிலும் உள்ள குறைகளையும் புகார்களையும் இந்த வாட்ஸ் ஆப் எண் 80980 24555 மூலமாகவோ அல்லது தொலைபேசி எண்(80980 24555) மூலமாகவோ இங்கே கொடுக்கப்பட்டுள்ள வெப்சைட் <>லிங்க் <<>>மூலமாகவோ அமைச்சர் கீதா ஜீவனிடம் நேரடியாக தெரிவிக்கலாம். புகார்களுக்கு குறுகிய காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. *எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க*

News May 7, 2025

ராணிப்பேட்டை: காலி பணியிடங்கள் அறிவிப்பு

image

வேலூர் மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் உதவி சட்ட வழக்குரைஞர் (2), அலுவலக உதவியாளர் (3) ஆகிய காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என ராணிப்பேட்டை ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளார். விண்ணப்பங்களை 07.05.2025 மாலை 5.45 மணிக்குள் மாவட்ட நீதிபதிக்கு அனுப்ப வேண்டும் எனவும், நேர்காணல் 12.05.2025 அன்று நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 7, 2025

பாலியல் புகாரில் பேராசிரியர் மீது வழக்கு பதிவு

image

நெல்லை மாவட்டம் அபிஷேக பட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக துணைவேந்தரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அதனை விசாரணை செய்ய தனி குழு அமைக்கப்பட்டது. மேலும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து பேராசிரியர் கண்ணன் மீது நெல்லை காவல் நிலையத்தில் இரு பிரிவின் கீழ் இன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

News May 7, 2025

வேலூர்: கூலி தொழிலாளிக்கு ரூ.1.70 கோடி ஜிஎஸ்டி கட்ட நோட்டீஸ்

image

குடியாத்தம் வெள்ளேரியை சேர்ந்த கவிதா தனது கணவருடன் நேற்று எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தார். அதில் ”நானும் எனது கணவரும் கூலி வேலைசெய்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமாக சென்னையில் நிறுவனம் இயங்கி வருவதாகவும், ரூ.1.70 கோடி ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அந்த நிறுவனத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறினர்.

News May 7, 2025

அட்சய திருதியையில் செல்ல வேண்டிய கோயில்கள்

image

அட்சய திருதியை குறைவில்லாத பெருக்கத்திற்கான நாளாகும். இந்நாளில் கடவுளை வணங்கினால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கோவை வழிபட வேண்டிய முக்கிய கோயில்கள் ▶️மருதமலை முருகன் கோயில், ▶️கோனியம்மன் கோயில் ▶️மேட்டுப்பாளையம் வனபத்திர காளியம்மன் கோயில் ▶️காரமடை அரங்கநாதர் சுவாமி கோயில், ▶️தண்டுமாரியம்மன் கோயில் ▶️பூரி ஜகனத் கோயில் ▶️ஆனைமலை மாசாணி அம்மன் ▶️கல்லாறு பழப்பண்ணை.

News May 7, 2025

கொல்கத்தா தீ விபத்தில் கரூரைச் சேர்ந்த மூன்று பேர் பலி

image

கரூர் உப்பிடமங்கலம் ஜோதிவடம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பிரபு தனது குடும்பத்துடன் நேற்று கொல்கத்தாவில் உள்ள தனியார் ஓட்டலில் சுற்றுலாவுக்காக தங்கியுள்ளார். அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், பிரபுவின் மாமனார் முத்துகிருஷ்ணன் (61), மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் தியா (10), ரிதன் (3) ஆகிய மூன்று பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். 

News May 7, 2025

பெரம்பலூரில் 15,000 சம்பளத்தில் வேலை

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள Sales Consultant பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. தகுதியுடைய பட்டபடிப்பை முடித்தவர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு இதை SHARE செய்து தெரியப்படுத்துங்கள்..

News May 7, 2025

தென்காசி மாவட்ட அணைகள் நீர் இருப்பு நிலவரம்

image

தென்காசி மாவட்டம் கடனா அணையில் இன்று காலை 7 மணி நிலவரப்படி 47 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு 2 கன அடி நீர் வருகிறது. 18 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. ராமநதி அணை நீர் இருப்பு 51 அடி. 4 கன அடி நீர் வருகிறது. 10 கண அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கருப்பாநதி நீர் இருப்பு 24 அடி. நீர் வரத்து இல்லை குண்டாறு அணை நீர் இருப்பு 23 அடி. அடவிநாயனார் அணை நீர் இருப்பு 21 அடியாக உள்ளது.

error: Content is protected !!