Tamilnadu

News October 22, 2024

விஜய பிரபாகரனுக்கு சிறப்பான வரவேற்பு

image

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தேர் வீதியில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்து கொள்வதற்காக வருகைபுரிந்த விஜய பிரபாகரனுக்கு தேமுதிகவினர் பாலதண்டாயுதபாணி கோயிலில் பரிவட்டம் கட்டப்பட்டு சிறப்பு தரிசனம் செய்து பின் மேடைக்கு அழைத்து வந்தனர். மேலும் தேமுதிகவினர் விஜய பிரபாகரனுக்கு பூங்கொத்து கொடுத்தும் ரோஜா பூ மாலை மணிமகுடம் வைத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

News October 22, 2024

பத்திரப்பதிவு அலுவலகத்தில் திடீர் சோதனை

image

வத்தலகுண்டு பத்திரப்பதிவு அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மாலை அலுவலகம் முடியும் நேரத்தில் திடீரென்று திண்டுக்கல் லஞ்சஒழிப்பு டிஎஸ்பி நாகராஜன் தலைமையிலான போலீசார் பத்திரப்பதிவு அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அலுவலகத்தில் இருந்த ஊழியர்களிடம் ரூ.82,900 கணக்கில் வராத பணத்தை கைப்பற்றினர்.

News October 22, 2024

உழைப்பதற்கு மட்டும் திமுக தொண்டனா? பரபரப்பு போஸ்டர்

image

தென்காசி நகராட்சி 12வது வார்டு செயலாளராக திமுகவை சேர்ந்த வேல்ஐயப்பன் உள்ளார். இவர், தென்காசி மேலமுத்தாரம்மன் கோயில் அறங்காவலர் குழு பதவிக்கு விண்ணப்பித்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவருக்கு பதவி வழங்காமல் பாஜக & காங்., கட்சியை சேர்ந்தோருக்கு வழங்கியதாக கூறி, நகர் மன்ற தலைவரும் மாவட்ட அறங்காவல் குழு தலைவருமான சுப்பையாவை கண்டித்து ஐயப்பன் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News October 22, 2024

உத்திரமேரூரில் 750 ஏக்கரில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா

image

ஒரடகம், ஸ்ரீபெரும்புதுார் பகுதிகளில் ஏற்கனவே 7 சிப்காட் தொழிற்பூங்காக்கள் இயங்கி வருகிறது. இந்த நிலையில், உத்திரமேரூரில் 750 ஏக்கரில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக, காஞ்சி நிர்வாகத்திடம் அறிக்கை கேட்டுள்ளது. இதற்காக, திருப்புலிவனம் கிராமத்தை சுற்றி புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க தேவையான அடிப்படை விபரங்களை வருவாய் துறையினர் சேகரிக்க தொடங்கியுள்ளனர்

News October 22, 2024

ராணிப்பேட்டையில் இன்று மழைக்கு வாய்ப்பு

image

இன்று 17 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க.

News October 22, 2024

கண்டமங்கலம் அருகே விபத்து: 3 வயது குழந்தை உயிரிழப்பு

image

புதுச்சேரி, பங்கூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் காவலர் கருணாகரன். இவர், நேற்று முன்தினம் தனது மகன் வெற்றிவேலுடன் (3) விழுப்புரத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கண்டமங்கலம் அருகே எதிரே வந்த கார் இவர் மீது மோதியது. இதில், குழந்தை வெற்றிவேல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது. இதுதொடர்பாக கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து ளர் ஓட்டுநரிடம் விசாரித்து வருகின்றனர்.

News October 22, 2024

குமரியில் 1.4 மீட்டர் உயர பேரலைக்கு வாய்ப்பு!

image

குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடல் பகுதியில் 16 முதல் 18 நொடிகள் இடைவெளியில் 1.2 மீட்டர் முதல் 1.4 மீட்டர் உயரத்துக்கு பேரலைக்கு வாய்ப்பு உள்ளது. இன்று(அக்.,22) இந்த நிலை நீடிக்கும் என இந்திய கடல் தகவல் சேவை மையம் நேற்று அறிவித்துள்ளது. எனவே கடலுக்கு செல்லும் மீனவர்கள், கடலோர பகுதிகளில் வசிக்கிறவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். SHARE IT.

News October 22, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகள் இன்று ஆஜர்

image

ஆம்ஸ்டராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு குண்டாஸில் அடைக்கப்பட்டுள்ள 26 பேர், அட்வைசரி போர்டில் இன்று ஆஜராக உள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இவர்கள், இன்று பிற்பகல் குண்டர் சட்ட அறிவுரை கழகத்தில் ஆஜராக்கப்படுகின்றனர். ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்பட 26 பேரையும் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அறிவுரை கழகத்தில் ஆஜராக்கப்பட உள்ளனர்.

News October 22, 2024

உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை

image

தக்காளி ரூ.40-60, குடைமிளகாய் ரூ.50, கத்திரிக்காய் ரூ. 60-70, கருணைக்கிழங்கு ரூ.50, வெண்டைக்காய் ரூ.25-30, சுரைக்காய் ரூ.15, உருளைக்கிழங்கு ரூ.40, கேரட் ரூ.50, பீன்ஸ் ரூ.70-80, வெங்காயம் ரூ.50-60, சின்ன வெங்காயம் ரூ.50-55, இஞ்சி ரூ.120-150, பூண்டு ரூ.300-350, காலிஃப்ளவர் ரூ25, வாழைத்தண்டு ரூ.10-15, கீரை வகைகள் ரூ.10-15, மாங்காய் ரூ.50-60, அவரை ரூ.70, முருங்கை ரூ.40-50 விற்பனை செய்யப்படுகின்றன.

News October 22, 2024

வருமான வரி மோசடி தலைமை ஆசிரியர் மீது வழக்கு

image

கோவில்பட்டியை சேர்ந்த கண்ணன் என்பவர் அங்குள்ள நாடார் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது இந்த ஆண்டுக்கான வருமான வரி தொகையை செலுத்துவதற்காக பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜான் கணேசனிடம் வழங்கியுள்ளார். ஆனால் அவர் இதனை செலுத்தாமல் போலி ஒப்புகைச் சீட்டு வழங்கியுள்ளார். இது சம்பந்தமாக தூத்துக்குடி குற்றப்பிரிவு போலீஸ் தலைமை ஆசிரியர் மீது நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்

error: Content is protected !!